*இன்றைய சிந்தனை*
🌷13.05.2026🌷
#innraya SINTHANAY
கஷ்டங்கள் நம்மை நெருங்கும் போது அதற்கு யார் காரணம் எனத் தேடுவதை விட அதன் மாற்று வழியைத் தேடுவதே வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும்.
ஒருவனின் திறமையைப் பாராட்டினாலே போதும், அவனுடைய இயலாமையும், கெட்ட சிந்தனைகளும் குறைந்து விடும். எனவே மனதாரப் பாராட்டுங்கள்.
ஒரு சிலருக்கு நாம எவ்வளவு தான் அனுசரித்துப் போனாலும் புரிவதே இல்லை. காரணம் புரியலையா அல்லது பிடிக்கலையானு தெரியல.
யாரிடமும் நெருங்கிப் பழகிய பின் விமர்சிக்காதீர்கள். நெருங்கிப் பழகியதால் தான் விமர்சிக்கக் காரணங்களே கிடைத்தது.
உங்களுக்கான அமைதியைப் பிறரிடத்தில் தேடுகின்ற வரை மன அமைதி கிடைப்பது சந்தேகமே.
😊😊😊