#நாம்_அனைவரும்_பிணம்_சுமப்பவர்களே:
==============================
💜ஒரு நாள் காலை சுடுகாட்டிற்கு பிணம் சுமந்து சென்று திரும்பிய இரண்டு ஏழை பிராமணர்கள் பகவானது ஹாலில் நுழைந்தனர்.
💜அப்பொழுது தான் மயானத்தில் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
💜இருவருக்கும் பசி குடலை பிடுங்கியது.
💜வழியில் ஆச்ரமத்தைக் கண்டவுடன் அங்குச் சாப்பிட்டுச் செல்லலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது.
💜ஆனால் ஒருவன் குளித்து விட்டு சாப்பிடுவது தான் நியாயம் என்றும்,
மற்றொருவன் பசி அதிகமாய் இருப்பதால் குளிக்கலாமலேயே சாப்பிட்டலாம் என்றும் விவாதித்தனர்.
💜இவ்வாறு விவாதித்துக் கொண்டே உள்ளே நுழைந்த அவர்கள் நேரே பகவானிடம் சென்று தீர்ப்பு கேட்டனர்.
💜ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு" ஸ்வாமி! நான் சாஸ்திரப் பிரகாரம் குளித்து விட்டு தான் சாப்பிட வேண்டும் என்கிறேன்!
💜இது நியாயம் இல்லையா?
💜இதுதானே முறையும் கூட" என்றான்.
💜பகவான் மெல்லிய குரலில்
💜"நியாயம் இல்லையென்று யார் சொன்னார்கள்?
💜நியாயம் தான்!" என்றார்.
💜அடுத்தவன் ஆத்திரத்தோடு
💜"ஸ்வாமி! பசி குடலைப் பிடுங்கி தின்கிறது.
💜பசித்தால் சாப்பிடுவது தவறா? என்றான்.
💜அதைக்கேட்ட பகவான்
💜"தப்பென்று யார் சொன்னார்கள்?
💜பசித்தால் சாப்பிடலாமே!" என்றார்.
💜இருவரும் திகைத்தனர்.
💜ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒரே குரலில்
💜"அப்படியானால் யார் சொல்வது தவறு? என்று கேட்டுக்கொண்டனர்.
💜அப்பொழுது பகவான்
💜"நீங்கள் இருவர் மட்டும் தான் பிணம் சுமப்பவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்!
💜அனைவரும் இந்த உடலாகிய பிணத்தைச் சுமப்பவர்தாம்!
💜சைதன்யமற்ற பிணமாகிய இந்த உடலை 'நான்' 'நான்' என்று சுமந்து திரிகிறார்கள்.
💜தேகாத்மா புத்தியுடைய எல்லோரும் பிணம் சுமப்பவர்களே!
💜இந்த புத்தி நீங்காதவரை பிணத்தைத் தீண்டிய தீட்டு நம்மை விடாது.
💜இந்தத் தீட்டை எந்தக் குளத்தில் குளித்தாலும் போக்கிக் கொள்ள முடியாது.
💜ஆத்ம தீர்த்தத்தில் மூழ்குவது ஒன்றே இந்தத் தீட்டையும் அதைப் பற்றிய எண்ணத்தையும் அகற்ற வல்லது" என்றார் பகவான்.
💜ஏழை பிராமணர் இருவர் முகமும் பேய் அறைந்தாற் போல் ஆயிற்று.
💜அவர்களின் வாதத்திற்கு மறுமொழி இல்லாத விடை கிடைத்து தீர்ப்பும் அளிக்கப்பட்டது.
💜அவர்கள் மட்டுமல்ல.
💜நாம் அனைவரும் தீட்டினால் பீடிக்கப்பட்டுள்ளோம்.
💜தேகமே நாளொன்று பாவிக்கும் யாவரும் பிணம் சுமப்பதின் உண்மையை உணரவில்லை.
💜ஈனத்தொழில் எனக்கூறி இதுநாள் வரை அவர்களைப் பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கியதோடு, தேகாத்மா பாவத்தை நீக்க வேண்டும் என்ற போதனையை அவர்கள் இருவருக்கும் மட்டுமின்றி நம் அனைவர் உள்ளத்திலும் ஆழப்பதியுமாறு பகவான் கருணையோடு மேற்கொண்ட உபதேசத்தை அருளினார்.
💜பகவானுடைய திருஷ்டியில் அனைவரும் சமமே என்பதற்கு இது ஒரு சான்று.
💜அடுத்த நிமிடங்களில் அவ்விருவரும் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.
💜சாப்பிட்டு தான் போனார்களா!
💜சாப்பிடாமலே போனார்களா!
💜என்பதும் தெரியாது.
💜பகவானது அரிய உபதேசம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறதல்லவா!
💜பகவானது தரிசன மாத்திரத்தால்
அகம் தூய்மையடைகிறது.
💜ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு ஆத்ம போதத்தை தூண்டுவதாக அமைகிறது.
ௐ_நமோ_பகவதே_ஶ்ரீரமணாய.
*ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #தெய்வீக சிந்தனைகள்



