💕குறும்புக்காரன்🐬
564 views
17 hours ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! புகைவண்டி காணொளி ஒன்னு. மற்றொன்று! முகநூல் பதிவு:தூங்கிய நிர்வாகத்தை தட்டி எழுப்பிய முதலமைச்சர் அண்ணன் விஜய்! தமிழ்நாட்டில் தலைமைச் செயலக அதிகாரிகள் தற்போது மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்களாம். இதுவரை இருந்த பல முதலமைச்சர்களில் யாரும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து இருந்து பணிகளை கண்காணித்ததில்லை என்பதே பேசப்படுகிறது. பலர் தங்கள் உத்தரவுகளை தனிச்செயலாளர்கள் மூலம் வழங்கி, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே செயலகத்தில் செலவழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் விஜய் காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் உடனடியாக முடிகிறதா அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கிறாராம். ஒரு திறமையான மேனேஜர் போல செயல்படுகிறார் என்பதே அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் இனி சோம்பேறித்தனமாக இருக்க முடியாது் விரைவாகவும் பொறுப்புடனும் வேலை செய்ய வேண்டும்என்ற மனநிலை அதிகாரிகள் மத்தியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் செயல்முறையிலேயே காட்டி வருகிறார் என்பதும் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி / சம்பள உயர்வு பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மூத்த ஐஏஎஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் உங்களின் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் ஊதியமும் தர முயற்சி செய்கிறேன் ஆனால் எந்த சூழலிலும் லஞ்சத்திற்கு இடமளிக்கக் கூடாது என்று தெளிவாக தெரிவித்தாராம். லஞ்சத்தை குறைக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதும் கூறப்படுகிறது. மேலும், திடீர் ஆய்வுகள் (Silent Visit/Surprise Visit) மூலம் அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கு முன் அறிவிப்பின்றி செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் எப்போது எங்கே வருவார் என்பது யாருக்கும் தெரியாத நிலை உருவாகும் என்பதால் அதிகாரிகள் நேரம் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவுகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆட்சி எப்படி ஒழுங்காக இயங்க வேண்டும் என்பதை மக்கள் நேரில் காணப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. வாழ்த்துகள்முதலமைச்சர் அண்ணன் விஜய்.