*ஸ்ரீபாத ஸப்ததி*
புதிய தொடர் பதிவு!
*ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:12*
ஏகம் வாமதயைவ தக்ஷிணதயைவான்யது பதம் தேஹினாம் க்யாதம் முக்திபுராதிவாஸிநி சிவே சித்ரம் த்வயி த்வீதிருசம் ஆனம்ரேஷு ஜனேஷ்வபீஷ்டகரணே பாதாவுபௌ தக்ஷிணா வானம்ரே து க்ருதாகஸி ஸ்மரஹரே வாமாக்ஷி வாமாவுபௌ
முக்திஸ்தலவாஸினியும் மங்களங்களை அருளும் அம்பிகையை! ஸகல ஜனங்களுக்கும் இரண்டு பாதங்கள் உண்டு. ஒன்று வலது (தக்ஷிணம்) மற்றது இடது (வாமம்) என்று எல்லோருக்கும் பிரசித்தி. உன்னுடைய இரு பாதங்களின் விஷயத்திலோ இது ஆச்சரியமாக வேறுபட்டிருக்கிறது.
வாமாக்ஷியே! (அழகிய கண்களை உடையவளே) உன் இரு பாதங்களுமே பக்த ஜனங்கள் நமஸ்கரிக்கும் போது தக்ஷிணர்களாக (கொடை வள்ளல்களாக) இருக்கின்றன. ஆனால் மன்மதனை எரித்த ஸ்ரீபரமேஸ்வரன் (பிரணய கலகத்தின் போது) குற்றம் செய்தவராக உன் ஸ்ரீபாதங்களில் தலை வணங்கும் போது உன் ஸ்ரீபாதங்கள் இரண்டுமே வாமமாக கொடுக்க இஷ்டமில்லாமல் (கோணல் மனங் கொண்டவைகளாக) இருக்கின்றன.
மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம்
12ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼
#🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐