ரவிசங்கர் ராஜா, ஆரணி
620 views
21 hours ago
AI indicator
#நாம்_அனைவரும்_பிணம்_சுமப்பவர்களே: ============================== 💜ஒரு நாள் காலை சுடுகாட்டிற்கு பிணம் சுமந்து சென்று திரும்பிய இரண்டு ஏழை பிராமணர்கள் பகவானது ஹாலில் நுழைந்தனர். 💜அப்பொழுது தான் மயானத்தில் தங்கள் வேலையை முடித்திருந்தனர். 💜இருவருக்கும் பசி குடலை பிடுங்கியது. 💜வழியில் ஆச்ரமத்தைக் கண்டவுடன் அங்குச் சாப்பிட்டுச் செல்லலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது. 💜ஆனால் ஒருவன் குளித்து விட்டு சாப்பிடுவது தான் நியாயம் என்றும், மற்றொருவன் பசி அதிகமாய் இருப்பதால் குளிக்கலாமலேயே சாப்பிட்டலாம் என்றும் விவாதித்தனர். 💜இவ்வாறு விவாதித்துக் கொண்டே உள்ளே நுழைந்த அவர்கள் நேரே பகவானிடம் சென்று தீர்ப்பு கேட்டனர். 💜ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு" ஸ்வாமி! நான் சாஸ்திரப் பிரகாரம் குளித்து விட்டு தான் சாப்பிட வேண்டும் என்கிறேன்! 💜இது நியாயம் இல்லையா? 💜இதுதானே முறையும் கூட" என்றான். 💜பகவான் மெல்லிய குரலில் 💜"நியாயம் இல்லையென்று யார் சொன்னார்கள்? 💜நியாயம் தான்!" என்றார். 💜அடுத்தவன் ஆத்திரத்தோடு 💜"ஸ்வாமி! பசி குடலைப் பிடுங்கி தின்கிறது. 💜பசித்தால் சாப்பிடுவது தவறா? என்றான். 💜அதைக்கேட்ட பகவான் 💜"தப்பென்று யார் சொன்னார்கள்? 💜பசித்தால் சாப்பிடலாமே!" என்றார். 💜இருவரும் திகைத்தனர். 💜ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒரே குரலில் 💜"அப்படியானால் யார் சொல்வது தவறு? என்று கேட்டுக்கொண்டனர். 💜அப்பொழுது பகவான் 💜"நீங்கள் இருவர் மட்டும் தான் பிணம் சுமப்பவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! 💜அனைவரும் இந்த உடலாகிய பிணத்தைச் சுமப்பவர்தாம்! 💜சைதன்யமற்ற பிணமாகிய இந்த உடலை 'நான்' 'நான்' என்று சுமந்து திரிகிறார்கள். 💜தேகாத்மா புத்தியுடைய எல்லோரும் பிணம் சுமப்பவர்களே! 💜இந்த புத்தி நீங்காதவரை பிணத்தைத் தீண்டிய தீட்டு நம்மை விடாது. 💜இந்தத் தீட்டை எந்தக் குளத்தில் குளித்தாலும் போக்கிக் கொள்ள முடியாது. 💜ஆத்ம தீர்த்தத்தில் மூழ்குவது ஒன்றே இந்தத் தீட்டையும் அதைப் பற்றிய எண்ணத்தையும் அகற்ற வல்லது" என்றார் பகவான். 💜ஏழை பிராமணர் இருவர் முகமும் பேய் அறைந்தாற் போல் ஆயிற்று. 💜அவர்களின் வாதத்திற்கு மறுமொழி இல்லாத விடை கிடைத்து தீர்ப்பும் அளிக்கப்பட்டது. 💜அவர்கள் மட்டுமல்ல. 💜நாம் அனைவரும் தீட்டினால் பீடிக்கப்பட்டுள்ளோம். 💜தேகமே நாளொன்று பாவிக்கும் யாவரும் பிணம் சுமப்பதின் உண்மையை உணரவில்லை. 💜ஈனத்தொழில் எனக்கூறி இதுநாள் வரை அவர்களைப் பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கியதோடு, தேகாத்மா பாவத்தை நீக்க வேண்டும் என்ற போதனையை அவர்கள் இருவருக்கும் மட்டுமின்றி நம் அனைவர் உள்ளத்திலும் ஆழப்பதியுமாறு பகவான் கருணையோடு மேற்கொண்ட உபதேசத்தை அருளினார். 💜பகவானுடைய திருஷ்டியில் அனைவரும் சமமே என்பதற்கு இது ஒரு சான்று. 💜அடுத்த நிமிடங்களில் அவ்விருவரும் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. 💜சாப்பிட்டு தான் போனார்களா! 💜சாப்பிடாமலே போனார்களா! 💜என்பதும் தெரியாது. 💜பகவானது அரிய உபதேசம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறதல்லவா! 💜பகவானது தரிசன மாத்திரத்தால் அகம் தூய்மையடைகிறது. 💜ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு ஆத்ம போதத்தை தூண்டுவதாக அமைகிறது. ௐ_நமோ_பகவதே_ஶ்ரீரமணாய. *ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்