ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 1 months ago •
சிவமணியம்
கேள்வி: தூக்கத்துலே நான் சூட்சும வடிவத்துல இருக்கேன்.
பகவான்: காரணம் எப்படியோ காரியம் அப்படி...
விதை எப்படியோ மரம் அப்படி....
முழுமரமும் விதையிலே இருக்கு.
விரிஞ்சு படர்ந்த மரத்துக்கு ஒரு ஆதாரம் இருக்கணுமே...
அந்த மாதிரி மாயை இருக்கும்.
உண்மையிலே மரமும் இல்லை: விதையும் இல்லை;
இருக்கறது மட்டுந்தான் இருக்கு.
கேள்வி: வாசனாட்சயம், மனோநாசம், ஆத்ம சாட்சாத்காரம் மூணும் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்த மாதிரிதானா?
பகவான்: மூணுக்கும் ஒரே
அர்த்தம்தான். ஒருத்தனோட
பக்குவத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். வைராக்கியமும்,
ஞானமும் ஒண்ணுதான். அப்பியாசமும், வைராக்கியமும் ஒண்ணுதான்.
ஏன் அப்யாசம்ன்னு சொல்றா?
ஏன்னா மனம் ஒடுங்கி மறுபடியும் எழுந்துடறது.
கேள்வி: எப்போ எனக்கு வாசனைகள் ஏற்பட ஆரம்பிச்சுச்சுன்னே தெரியலை... ஆனா இந்த வாசனைகள் தவறு பண்ண வைக்குது. ஞானமில்லாம வாசனை அழியாது. ஆனா ஞானம் ரொம்பக் கஷ்டமாயிருக்கு. அனுபவிச்சுத்தான் கர்மம் எல்லாம் தீர்க்கணும்ன்னா... எவ்வளவு அனுபவிக்கறது... ! என்ன ஆவேனோ... ! எல்லாம் ரொம்பக் கஷ்டமாயிருக்கு... என்னாலே முடியலை... சாதுக்கள் சகவாசம்தான் இந்த நோய்க்கு ஒரே மருந்தாயிருக்கும்...!
பகவான்: என்ன செய்ய முடியும்....?
உண்மை ஒண்ணுதான்.
அதை எப்படி உணர்றது ?
ஆத்மஞானம்கறது கட்டுக்கதை. பொய். அப்பியாசம் வேணுங்கற மாதிரித் தெரியறது.
அப்போ...ஆத்ம ஞானமடைய
யாரு அப்பியாசம் பண்றது?
யார் பண்றதுன்னு பாத்தா... தியானமும் தியான
சாதனங்களும் (Tools) மறைஞ்சுடும்.
ஆத்மஞானம் இங்கேயே இப்போவே இல்லேன்னா... அது புதுசா வந்ததுன்னா.... ஒரு பிரயோஜனமும் இல்லே.
எது சத்யமோ அது எப்பவும் இருக்கணும். புதுசா இனிமேல் அடைய போறது எப்படி சத்தியமாவும் நிலையாவும் இருக்கும்?
இங்கேயே.... இப்போவே... இருக்கு பாரு!
ரிஷிகள் முன்னாடியும் இப்படித்தான் உள்ள பொருளை தேடி அப்பியாசம் பண்ணா. இப்பவும் அதையேதான் பண்றா.
அஞ்ஞானத்தாலே மறைபட்டு வெளிப்படறதனால... புதுசா கிடைச்ச மாதிரி தெரியறது. ஆத்மஞானமடையறோம்ன்னு
சொல்றோம். ஆனா அது புதுசு இல்லே.
கேள்வி: எந்த யுக்தியும் இல்லாம, சாஸ்திர வார்த்தைகள் இல்லாம, எனக்கு ஆத்ம சுகத்துக்கு வழி சொல்லுங்க. அதுவே எனக்கு குருவருள்.
பகவான்: உனக்கு என்ன வேணும்ன்னு முதல்லே தெளிவாகு!
யார் எதை அடையறது?
யார் என்னத்தைத் தேடறது?
அப்புறம் வழி கேளு!
கேள்வி: இறைபக்தி, குரு அனுக்கிரகம், தியானம் இந்த மூணுல எது எல்லா வழியையும் விட பலிதத்துல சிறந்தது?
பகவான்: ஒண்ணு மத்ததோட விளைவு. ஒண்ணு அடுத்ததுக்கு
கூட்டிக்கொண்டு போகும்.
இது மூணும் ஒரே பொருள்தான்.
கடவுள், குரு, ஆத்மா வேற வேற இல்லே.
மூணும் ஒண்ணுதான். எது
சிறந்ததுங்கற கேள்விக்கே
இடமில்லே.
கேள்வி: பெரிய மகான் ஒருத்தர் எங்களுக்குக் குருவாயிருந்தார். அவர் ஹரி நாம ஜபத்தையே எங்களுக்கு உபதேசம் பண்ணினார். அதிலேயே எல்லாம் வந்துடும்... தியானத்துக்கோ, வேற எதுக்கோ, முயற்சி தேவையில்லை.... ஏகாக்கிரம், எப்பவும் ஹரிநாமம் இருந்தா வந்துடும்ன்னார். நாங்களும் அதையே சிரத்தையா செஞ்சுகொண்டு வந்தோம். அவர் விதேகமானார். மாலுமி இல்லாத கப்பல் மாதிரி ஆகிட்டோம். எங்க கலக்கம் கரையேறுவோமா... மாட்டோமாங்கற வேதனை. இப்படி இருக்கும்போதுதான்... உங்களைப்பத்தி கேள்விப்பட்டோம். இரண்டு வருஷ ஏக்கத்துக்கு பிறகு இப்போதான் பலிச்சது. இங்கே வந்த பிறகு நீங்க போதிக்கறது ஆத்ம விசாரம், ஞானமார்க்கம்ன்னு தெரியுது.
ஆனா எங்க குரு எங்களுக்கு பக்தி மார்க்கத்தையே போதிச்சார். நாங்க என்ன பண்றது? அதை விட்டுடறதா? விட்டுட்டு புதுவழியிலே போறதா?
இப்போ வழியை மாத்தினா.... நாளைக்கு இன்னொரு குருவைப் பாக்கறப்ப வேற வேற வழிகளுக்கு மாறிக் கொண்டே இருக்கறதா? இப்படி மாறிக்கொண்டே இருந்தா முன்னேற்றம் இருக்குமா? எங்க சந்தேகத்தைத் தீர்த்து ஆசீர்வாதம் பண்ணணும்.
பகவான் 'விஷன்' பத்திரிக்கையிலே வந்திருந்த ஒரு கட்டுரையை அவருக்குக் கொடுக்கச் சொன்னார். அந்தக் கட்டுரை அவருக்குப் பரிபூரண திருப்தியை அளித்தது. அந்தக் கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.
ஸ்ரீ நாமதேவர் அருளிய நாம மகிமை.
நாமமே இந்தப் பிரபஞ்சம் முழுதும் வியாபித்து உள்ளது. அனைத்தினும் சாரமான நாமத்தை உணராத அறிவிலிகள் பிறப்புச்சுழலில் இருந்து விடுபடுவதில்லை. நாமமே அழியாதது. ரூபங்கள் வேறு வேறாயினும் அனைத்தின் நாமமும் ஒன்றே.
நாமமே ரூபம். ரூபமே நாமம். இவை இரண்டிற்கும் பேதம் இல்லை. இறைவனே நாமரூபத்தோடு வெளிப்படறான். அதனாலேயே வேதங்கள் நாமத்தையே சிறப்புச் செய்யறது. நாமத்தை விட சிறந்த மந்திரம் இல்லை. இதை அறியாதவர்கள் அறிவிலிகள்.
நாமமே இறைவன். இது
அவனுடைய அந்தரங்க பக்தர்களுக்கே தெரியும். நான் என்பது எது என்று தன்னை உணர்ந்தவர்க்கே எங்கும் நிறைந்த நாமத்தை உணர முடியும். நான் என்பது எது என்று தெரியாதவர்களுக்கு, எங்கும் நிறைந்த நாமம் தெரியாது. தன்னை உணர்ந்தால், எங்கும் நிறைந்த நாமத்தை உணரலாம்.
தியானத்தாலோ, சாஸ்திர ஞானத்தாலோ, பிற இயம
நியமங்களாலோ எங்கும் நிறைந்த நாமத்தை உணர முடியாது. உன்னை முதலில் ஒரு குருவிடம் முழுமையாக சரணம் செய்து, ஒப்படைத்து, அவரிடம் இருந்து, உன்னிடம் இருக்கும் 'நான்' என்பது எது என்று தெரிந்து கொள். நான் என்பது எங்கிருந்து வருகிறதோ, அந்த மூலத்திலே உன் தனித்தன்மையை கரைத்து விடு. அதுவே துவிதமற்ற, என்றும் உள்ள பொருள். அதுவே மூவுலகும் நிறைந்த நாமம்.
துவிதமற்ற அந்த வஸ்துவே பரமாத்மா. அதுவே நாமம்.
பக்கம் 436 - 439.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
12 likes
10 shares