RamaswamyAnnamali
775 views
3 days ago
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் ஏன் எப்போதும் கண்களை முழுவதும் மூடாமல் இருப்பார் தெரியுமா…?” உலகம் முழுக்க மனிதர்கள் தூங்கும் நேரத்திலும் கூட யாரோ ஒருவன் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான்… யாரோ ஒருவள் மனசு உடைந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பாள். அவர்களின் வேண்டுதலை அவர் கேட்டுக் கொண்டே இருப்பாராம் அதனால் தான் மகாவிஷ்ணு முழுமையாக உறங்க மாட்டாராம். ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு இருந்தாலும் அவரின் பார்வை இந்த உலகத்தின் மீது எப்போதும் இருக்கிறதாம். அதனால் தான் எவ்வளவு பெரிய இருள் வந்தாலும் ஒரு நேரத்தில் தர்மம் மீண்டும் எழுகிறது… புராணங்களில் இன்னொரு விஷயம் சொல்லப்படுகிறது… மகாவிஷ்ணு தண்டிப்பதற்கு முன் பல முறை மன்னிப்பாராம்… ஏனெனில் அவர் கோபத்தை விட கருணையை அதிகமாக விரும்புகிறார். ஆனால் அப்பாவிகளை அழவைத்தவர்களுக்கு மட்டும் ஒரு நாள் நீதியாக திரும்பி வருவாராம். அதனால் தான் இன்றும் பலர் “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லும் போது மனசுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது. இந்த உலகம் உன்னை கைவிட்டாலும் நாராயணன் உன்னை பார்த்துக்கொண்டே இருப்பார். விஷ்ணு பகவானின் அருள் அவரை போற்றும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஓம் நமோ நாாயணாய நமஹா!