D Muthu Prakash, Kanchipuram 💐
653 views
3 days ago
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== பதினே ழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு விதியா னபடியால் மெல்லியர்மே லிச்சைகொண்டு கூடிக் குணமாய்க் கொண்டவனை யுமகற்றித் தேடி யிவரோடு செய்யரச மாயிருந்தாள் வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல் நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார் மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள் அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார் . விளக்கம் ========= அவர் தமது பதினேழாவது வயதில், முந்தைய பிறவியில் தமக்காக அமைக்கப்பட்ட பெண்ணோடு வாழ வதியானபடியால் அவளைக் கூடி மனத்துக்கு உகந்தவாறு வாழ இச்சை கொண்டார். அந்த பெண்ணும் தன் கணவனை அகற்றிவிட்டு இவரை தேடி அடைந்து அவரோடு மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ ஆசை கொண்டாள். எனவே, அவர்கள் இருவரும் மேலோகத்தில் அமைந்திருக்கும் பரமேஸ்வரனால் மேலும், திருமாலின் பேலும், நாம் இருவரும் எந்தவித நாணமுமின்றிக் கணவனும் மனைவியும் போல் இன்பமாக வாழ்ந்து வருவோம் என்று ஆணையிட்டு அதன்படி வாழ்ந்தனர். பெண்ணைக் காணாவிட்டால் இவரும், இவரைக் காணாவிட்டால் அப்பெண்ணும் தவிப்பர். அவர் இல்லாத அந்த ஊரை அயலூராக நினைத்து அங்குத் தங்க முடியாது அவள் துன்பமுறுவாள். . . அகிலம் ======== இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார் முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார் மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே . விளக்கம் ========= இப்படியாக அவர்கள் வளர்ந்து வருகின்ற சமயத்தில் எந்த மனிதர் இவளை மனைவியாக இவருக்கு அமைத்தார்? அந்த சக்தி எது என்று மக்கள் வியந்தனர். கடவுள் அருளினால் முன்பு அமைக்கப்பட்ட ஊழ் விதிதான் இவ்வாறு அமைத்தது என்றும் முன் பிறவியில் அமைந்த விதி போன்று இவளை அடைந்தது மட்டுமின்றி முற்பிறவி தோசம் எல்லாம் நீங்குவதற்கு அவர்களுடைய நல்ல பேறு இதுவாகும் என்றும் மக்கள் எல்லாரும் தமக்குள் கூறிக் கொண்டனர். இவ்வாறு ஈரேழு பதினான்கு உலகங்களும் அறியும்படியாக அவர் அந்தப் பெண்ணோடு வாழ்ந்து வந்தார். . . அகிலம் ======== உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால் ஆர்க்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார் நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார் . விளக்கம் ========= அச்சமயம் அவருக்கு வயது இருபத்திரண்டு முடிந்தது. அவ்வயதில் பகைமை பொருந்திய நீசன் ஒருவனின் பாவத்தை ஏற்ற காரணத்தால் பலமிழந்து அமர்ந்திருந்தார். அவர் உடம்பில் நோய் பற்றிக் கொண்டது என எல்லாரும் நினைத்தனர். யாரும் வெல்ல முடியாத அந்த நோயின் வீரிய சக்தியை அவர் அடக்கி வாழ்ந்தார். இருப்பினும் அவர் தம் உடம்பெல்லாம் மிகுந்த நோவு உருவாகி இரக்கிறது என்று மிகவும் வேதனையுற்றுத் தமது சக்திகளை உள்ளே அடக்கிக் கொண்டு புலம்பினார். . . அகிலம் ======== கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத் திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத் தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார் அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம் முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு . விளக்கம் ========= இவ்வாறு தமது முன் பிறவியினால் கருவில் அமைந்த தோசங்கள் எல்லாம் அனுபவித்துக் கழித்துவிட்டு, சிறந்த சிவஞானத்தின் உயர்ந்த நிலையடைந்து, சிவமயமாய் நிலை பெற மனதில் நினைத்து, மாயவரை நெஞ்சில் நிறுத்தி தினமும் வருந்தினார். ஆனால், உலக மக்கள் பார்வைக்கு நோய் பிடிநத்தவராகக் காட்சி அளித்தார். இப்படியாக ஒரு வருடம் தமது முன்பிறவி பாவத்தினால் உடலில் வந்த நீயவினைகள் எல்லாம் உலகில் கழித்துவிட்டு, பரம்பொருளே, தஞ்சம் என்று இருந்தார். அச்சமயம் ஒரு நாள் இரவு இறைவன் அருளால் சுவாமியின் தாய் கனவில் தோன்றிய திருமால் அவளுக்கு ஒரு அன்புக் கட்டளை இட்டுச் சென்றார். . . தொடரும்… அய்யா உண்டு.