D Muthu Prakash, Kanchipuram 💐
545 views
1 days ago
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார் கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம் பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே . விளக்கம் ========= திருமால் முனிவர்களை நோக்கி, முனிவர்களே, சடலத்தைக் கொண்டு வந்தோம் என்று சொன்னீர்களே, அந்த உயர்வு பொருந்திய நல்ல சடலத்தின் முன் வரலாறுகளை எல்லாம் விளக்கமாகக் கூறுவீர்களாக என்றுரைத்தார். . . அகிலம் ======== அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே நல்ல சடலமிது நாடுமுற் காலமதில் வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர் பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண் ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன் அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று) ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும் அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும் யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம் இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார் . விளக்கம் ========= அப்பொழுது முனிவர்கள், ஆதியின் அருளால் நாங்கள் கூறுகிறோம் என்று கூறி விளக்கலுற்றனர். அன்பர்களே கேளுங்கள். . உயர்வான இந்த பொன் கூட்டுச் சடலத்தில் இருப்பது ஒரு காலத்தில் தெய்வேந்திரன் வாழுகின்ற வெற்றியையுடைய தெய்வலோகத்தில் வாழ்ந்த சம்பூரணதேவன் என்னும் பெயருடைய ஓர் உயிர் ஆகும். இவன் பெரிய சக்தி உடையவன் ஆவான். இவனுக்கு நிகராக யாரும் இலர். ஆதி இறைவனின் அருள்படைத்தவன் இவன். இப்படித் தெய்வலோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் இவனுக்கு எமலோகத்தில் வாழ்ந்து வந்த பெண்களிலே பரதேவதை என்னும் பெயருடைய பெண்ணின் மேல் காதல் உண்டானது. அவளும் இவன் மேல் ஆசை கொண்டாள். இவ்வாறு இவனும் அவளும் வாழ்ந்து வருகின்ற சமயத்தில் தேவர்கள் வாழும் தெய்வலோகம் முதலிய ஏழு லோகத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பூவுலகில் பிறவி எடுக்கச் சம்மதித்தனர். அச்சமயம் சம்பூரணதேவனிடம் திருமாலாகிய நீவிர் “ நீ பிறப்பதற்கு ஏதாவது தடை உண்டோ?” என வினவினீர். . . அகிலம் ======== அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால் குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார் . விளக்கம் ========= சம்பூரணதேவன் பரதேவதையின் காதலினால் எனக்குப் பூலோகத்தில் பிறக்க விருப்பமில்லை என்று கூறி மறுத்து, பரதேவதையையும் என்னோடு எனக்குரிய இயல்புடையவளாகப் பிறவி செய்தால் குவளை மலரை அணிகின்ற மாயவரே, எனக்கு பூவுலகில் பிறக்க மறுப்பில்லை என்றான். . . அகிலம் ======== அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச் செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார் மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார் நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய் வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும் எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப் பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்தாமும் . விளக்கம் ========= இதைக் கேட்ட நீர் சம்பூரணதேவனுக்கு நேர் வழியுள்ள நல்ல புத்திமதிகளைக் கூறி பார்த்தீர். ஆனால், சம்பூரணதேவனோ நீர் கூறியதைக் கேளாது, எனக்கு அவள்தான் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினான். உடனே, உமக்கு அதிக கோபம் மனதில் உண்டாகி அவனை நோக்கி, தேவனே, நீ கேட்ட நியாயம் நல்லது தானா? நீ கேட்டபடி ஈடேற வேண்டும் என்றால், பரதேவதையும் நீயும் வல்லவனாகிய இறைவனை நினைத்து, எங்கள் இருவருக்கும் இனி வரப் போகின்ற பிறவியில் கணவனும் மனைவியுமாக உருவாவதற்கு வரம் தர வேண்டும் என்று மனதில் ஒரே நினைவை ஏற்றிப் பரநிலை தாண்டி, உயர் நிலை கண்டு, நீங்கள் நினைத்த பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களைத் தவசு நிற்பதற்காக அனுப்பினீர். . . தொடரும்… அய்யா உண்டு.