திருநீற்றுச் சுவடு
653 views
27 days ago
கிருஷ்ணரின் இதயம் இன்று எங்கு இருக்கிறது தெரியுமா? மகாபாரதப் போருக்குப் பிறகு யாதவ குலம் அழிந்து, கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்தார். அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டபோது, முழுவதும் சாம்பலானாலும், அவரது இதயம் மட்டும் எரியாமல் துடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இதயத்தை ஒரு மரக்கட்டையில் வைத்து கடலில் விட, அது ஒரிசாவின் பூரி கடற்கரையை அடைந்தது. அங்கிருந்த மன்னன் அதை பிரம்ம பதார்த்தம் எனக் கருதி ஜெகந்நாதர் சிலையின் உள்ளே பிரதிஷ்டை செய்தான். இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலைகள் மாற்றப்படும் போது, அந்தப் பொருள் பழைய சிலையிலிருந்து புதிய சிலைக்கு இரகசியமாக மாற்றப்படுகிறது. அப்போது நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, அர்ச்சகர் கண்களை கட்டிக்கொண்டு, கைகளில் உறையணிந்து அதை மாற்றுவார். அதை நேரில் பார்த்தால் உயிர் பிரியும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #💥ஓம் ந ம சி வா ய💥 ###motivationalquotes