sakthi m
565 views
3 days ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪தி.மு.க #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #விழிப்புணர்வு பதிவு உண்மையிலேயே இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இன்று உள்ள தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழ் மக்கள் தகுதியானவர்கள் கிடையாது.! பிஹார் உத்திரபிரதேச வளர்ச்சி அளவே, இந்த தமிழ்ச் சமூகத்தின் தகுதி.! அதைத் தாண்டி இந்த வளர்ச்சியை கொடுத்த தலைவர்கள், மக்களின் தகுதியை சிந்திக்கவே இல்லை.! 1967ல் அண்ணாவால் சிந்திக்கப்பட்டு, கலைஞரால் ஏறத்தாழ 30 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றி முடிக்கப்பட இருந்த, சென்னை- வீரணம் குடிநீர் திட்டத்தை ஏறத்தாழ 10 கோடி செலவு செய்த பிறகு, ஊழலை காரணம் காட்டி நிறுத்தினர் அன்றைய RSS காங்கிரஸ் கூட்டம்.! அடுத்ததாக வந்த RSSன் தத்துப்பிள்ளையான எம்ஜிஆர் அதிமுக, அதனை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டது. பின்னாளில் சுமார் 25 வருடங்கள் கழித்து சென்னை மாநகர மக்கள் தாகத்துக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்த நிலையில் ஜெயலலிதாவால் அதே வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 1996 - 2001 திமுக ஆட்சியில் சென்னையின் துணை நகர திட்டத்தை திருப்போரூரில் அமைத்திட கலைஞர் திட்டமிட்டார். பாமகவின் ராமதாஸ் அதை தடுத்தார். அடுத்ததாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா எந்த திட்டமும் துவங்கவில்லை. 2006-2011 திமுக ஆட்சியில், மதுரவாயல் துறைமுகம் இடையே 19 கிலோமீட்டர் தூர பறக்கும் சாலையை உருவாக்கினார் கலைஞர். அடுத்ததாக வந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி அதனை நிறுத்திவிட்டது. இன்றும் அதற்கான மொட்டை தூண்களை காணலாம். சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் உருவாக்க திட்டமிட்டார், அன்றைய முதலமைச்சராக இருந்த திரு. ஸ்டாலின். இதோ 2026ல் ஆட்சிக்கு வந்துள்ள RSS குழந்தையான நடிகர் ஜோஸஃப் விஜய், அதனை நிறுத்தி விட்டார்.! முதலமைச்சர் ஜோஸஃப் விஜய்க்கு நன்றி.! தமிழர்கள் சமூக பொருளாதார வளர்ச்சிக்காே வெளிநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளுக்காே தகுதியற்றவர்கள். அழுக்கு வேட்டி, மேல்துண்டோடு விவசாயம் செய்தே சாகட்டும். பிர்கா தாண்டவே விருப்பமற்றவர்களுக்கு எதுக்கு விமான நிலையமெல்லாம்? ஜோஸஃப் விஜய் அவர்களே, நீங்கள் ஷெய்வதுதான் ஷரி.!