D Muthu Prakash, Kanchipuram 💐
643 views
4 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= விஞ்சையருளல் தொடர்ச்சி ============================ மகனே நானுனது மனதுட் குடியிருந்து சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே . விளக்கம் ========= மகனே, சிவபொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன். . . அகிலம் ======= துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன் நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே . விளக்கம் ========= எனது துல்லியத் தன்மையையும், சூட்சமத்தையும் வெளியே காட்ட மாட்டேன். நீ என் ஒரே நினைவில் நின்று செயல்படு. . . அகிலம் ======= பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார் சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே . விளக்கம் ========= மகனே, நீசர்கள் உன்னை நோக்கி, இவன் பேயன், பைத்தியக்காரன், என்று கூறி உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிதுகூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள். எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன். . . அகிலம் ======= வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே . விளக்கம் ========= நான் பெரியவன் என்னும் ஆணவ வார்த்தைகளைப் பேசாதே. எதிரி செய்ததைப் போன்று பழிக்குப் பழியாக எதையும் செய்ய நினைக்காதே. எல்லாரிடமும் ஏழையைப் போன்று வாழ்ந்து வா. . . அகிலம் ======= ஆழ மனதுடைய அதிகமக னேவுனது விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம் . விளக்கம் ========= மிகவும் ஆழமான உயர்ந்த மனதுடைய அருமை பொருந்திய மகனே, என் கண்மணியே, உன் உயர் நிலை அறியாமல் எதிர்க்கும் வம்பர்கள் எல்லாரும் வீணாக அழிந்து விடுவர். . . அகிலம் ======= மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும் கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு . விளக்கம் ========= எல்லா மதங்களையும் எனக்குள் அடக்கலாக்கிக் காட்டு என் மகனே. அன்பு மகனே, தரணமணி, முத்திரி ஆகியவற்றை என் பரிசாக உனக்குத் தந்து விட்டேன். அவற்றை உனது கந்தைத் துணியினுள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்வாயாக. . . அகிலம் ======= மகனே வுனது மனறியக் காட்டினதை அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே . விளக்கம் ========= மகனே, உனது மனம் மட்டும் தெளிவாக அறியும்படி நான் காட்டிய இரகசியத்தை உன் அகத்திலேயே நினைந்து அகம் மகிழ்ந்திரு. . . தொடரும்… அய்யா உண்டு.