10 வருட மெமரி..
அடுத்தவரிடம் ஆண்குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
#adityaguruji
#jodhidam
#ஆண்குழந்தை
#குழந்தை
#babyboy
#boy
#tamiljothidaradityaguruji
#TamilArticle
🍂ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888🍂
ஒரு சகோதரி.
கேள்வி
அண்ணா... பிறக்கும்போதே அம்மாவை முழுங்கியவள் நான். அக்காக்களோடு வறுமையும் என் கூடப் பிறந்ததுதான், அக்காக்களும் நன்றாக இல்லை. நானும் நன்றாக இல்லை. படிக்கும்போதே எனக்குத் திருமணம் செய்து வைத்து அப்பா கடமையை முடித்து விட்டார். ஒரு பெண்குழந்தை இருக்கிறது. என் கணவர் நல்லவர். அம்பாள் பக்தர். அவருக்கு அம்பாளைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. குழந்தை உருவான பிறகு என் கணவர் என்னைத் தொடவில்லை. சிலமாதங்களாக என் மாமியார் ஆண்குழந்தை பெற்றுக்கொடு என்று என்னை சொல்லமுடியாத வகையில் கொடுமைப்படுத்துகிறார். இல்லாவிட்டால் என்னைத் துரத்திவிட்டு என் கணவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போவதாகப் பயமுறுத்துகிறார். ஏற்கனவே மூத்தஅக்கா வாழாவெட்டியாக என் அப்பாவுடன் இருக்கும் நிலையில் எனக்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் என் அப்பா செத்துப்போவார். நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்று நரகவேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அன்புக்காக ஏங்கி ஏங்கி ஏமாந்துபோன நான் இப்போது என் மனதைப் புரிந்து கொண்ட பக்கத்து வீட்டு காலேஜ் படிக்கும் ஒருவரோடு “பேசிக்” கொண்டிருக்கிறேன். இவரும் என் இனத்துக்காரர்தான். ஜாதகப்படி எனக்கு ஆண்குழந்தை உண்டா? இவர் மூலமாக நான் ஆண்குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? என் வாழ்க்கையில் பிரச்னை வருமா? என் முடிவு சரிதானா?
பதில்
(துலாம்லக்னம் விருச்சிகராசி லக்னத்தில் குரு ராகு, ஐந்தில் சனி, ஒன்பதில் செவ், பத்தில் சூரி, பதினொன்றில் புத, பனிரெண்டில் சுக்)
சில கடிதங்களைப் படிக்கும்போதே கையும் மனதும் நடுங்குகிறது... முத்து முத்தான கையெழுத்தில் பக்கம்பக்கமாக தெளிவாகக் கடிதம் எழுதத் தெரிந்த பெண்கள் வாழ்க்கையில் மட்டும் தெளிவின்றித் தடுமாறுகிறீர்களே ஏன்?
நமது முன்னோர்கள் பூமியை எதற்கு பூமிமாதா என்று பெண்ணோடு ஒப்பிட்டார்கள் தெரியுமா? தன்னை வெட்டிக் காயப்படுத்துபவனையும் பொறுத்துக் கொண்டு நன்மைகளையே நிலம் தருவதைப் போல தன்னைக் கொடுமைப் படுத்துபவரையும் பொறுத்து மன்னித்து அரவணைத்து அன்பு காட்டும் குணம் பெண்ணிற்கு இருப்பதால்தான்.
“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற நம் மகாகவி நீ கேட்கும் இந்தக் கேள்வியைப் படித்தால் மாபாதகம் செய்திருக்க வேண்டும் என்று மாற்றிப் பாடியிருப்பான்.
இருபத்தியிரண்டு வயதேயான நீ பக்கத்து வீட்டு மாணவருடன் “பேசிக்” கொண்டிருக்கிறேன் என்று தலைப்புக்குறி போட்டு எனக்கு விளக்கி அவரும் என் இனத்துக்காரர்தான் என்று நியாயப்படுத்துகிறாய்.
இருபத்தியிரண்டு வயதில் நீ அன்புக்காக ஏங்குவதால் உன் தெருவில் இருக்கும் அத்தனை ஆண்களும் உனக்கு அன்பு காட்டத் தயாராக இருப்பார்கள். அறுபத்தியிரண்டு வயதில் ஏங்கிப் பார். நாலுகால் பிராணி கூட உன்னைச் சீந்தாது.
நடப்பவைகளை நீயாகச் செய்யவில்லை. செவ்வாய் பார்வையைப் பெற்ற நீசச்சுக்கிர தசையும் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுபுக்தியும் உன் கேட்டை நட்சத்திரத்திற்கு நடக்கும் ஜென்மச்சனியும் உன்னைச் செய்ய வைக்கின்றன.
உன் கணவனுக்கு நீ உண்மையாக இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். நான்காமிடத்தைச் செவ்வாய் பார்த்து, நான்கிற்குடையவனை ஆறு பனிரெண்டிற்குடையவர்கள் பார்த்து, ராசிக்கு நான்கில் வக்ரச்சனி அமர்ந்து, மாதாகாரகன் சந்திரனும் நீசமானதால் பிறக்கும்போதே தாயை இழந்த நீ உன் மகளுக்கு ஒரு உண்மையான உதாரணத்தாயாக இருக்க வேண்டாமா?
உன் கேட்டை நட்சத்திரத்திலேயே தற்போது சனி சென்று கொண்டிருப்பதால் வரும் ஜனவரிமாதம் ஆரம்பிக்க இருக்கும் சனிபார்வை பெற்ற கேதுவின் அந்தரத்தில் மிகப்பெரிய தலைகுனிவையும் கேவலத்தையும் சந்திப்பாய். நீசம் பெற்ற லக்னாதிபதி தசையில் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாதே. உடனடியாக அனைத்தையும் நேராக்கிக் கொள். ஐந்தில் சனி அமர்ந்து ராசிக்கு ஐந்துக்குடையவன் விரயம் புகுந்து குருபகவான் பகைபெற்று ராகுவுடன் இணைந்ததால் ஜாதகப்படி உனக்கு ஆண்குழந்தை இல்லை.
அம்மா இல்லாத நீ மரு”மகளா”ய்ப் போனவீட்டில் மாமியாரை உன் அம்மாவாக்கியிருக்க வேண்டாமா? இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. எத்தனை பெரிய கொடுமைக்காரியாக இருந்தாலும் மாமியாரும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணின் பிரச்னைகளை இன்னொரு பெண்தான் தெளிவாகப் புரிந்து கொள்வாள்.
உன்னைத் தொடாத உன் கணவனைப் பற்றி உன் மாமியாரிடம் மென்மையாகச் சொல். இல்லறம் முடித்துத்தான் துறவறம் போகச் சொல்லி நமது மேலான மதம் எடுத்துச் சொல்வதை உன் கணவனுக்குப் புரிய வை. உன்னைப் புறக்கணித்து அந்த அம்பாளை உபாசிப்பதை அந்த அன்னையே ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதை “நச்” சென்று விளக்கு.
வைராக்கியமுள்ள ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உனது ஆக்கசக்தியை நல்லவைகளுக்கு மட்டுமே பயன்படுத்து. ஜாதகப்படி ஆண்குழந்தை இல்லையென்று நான் சொன்னாலும் அந்த அம்பாள் நினைத்தால் ஒன்றுக்கு இரண்டாக உன் கணவன் மூலமாக ஆண் மக்களை அருள்வாள். அவளை நினை. அவளைத் துதி. அவளிடம் வேண்டு. அனைத்தும் கிடைக்கும்.
(17.5.2016 மாலைமலரில் வெளிவந்த குருஜியின் பதில்)
🍂அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +918286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.🍂
#🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠