ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.3K views
26 days ago
AI indicator
சிவமணியம் கேள்வி: விசாரம் எப்படிப் பண்றது? பகவான்: இந்தக் கேள்வி கேக்கறவன் முதல்லே அவன் இருக்கறதை ஒத்துக்கணும். நான் இருக்கேன்கறதுதான் ஞானம். அதைத் திடமா அடையற வரைக்கும் அதைப் பிடிச்சுக்கறதுதான் விசாரம். விசாரமும், ஞானமும் ஒண்ணுதான். கேள்வி: எனக்குப் புரியலே. எதிலே தியானம் பண்ணணும்? பகவான்: தியானத்துக்கு ஒரு பொருள் வேணும். விசாரத்திலே தியானிக்கறவன் மட்டுமே இருப்பான். இப்படித்தான் விசாரமும், தியானமும் வேறுபடும். கேள்வி: ஞானமடைய தியானம் சிறந்த வழியில்லையா? பகவான்: தியானம் ஒரே பொருள்லே ஏகாக்கிரமா இருக்கறது. அதோட பிரயோஜனம் மத்த நினைவுகளை வரவிடாது. ஏகசிந்தனையிலே வச்சுருக்கும். ஆனா ஞானத்துக்கு ஏகசிந்தனையும் போகணும். ஞானம் புதுசா வர்றது இல்லே. ஏற்கனவேயிருக்கு. நினைவுகள் திரைமாதிரி மறைச்சுக்கொண்டு இருக்கு. நம்மளோட முயற்சி எல்லாம் அந்தத் திரையை நீக்கத்தான். அப்போதான் ஞானம் வெளிப்படும். தீவிரமான சாதகர்கள் கிட்டே தியானம் பண்ணச் சொன்னா கேள்வி எதுவும் கேக்காம திருப்தியா தியானத்துக்குப் போயிடுவா. ஆனா யாரோ ஒருத்தன். 'ஏன் தியானம் பண்ணணும்? நான் யார் தியானம் பண்றதுக்கு ' ன்னு கேப்பான். அவன்கிட்டேதான், 'நீ யார்ன்னு பார்'ன்னு சொல்றோம். அதுதான் முடிவு. அதுதான் விசாரம். கேள்வி: விசாரமே போதுமா? தியானம் தேவையில்லையா? பகவான்: விசாரமே வழியும் முடிவும். 'நான்'கறதே முடிவும் பரமார்த்த சத்தியமும். அதை முயற்சியோட பிடிச்சுக்கொண்டு இருந்தா விசாரம். முயற்சியற்று ஸ்வபாவமா இருந்தா ஞானம். பகவான் பொதுவாகச் சொன்னது. நிர்குணாதீத பிரம்மம் (Pure Being) குணாதீத பிரம்மம் (இது ஒளிரும் ) சகுண பிரம்மம் (ஈஸ்வரன் சுத்தமனம் சத்வ மனம்) ரஜஸ் தமஸ் அஹம் (நான்) இதம் (உலகம்) ஆவரணம் ஜீவனை மறைக்கறது இல்லை. அவனோட இருப்பு முழுசா தெரியும். யார்ன்னுதான் தெரியாது. உலகத்தைப் பார்ப்பான். ஆனா அது பிரம்மம்ன்னு தெரியாது. இருட்டிலே கொஞ்சம் வெளிச்சம் இருக்கற மாதிரி. சினிமாவுக்கு முதல்லே இருட்டு வேணும். அதிலே செயற்கை வெளிச்சம்... பாய்ச்சினா அந்த ஒளியிலேதான் படம் தெரியறது. பிரிச்சு அறிய ஒரு பிரதிபலன ஒளி தேவை. தூங்கறவன் கனவு காண்றான்... தூக்கத்திலேதான் இருக்கான். தூக்க இருள் இருந்தாத்தான் கனவு உலகம் பாக்க முடியும். அப்படியே அஞ்ஞான உறக்கத்திலேயே இந்தப் பெரிய கனவு நடக்கறது. அஞ்ஞானம் இருள்தான்....... ஆவரணம் இந்த ஆவரணம் அஞ்ஞானத்தோட ஸ்வபாவம். ஆத்ம ஸ்வபாவமில்லே. அது ஆத்மாவை மறைக்காது. ஜீவனைத்தான் மறைக்கும். அகந்தை ஜடம். அது மேலே ஆத்ம ஒளி பட்ட உடனே அது ஜீவனாயிடறது. அகந்தையையும் ஒளியையும் பிரிக்க முடியாது. எப்பவும் ஒண்ணாவே இருக்கும். கேள்வி கேக்கறவனைத் திருப்திப் படுத்த இப்படி எல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு. ஜீவன் ஒரு கலவை. ஆவரணம் இரண்டு விதம் உள்ளே (பாக்கறவனை மறைச்சுடும் பொருளையும் மறைச்சுடும்) தேகாத்ம புத்தி வெளியே (இறைவன்கிட்டே இருந்துதான் பாக்கப்படற உலகம் வந்ததுங்கறதை மறைச்சுடும்.) நானாத்துவம் சமாதியைப் பத்திய ஒரு கேள்விக்கு. பகவான்: 'நான்'கறதிலே இருக்கறதுதான் சமாதி. முயற்சியோடு 'நான் இருக்கேன்' கறதிலே இருந்தா ஸவிகல்ப சமாதி. 'நான் இருக்கேன்'கறதிலே ஐக்கியமாகி உலகம் தெரியலேன்னா... நிர்விகல்ப சமாதி. அறியாமையிலே ஐக்கியமாகி உலகம் தெரியலேன்னா... தூக்கம். எப்பவும் இருக்கறதிலே முயற்சி இல்லாம இருந்தா ஸஹஜ சமாதி. கேள்வி: பூரண பிரம்மத்தை எப்படி அடையறது? கிருஹஸ்தர்களுக்குத் தகுந்த ஏதாவது வழியிருக்கா? பகவான்: நீங்களே பூரண பிரம்மம்ன்னு சொல்லிட்டேள். அப்போ நீங்க பூரணத்திலே இருந்து வேறா? வேறேன்னா... எப்படி அது பூரணமாயிருக்கும். வேறு இல்லேன்னா... இந்தக் கேள்வி எப்படி வரும். பிரம்மம் பூரணம்... நாம அதிலே இருந்து வேறே இல்லைங்கற அறிவுதான் முடிவு. இது புரிஞ்சா நீங்க உங்களைக் கிரஹஸ்தனாகவோ வேறு எதுவாவோ அப்புறம் நினைக்க மாட்டேள். கேள்வி: வாழ்க்கைன்னா என்ன? பகவான்: இருக்கறதுதான் வாழ்க்கை. அது நீங்கதான். அதுதான் அழியாத வாழ்க்கை. கேள்வி: காலம்ன்னா என்ன? பகவான்: இருக்கறதுதான். நீங்க இல்லாமே காலம்ன்னு ஒண்ணைக் கற்பனை பண்ண முடியுமா? இந்த வாழ்க்கை உடம்பை வச்சு இருக்கு. நீங்களும் உங்களை உடம்புன்னு நினைச்சுக்கறேள். ஆனா நீங்க அழியாத வாழ்வு. இந்த உடம்புகள் எல்லாம் உங்களைப் பிடிச்சுக்கொண்டு, நான்தான் வாழ்றேன்னு சொல்றது. இதைத்தான் தேகாத்ம புத்தியாலே பீடிக்கப்பட்டு இருக்கறதுன்னு சொல்றது. தேகாத்ம புத்தி போச்சுன்னா... நீங்கதான் ஆத்மா. பிறக்கறதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்தேள் ? தூங்கிக்கொண்டு இருந்தேளா? எப்படி இருந்ததோ? அப்பவும் உடம்பு இல்லாம இருந்தேள்! அகந்தை கிளம்பித்து... மனசு, உடம்புன்னு ஒரு படத்தைப் போட்டது. விளைவு.... தேகாத்மபுத்தி. உடம்பு தெரியறதாலே நான் பிறந்தேன் ; இறப்பேன்னு சொல்றேள். உடம்போட தோற்றத்தையும் மறைவையும் உங்க மேலே ஏத்திக்கறேள். நான் பிறந்திருக்கேன்... நான் ஒருநாள் சாவேங்கறேள். இந்த உடம்பு தெரியறதையே உங்களோட வாழ்க்கைங்கறேள். ஆனா உண்மை என்ன? நீங்க உடம்பு இல்லாமலே இருக்க முடியும். ஆனா உடம்பு நீங்க இல்லாம இருக்க முடியாது. நான் இந்த உடம்புதான்கறது அஞ்ஞானம், உடம்பும் நான்தான் கறது ஞானம். இதுதான்... ஞான அஞ்ஞானபேதம். உடம்பு மனசோட கற்பனை. மனம்தான் அகந்தை. ஆத்மாவிலே இருந்து வர்றது. அதனாலே இந்த நான் உடம்புங்கற நினைப்பு... ஆத்மாவை மறக்கவச்சுடறது. யாருக்கு இந்த உடம்பு? யாருக்கு இந்த பிறப்பு? ஆத்மாவுக்கு இல்லை. அகந்தைதான் தனியா கற்பனை பண்ணிக்கறது. நான் தனிங்கற நினைப்பு இருக்கற வரைக்கும் துயரம் இருக்கும். நாம யார்ன்னு தெரிஞ்சா.... நாம வேறே, உலகம் வேறே, நாம ஏதோ எங்கேயோ பிரிஞ்சு, தனியா இருக்கோம்ங்கற நினைப்பு போயிடும். அமைதியே மிஞ்சும். மேலே தூக்கி எறிஞ்ச கல்லு, தன் மூலத்தை விட்டு எவ்வளவு தூரம் போனாலும் திரும்பத் தரைக்கு வரும். வர்ற வரைக்கும் அதோட இயக்கம் நிக்காது. தரைக்கு வந்தாத்தான் நிலைப்படும். சமுத்திரத்திலே இருக்கற நீர் ஆவியாகி, மேகமாகி, மழையாகி, நதியாகி மீண்டும் சமுத்திரத்தை வந்து சேர்றமாதிரி... நாம மூலத்திலே இருந்து பிரிஞ்சுட்டோம்கற நினைப்பே... பதைபதைப்பைக் கொடுத்து... திரும்பவும் தன்னிலை சேர்ற வரைக்கும் விடாது. நம்மள உடம்போட சேத்துக்கொண்டு, நாம பிரிஞ்சதா ஒரு பதைபதைப்பு நம்மளோட மூலத்திலே திரும்பவும் சேர்ற வரைக்கும் இருக்கும். சேந்தாத்தான் அமைதி திரும்பும். தேகாத்ம புத்தி ஒழியும். தங்கம் ஆபரணம் இல்லே. ஆனா ஆபரணம் தங்கத்தைத் தவிர வேறே இல்லை. ஆபரணம் எந்த விதத்திலே இருந்தாலும் அது தங்கம்தான். அப்படியே உடம்புகளும் ஆத்மாவும். நாம உடம்புன்னு நினைச்சு சுகமா இருக்க விரும்பறது.... முதலையை தெப்பம்ன்னு நினைச்சு அதைப் பிடிச்சு ஆற்றைக் கடக்க நினைக்கற மாதிரிதான். நான் இந்த உடம்புதான்கற நினைப்பு மனத்தாலேயே.... அதோட வெளிமுக அலைச்சலாலேயே ஏற்படறது. அப்படியே இருந்தா முடிவிலே துயரமும் அமைதியின்மையுந்தான் மிஞ்சும். நீங்க யார்ன்னு பாருங்கோ! அதிலேயே அடங்கி யிருங்கோ! அமைதியடைங்கோ! பக்கம்:390 - 395. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி