#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵
*ஸ்ரீ:*
*ஸ்ரீமதே ராமாநுஜாய நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛
*ஸ்ரீமத் வரவரமுநயே நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*பெரியாழ்வார் திருமொழி...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
*பாசுரம்:151...!*
வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே.
*விளக்க உரை:*
***- வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி, அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது.
சொற்றொடர் நிலைச்செய்யுள் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை. “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம், (நிவ வயகி, நிவ வதெவெத வ த) திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று,
அடிவரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த,
*🌹பாடல் என் :152 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹*
*🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏*
*🙏ஓம் நமோ🙏*
*🙏நாராயணா🙏*
*தொடரும்...*
🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧