ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 1 months ago AI indicator
சாதனை சாரம் 123. நானா ரெனநாடும் ஞானநெறி யேமெய்யன் பானா மிறைக்கியற்றும் பக்தியுமாம் - ஆன வழியு(ம்) முடிவுமிவ் வாறிரண்டு மொன்றாச் செழித லறிந்துநீ செய். ஆகவே 'நான் யார்?' என்று தன்னை நாடும் ஞான மார்க்கமே இறைவனுக்கு நாம் செய்யும் மெய்யன்பாகிய பக்தி மார்க்கமு மாகும். இவ்விதம் முடிவு நிலையில் மட்டுமன்றி பயிற்சி செய்யும் முறையிலும் (வழியிலும்) ஆன்ம விசாரமும் ஆன்ம சமர்ப்பணமும் ஒன்றாகவே விளங்குவதை யறிந்து நீ தன்னாட்டப் பயிற்சியைச் செய்வாயாக. அப்பனேஅருணாசலம் 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
4 likes
9 shares

More like this