நாட்டுநடப்பு
798 Posts • 549K views
திரைபாரதி
1K views 11 days ago
பாக் - சவுதி கூட்டணி பரிதாபங்கள்! சேரிடம் அறிந்து சேர். கூடா நட்பு கேடாய் முடியும். இந்தப் பழமொழிகள் இன்றைய சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் பாதுகாப்புக்கான ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்ட சவுதி அரேபியாவிற்கு 'கன' பொருத்தமாக உள்ளது. உலக அரங்கில் தேவையே இல்லாமல் இந்தியாவை எதிர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் விளைநிலம் எனலாம். கத்தார் நாட்டில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், தனது பாதுகாப்புக்கு இனிமேல் அமெரிக்காவை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு சவுதி வந்தது. மேற்கண்ட சூழலில் ஒரு அணு ஆயுத நாடான பாகிஸ்தானுடன் தனது பாதுகாப்பு கருதி சவுதி Strategic Mutual Defence Agreement (SMDA) என்று ஓர் ஒப்பந்தம் போட்டது. அதுதான் அரேபியா செய்த இமாலயத் தவறு. அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்து என்ன? "Under this pact, both countries have pledged that any act of aggression against one will be treated as an act against both." அதாவது இந்த இரண்டு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தாலும் அது இரண்டு நாடுகளுக்கும் எதிரான நடவடிக்கையாகக் கருதப்படும். இது ஒரு வெளிப்படையான இரட்டை நோக்கத்துடன் கூடிய ஏற்பாடாகும். பாகிஸ்தான் இந்தியாவை நினைத்தும் சவுதி இஸ்ரேலை நினைத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், சவுதி ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டுவிட்டது. பாகிஸ்தானுக்கு இருக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போதாது என இன்று அந்த நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடை போர் மூண்டுள்ளது. அந்தோ பரிதாபம்! இப்போது பாகிஸ்தானுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னணியில், இந்தப் போரில் சவுதியின் நிலை என்ன? ஏற்கனவே, மதரீதியாக ஈரானும் சவுதியும் இணக்கமாகச் செயல்படுவது சாத்தியமில்லை என்பது வரலாறு. பாகிஸ்தானுடன் சவுதிக்கு உருவான இந்த நெருக்கம், தனது அணு ஆயுதக் கனவுகள் கலைந்து விட்ட நிலையில் கடுப்பாக இருக்கும் ஈரானுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா? இந்த இரு நாடுகளின் உறவு மேலும் கெடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். சவுதி எப்போதுமே வெகு நிதானமாக முடிவெடுக்கக்கூடிய நாடு. ஆனால் தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக பாகிஸ்தான் சவுதியை சர்வதேச அரசியல் சிக்கலில் வசமாக மாட்டி விட்டது. வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, சவுதி புதுப்புது பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது! முடிவாக, பாக்-சவுதி கூட்டணி என்பது ஒரு பரிதாபமான மூலோபாய தவறாகும். சவுதி அரேபியா, நிலையற்ற தன்மை மற்றும் சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றின் வலையில் சிக்கியுள்ள ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. குறுகிய கால பாதுகாப்பு கவலைகள், நீண்ட கால அபாயங்களைக் கருத்தில் கொள்ளாதபோது இத்தகைய விளைவுகளே ஏற்படும். "கூடா நட்பு"வின் விளைவுகளை அனுபவிப்பதற்கு சவுதி தயாராக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் ஒரு பாதுகாப்புக்கான கருவியாக அமையாமல், ஒரு விரும்பத்தகாத சர்வதேச அரசியல் ஆவணமாக வரலாற்றில் பதிவு செய்யப்படும். திரைபாரதியின் "உயிர்பெற்ற அடையாளம்" திரைக்கதையை படித்துவிட்டீர்களா? https://www.amazon.in/dp/B0CJY129RT #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு #அரசியல் #✍️ கதைகள்
11 likes
24 shares
திரைபாரதி
628 views 13 days ago
மனிதன் முரண்பாடுகளின் மொத்த உருவம் மனித வாழ்க்கை ஒரு பெரிய முரண்பாடாகவே உள்ளது. மனிதர்கள் ஒரே சமயத்தில் தங்களைப் பிரிக்கவும் இணைக்கவும் முயல்கிறார்கள். உலகம் முழுவதும் மக்களைக் இணைப்பது எது என்றால் — அது “பாதைகள்”. மொழி, ஜாதி, இனம், மதம், நாடு ஆகியவை மனிதர்களை இணைப்பதாக தோன்றினாலும், உண்மையில் அவை அவர்களைப் பிரிப்பதில்தான் அதிக பங்காற்றுகின்றன. ஆனால் பாதைகள் மட்டும் அதற்கு மாறாக இருக்கின்றன. ஒரு பாதை உருவாகும் போது அது மக்களை இணைக்கும் பாலமாகிறது. சாலை, கடல், வானம், இன்றைய டெலிபோன் மற்றும் இன்டர்நெட் கூட — எல்லாம் பாதைகளே. அவை மனிதர்களை இணைக்கும் வழிகள். உதாரணமாக, முன்பு ஒரு மொழியானது அரசியலின் அடிப்படையில் வளர்ந்தது. இன்றைய உலகில் ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வது அரசியல்வாதிகள் அல்ல, “கூகுள்” போன்ற நிறுவனங்கள்தான். இன்று தொழில்நுட்பத்தின் காரணமாக ஒரு சிறிய நாட்டின் மொழியும் உலகம் முழுவதும் கேட்கப்படுகிறது. மனித சமூகம் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று நாம் பேசுகிறோம். ஆனால் அதே சமயம், ஜாதி, மதம், இனம் என்ற பெயரில் மனிதர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட தற்காலத்தில் பிரிவினைகளும் அதிகமாகி வருகின்றன. இது ஒரு பெரிய முரண்பாடு. இருப்பினும் இதுவே உண்மை. போஸ்னியா, இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் இனப்பிரிவினை காரணமாக ஏற்பட்ட துயரங்களை இன்னும் மறக்கவில்லை. இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் மதப்பிரிவினையின் விளைவே. காலங்காலமாக பிரிவினைகளுக்கு மனித குலம் அதிகமான விலையை கொடுத்துள்ளது. ஆனால், எவ்வளவு பிரிவுகள் இருந்தாலும், மனிதர்கள் பயணம், கல்வி, இசை, அறிவியல், கலைகள், தகவல் தொடர்பு போன்ற வழிகளில் ஒன்றிணைகிறார்கள். விமானம், ரயில், இணையம் — எல்லாமே மனிதர்களை நெருக்கமாக்கும் பாதைகள். இன்று உலகம் சுருங்கி ஒரு கிராமமாக மாறிவிட்டது. ஒரு நாட்டில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு மதத்தினரும் இனத்தினரும் நட்புடன்தான் பழகுகிறார்கள். ஆனால் அரசியல் என்று வந்தவுடன் வேறுபாடுகள் உருவாகின்றன. அரசியல்வாதிகளே தங்களுடைய சுய இலாபத்திற்காக சமுதாயத்தில் வேற்றுமையை விதைக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளே இதற்கு சான்று. பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் அங்கு வசிக்கிறார்கள். “நாம் அனைவரும் உலகத்தின் குடிமக்கள்” என்ற கொள்கையை அந்த நாடுகள் எடுத்துக் கொண்டதால்தான் அவை முன்னேறின. ஆனால் அங்கேயும் இப்போது சில அரசியல்வாதிகள் இன, மத வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களைப் பிரிக்க முயல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அரசியல் இலாபம் கிடைத்தாலும், நாட்டின் வளர்ச்சி தடைப்படுகிறது. மனித குலத்தின் முன்னேற்றம் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒன்றிணைந்தால்தான் சாத்தியம். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் அறிவியல் போன்றவை எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நன்மைகளைத் தருகின்றன. இந்தப் புதுமைகள், உலகம் ஒரு குடும்பம் என்ற உண்மையை நினைவூட்டுகின்றன. மனிதன் எப்போதும் முரண்பாடுகளால் ஆனவன். ஒருபக்கம் தன்னை உயர்த்த நினைக்கும் போது, மறுபக்கம் தானே உருவாக்கிய சுவர்களுக்குள் தன்னை அடைத்துக்கொள்கிறான். ஒரு வகையில் அந்த முரண்பாடுகளில்தான் மனித குலத்தின் அழகும் அர்த்தமும் இருக்கின்றன. ஆகவே, மனிதனை ஒரே வாக்கியத்தில் வர்ணிக்க வேண்டுமானால் — “மனிதன் முரண்பாடுகளின் மொத்த உருவம்” என்று கூறலாம். "திசைகெட்ட பயணங்கள்" https://www.amazon.in/dp/B0CH12RHGR #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
14 likes
9 shares
திரைபாரதி
7K views 26 days ago
எதற்கும் உருப்படியான பதில் இல்லாத ஏராளமான கேள்விகள்! கரூர் சம்பவத்தைப் பற்றி விலாவாரியாகச் பேசினால் அனேகம் பேருக்கு லில்லங்கம். ஒரே ஒரு தகவல் மட்டும் நெருடலாக உள்ளது. "ஒன்று அல்லது இரண்டு பேரை பலி வாங்கி விஜயின் பெயரைக் கெடுப்பதற்காக போடப்பட்ட சதித்திட்டம் இத்தனை பேரை பலிவாங்கும் என்று யாரும் நினைத்ததில்லை. இதனால், சம்பந்தப்பட்ட மகானுபாவர்கள் 'தீயணைப்பு' வேலையில் தீயாகச் செயல்படுகிறார்கள்" என வலம் வந்துகொண்டிருக்கும் செய்தி உண்மையா? கரூர் சம்பவமானது ஏரானமான கேள்விகளை எழுப்பியுள்ளது. எதற்கும் உருப்படியான பதில் இல்லை. இது காவல் துறையின் கைகள் முறுக்கப்பட்டதால் வந்த விளைவா? இதையெல்லாம் பூசி மெழுகும் வேலைகள்தான் இன்று மும்முரமாக நடைபெறுவதாகவும் தகவல்! மக்களின் எழுச்சி நெருப்புக்கு ஒப்பானது. தீக்குள் விரலை வைத்தால் அதைத் தீண்டும் இன்பம் கிட்டும்தானே? https://www.amazon.in/dp/B0F1MC2LSC #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
30 likes
47 shares
திரைபாரதி
594 views 3 days ago
உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது! லிகித ஜெபம்: எழுதுவது என்பது மனஒருமைப்பாட்டுடன் செய்கிற ஒரு தியானத்திற்கு ஒப்பானதாகும். இது லிகித ஜெபத்தை விட மேலானது. லிகித ஜெபம் என்பது இறைவனின் நாமத்தை, காகிதத்தில் மீண்டும் மீண்டும் எழுதுவதாகும். இது ஒரு தியான முறை. இதில் மனதை ஒருமுகப்படுத்துதல் மூலம் அமைதி கிட்டுகிறது.  65வது நாயன்மார் என்று அன்புடன் அழைக்கப்படும் திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த ஒரு உபதேசத்தில் இதைக் கேட்டதாக நினைவு: லிகித ஜெபத்தில் முதலில் இறைவனுடைய நாமத்தை நினைக்கிறோம், அதை வாயால் கூறிக்கொண்டே எழுதுகிறோம். அதனால் இரட்டைப் பலன் கிடைக்கிறது. நாம் செய்யும் இந்த தியானத்தில் ஒரு லயம் வசப்படுகிறது. நாம் தியானத்தை எப்படி நமக்காகச் செய்கிறோமோ, அப்படியே எழுதுவதையும் செய்யும்போது நமது எண்ணங்கள் சீரடைவதுடன் அதற்கு ஒரு வடிவம் பிறக்கிறது, நமது உணர்வுகளுக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. எழுதும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் நேர்மையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். ஜாக் மா, இலன் மஸ்க், பில்கேட்ஸ் போன்ற தொழிலதிபர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். நேரு, அண்ணா, வாஜ்பாய் போன்ற அரசியல் தலைவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக விளங்கினர். ஒரு நண்பருடைய தந்தை சொன்னது: நான் கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்து டைரி எழுதுகிறேன். நடந்ததை மட்டுமல்லாமல் நினைத்ததையும் சுருக்கமாக எழுதி வருகிறேன். இந்தப் பழக்கமானது நேர்மையான எண்ணங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய உண்மை! எழுதுவதற்கு நாம் ஒரு எழுத்தாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமோ, அதைப் படிப்பதற்கு வாசகர்கள் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இல்லை. எழுதுவது என்பதை ஒரு செயல்முறை என வைத்து அதில் உள்ள படிகளைப் பார்க்கலாம். சிந்தனை: ஒரு எழுத்தாளர் நல்ல விஷயங்களைப் பற்றி எழுவேண்டும் என்றே பொதுவாக நினைப்பதால் அவரது சிந்தனைகள் நேர்வழியில் செல்கின்றன, மனம் விசாலமடைகிறது, பயம் அகல்கிறது. கற்பனை: நாம் நமது சிந்தனைகளை எழுத்தில் வடிக்கவேண்டும் என எண்ணும்போது நமது கற்பனை வளத்தை அதனுடன் கலக்கிறோம். இதனால் நமது கற்பனைத்திறன் மேம்படுகிறது. நேர்த்தி: நமது எண்ணங்களை கோர்வையாக எழுதுவது அடுத்த படி. அதனால் நமது எண்ணங்களில் ஒரு நேர்த்தி உருவாகிறது. கருத்து: நமது எண்ணங்களை எழுத்தில் வடிக்கும்போது நம்மில் ஒரு விஷயத்தைப் பற்றிய திடமான கருத்து உருவாகிறது. செயல்: நாம் எழுதியதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன் மீண்டும் படித்துப் பார்ப்பதால் நமது கருத்து வலுவடைகிறது, அது செயல்களில் வெளிப்படுகிறது. தொழில்முறை எழுத்தாளர்கள் மட்டுமே எழுதவேண்டும் என்பது அவசியமில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். முதலில் நீங்கள் உங்களுக்காக எழுதுகிறீர்கள். உங்களுடைய கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும் இரண்டாம் பட்சம்தான். இன்றைய சமூக ஊடகங்கள் ஏராளமானவர்களுக்கு எழுதுவதற்கான வாசலைத் திறந்து வைத்துள்ளது. பிறரைத் திட்டியோ, சினிமா அல்லது அரசியல் சம்பந்தமாகவோ எழுதும்போது அதற்கு அதிகமான வரவேற்பு இருந்தாலும், அதற்காக எழுதுவதில் பிரயோஜனம் இல்லை. எழுதியதை வெளிப்படுத்தும்போதுதான் உங்களது சிந்தனைகளுக்கு வடிவம் கிடைக்கிறது, உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்கிறது. உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது! நினைவலைகள் ஓய்வதில்லை! எழுதுங்கள்... https://www.amazon.in/dp/B0CR85RDBP உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது! "நினைவலைகள் ஓய்வதில்லை" @ அமேசான் KDP #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
13 likes
15 shares