#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, "பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்" என்ற வாக்குறுதியை மக்கள் நீதி மய்யம் முன்வைத்தது.
தற்போது அதே நிலைப்பாட்டை எடுத்து, அத்தகைய இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் நீதி மய்யம் மனதார வரவேற்கிறது.
அதே வேளையில், மது அரக்கனால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் மற்றும் மனநலனை மீட்டெடுக்க, தமிழக அரசு மாநிலம் முழுவதும் நவீன மறுவாழ்வு மையங்களை (Rehabilitation Centers) போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
@ikamalhaasan @maiamofficial
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#Tasmac
#MNMManifesto