ரவிசங்கர் ராஜா, ஆரணி
534 views
20 hours ago
AI indicator
திருமுறைகள் - பகுதி 9 (நிறைவுப்பகுதி) சேக்கிழார் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் மேல் அதீத பற்று வைத்திருந்தார். அவரின் சொந்த ஊரான குன்றத்தூரில் சோழ தேசத்தில் இருந்த கோவிலை போல  திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிக்கு கோவில் கட்டி வழிபட்டார். சேக்கிழார் தனது சகோதரர் பாலறவாயரை சோழ மன்னனின் அமைச்சராக்கினார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில்  63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதியுள்ளார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்  பெரிய புராணத்தை  "அத்தி தரும் கவி", "புத்தி தரும் கவி", "சித்தி தரும் கவி", "பத்தி தரும் கவி", "முத்தி தரும் கவி" என புகழ்ந்துள்ளார். பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாக உள்ளது. முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும்,  இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது.  சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது. காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து,  இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது. முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது. இராசமாணிக்கனார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி எனும் நூல் பெரியபுராணத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க நாட்டுடைமையாக்கப்பட்ட நூல் ஆகும். சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனிச் சன்னிதி உள்ளது.  சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோயிலிலும், தேவகோட்டை நகரச் சிவன் கோயிலிலும் உள்ளது. சேக்கிழாருக்கான குரு பூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில்  கொண்டாடப்படுகிறது. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #பன்னிரு திருமுறை #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏