D Muthu Prakash, Kanchipuram 💐
1.2K views
3 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன் தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார் நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார் . விளக்கம் ========= திருமால் கயிலை மலையைக் கடந்து, திருச்செந்தூர்க் கடலில் இலட்சுமிதேவியைத் தேடிக் காண வேண்டி, நல்ல ஈசர், சக்திதேவி ஆகியவர்களோடு கூடி, அமைதியாகக் கொலு ஆரவாரத்தோடு விரைவாக நடந்தார். . இப்படித் திருமால் நடந்து வருகின்றபோது அந்தணர்கள் எல்லாரும் நான்கு திசைகளிலிருந்தும் அவரை வாழ்த்திப் போற்றி நின்றனர். திருமால் திருச்செந்தூர்க் கடற்கரை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். . . அகிலம் ======== கந்தன் எதிர் கொண்டு அழைத்தல். =================================== வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும் களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின் அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன் கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி . விளக்கம் ========= இவ்வாறு திருச்செந்தூர் நோக்கி வழி நடந்து வந்த மாயவரையும், ஈசுரரையும், மகிழ்வோடு வரும் சக்திதேவியையும், திருச்செந்தூர்க் கடல் ஓரத்திலிருந்து ஒரு காதம் வழிக்கு முன்னால் அவர்கள் வரும்போதே கந்தன் கண்டு கொண்டான். தன்னுடைய அங்கங்கள் பதறக் கலங்கினான். . . அகிலம் ======== ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும் வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல் என்னவித மாமோ என்று மனம்பதறி மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு . விளக்கம் ========= ஆறுமுகன் தனது விரைவான மயில் வாகனத்தில் ஏறாமலும், தேவர்கள் தமது வெற்றியையுடைய இரதத்தில் ஏறாமலும் மனம் கலங்கினர். இவர்களைக் கண்ட செந்தூர் இறைவன் ஆறுமுகன் பதறி என்ன நடக்கப்போகிறேதோ என மனம் குலைந்து மயக்கமுற்று அவர்களை நோக்கி வந்தான். . தன் மாமனாகிய திருமாலையும், தனது மாதா பிதாவையும், எல்லாரும் மகிழும்படியாகத் தாழ்மையுடன் வணங்கினான். . . அகிலம் ======== இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன் காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச் . விளக்கம் ========= இங்கே காணுகின்ற மும்மூர்த்திகளையும் யான் எப்பொழுது காண்பேன் என்று எத்தனை காலம் அடியேனாகிய நான் காத்திருந்தேன். அவ்வாறு நான் காத்திருந்த நாள்களை எண்ணி முடிக்க முடியாது. உங்கள் வருகையைப் பார்த்திருந்த கண்களின் பாவம் இன்று தொலைந்தது என்று பலவாறாகக் கூறிக் கொண்டு முருகன் தமது பக்கத்தில் வந்தடைந்த ஈசரையும், கன்று கூட்டங்களை மேய்த்த திருமாலையும், தாய் சக்திதேவியையும் கட்டித் தழுவி மனம் மகிழ்ந்தான். . . தொடரும்… அய்யா உண்டு.