Arunachalam
2.6K views
1 days ago
#சனாதனத்தை_ஒழிக்க_வேண்டும்_என்று_உதயநிதி_ஸ்டாலின்_பேசியதில்_என்ன_தவறு? இன்று, தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவராகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார். " ஐயையோ, ஐயையோ, கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டார், ஐயையோ ஐயையோ " என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுகிறார் நயினார் நாகேந்திரன் போதாததற்கு, இந்து முன்னணி உள்ளிட்ட பார்ப்பன மற்றும் பார்ப்பன பாதம் தாங்கி வகையறாக்கள் சனாதன தர்மத்தை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டார் என்று குதியாய் குதிக்கிறார்கள்! இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் வகையறாக்களே! உங்கள் சனாதன தர்மம் எங்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவு செய்கிறதா, இல்லையா? உங்கள் சனாதன தர்மப்படி, உங்கள் சாஸ்திரங்கள்படி, நாங்கள் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறோமா இல்லையா? கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார் உதயநிதி ஸ்டாலின் என்று பேசுகிறீர்களே, எந்த இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார் ? பார்ப்பனர்கள் தான் பரிதவிக்கிறார்கள், "தங்களுடைய சமூக மேலாதிக்கம் தகர்ந்து போகுமோ " என்று. சூத்திரப்பட்டமும் பஞ்சமர் பட்டமும் போக வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். எங்களைப் போன்ற பெரும்பாலோரை, பல கோடி மக்களை, சூத்திரர்கள் என்று இன்று வரை உங்கள் சாஸ்திரங்கள்படி, சட்டபூர்வமாக நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை, அப்படி அழைப்பதை , இனியாவது "சட்டவிரோதமானது " என்று விதிமுறை செய்ய, இந்து முன்னணி வகையறாக்கள் கோர வேண்டும். தயாரா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் கூட சூத்திரர் என்ற வருணப் பிரிவு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டும் என்பதையாவது இந்து முன்னணி கூற வேண்டும். இதற்கு பதில் உண்டா? நீங்கள் எங்கள் மீது திணித்த சூத்திரப்பட்டதை நாங்கள் தூக்கி சுமக்கத்தான் வேண்டும் என்றால், அதை ஒருக்காலும் ஏற்க முடியாது. எங்களை "உங்கள் சனாதனம்" சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் இதற்குமேலும் அழைக்கும் என்றால், உங்கள் சனாதனத்தை ஒழித்தே தீருவோம்! -- Perasiriyar Jayaraman பேராசிரியர் செயராமன் நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் 12.05.2026 #👨மோடி அரசாங்கம்