saravanan.
528 views
19 hours ago
#sithar sivavaakkiyar. #sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 213...!* அன்னைகர்ப்பத் தூமையி லவதரித்த சுக்கிலம் மின்னையே தரித்தும் பனித்துளிபோ லாகுமே உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளே யடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. *பொருள் விளக்கம்:* பித்தர்களே! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி போலாகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே உடல் எடுத்து தாயின் வயிற்றுக்குள் உழன்று பத்து மாதம் தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பின்னர் குழந்தையாகப் பிறக்கிறது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்றும், அத்தூமையில்தான் ஈசன் இருக்கிறான் என்பதனையும் உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩