ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 1 months ago AI indicator
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய. சாட்விக்: அகந்தையினும் ஆத்மா வேறென்பதெப்படி? பகவான்: தூக்கத்தில் நாம் எப்படியிருக்கிறோம்? சாட்விக்: எப்படியோ, தெரியவில்லை. பகவான்: தெரியவில்லை யென்பது யார்? விழிப்புற்ற அகந்தையே. தூக்கத்தில் நாம் இல்லையென்று யாராவது சொல்லக்கூடுமா? சாட்விக் : ஆம். நான் தூக்கத்தில் இருந்தேன். இப்போது விழிப்பிலும் இருக்கிறேன்; ஆயினும் தூக்கத்தில் எப்படியிருந்தேனென்று தெரியவில்லை. பகவான்: அதேதான். இப்பொழுது, விழித்துக் கொண்டவனே தூக்கத்தில் ஒன்றும் தெரியவில்லையென்று சொல்கிறான். இப்பொழுது விஷயங்களைக் காண்கிறான், காண்பவனாம் தான் இருப்பதாகக் கருதுகிறான்; தூக்கத்திலோ, இவ்விஷயங்களும் அவற்றைக் காண்பவனும் இல்லை. இப்பொழுது இருப்பவன் தூக்கத்தில் இல்லாது போய்விட்டானா? இவ்விரு நிலைமை களுக்கும் உள்ள பேதம் என்ன? விழிப்பில், விவயங்களும் இந்திரிய மனோ வியாபாரங்களும் உள; தூக்கத்தில் அவை இல்லை. தூக்கத்தின்போது இல்லாத ஒரு அகந்தை இப்போது கிளம்பியிருக்கிறது. அதுவே இந்திரியங்கள் வாயிலாய் விஷயங்களைக் காண்பதும், உடலைத் தானெனக் கருதுவதுமாயிருக்கிறது. இவ்வகத்தையையே தானென் றெண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது நாமல்ல. தூக்கத்தில் வடிவற்றிருந்த ஆத்மா இப்போதும் இருக்கிறது. அதில் ஒரு மாறுதலுமில்லை. இடையில் வந்த இவ்வகந்தையே உண்மையைத் திரித்துக் குழப்புகிறது. இவ்வாறு, தோன்றுவதும், மறைவதுமாயிருக்கும் அகந்தை நாமல்ல; தோற்றமும் மறைவுமின்றித் தூக்கத்திலும் விழிப்பிலும் மாறுதலின்றித் தொடர்ந்திருக்கும் ஆத்மஸ்வரூபமே நாம். பகவத் வசனாம்ருதம் (ஜனவரி 23, 1936) 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
19 likes
17 shares

More like this