#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 ராகு, யோக கேது அருளும் அபூர்வ கோயில்!
🪬6 நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அம்பர் மாகாளம்
🪬தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலஹால விஷம் வெளியானது. பிரபஞ்ச நன்மையின் பொருட்டு ஈசன் அதை ஏற்றுக்கொண்டார்.
🪬அந்த கொடிய விஷத்தின் பாதிப்பால் பொன்னாற்மேனியனான பெருமானின் திருமேனியின் கண்டம் கரிய நிறம் அடைந்தது.
🪬இந்தப் புராண நிகழ்வோடு தொடர்புடைய தலங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று அம்பர் மாகாளம்.
🐍காளம்' என்றால் கடும் விஷம் என்றுபொருள். கொடுமையான விஷத்தினை ஏற்றமையால் உருமாறிய ஈசனின் அந்த திருவடிவத் திற்கு 'காளன்' என்ற பெயர் ஏற்பட்டது.
🐍காளர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் `மகா காளர்' ஆகிறார். காளனுக்கு இணையான உக்கிர சக்தி மகாகாளி. இந்த இருவரும் இணைந்து விளங்கிடும் திருத்தலம்தான் மகாகாளம் எனப்படும் மாகாளம்.
🔱நம் பாரதத்தில் மூன்று மாகாளங்கள் முக்கியமானவை.
🔱ஒன்று மத்தியப்பிரதேசம் #உஜ்ஜயினியில் இருக்கும் மாகாளம்,
🔱இரண்டா வது தமிழகத்தில் தொண்டை நாட்டில் அமைந்திருக்கும் இரும்பை மாகாளம் (தற் காலத்தில் விழுப்புரம் மாவட்டம்).
🔱மூன்றாவது காவிரி பாயும் புண்ணிய பூமியான திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அம்பர் மாகாளம்
🔱அம்பர் மாகாளத்தில் இரண்டு ஆலயங்கள்.
🔱ஒன்று, 'அம்பர் பெருங்கோயில், மற்றொன்று காளி பூசித்த கோயில் மாகாளம்.
🔱இவற்றுள் இரண்டாவது ஆலயமான கோயில் மாகாளம் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவை.
🔱பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலஹால விஷத்தினை சிவபெருமான் தாமே உவந்தேற்று தம்மை வருத்திக் கொண்டார் அல்லவா...
🔱அதற்குக் காரணமாகி விட்டோமே என்று நாகர் தலைவனான வாசுகி மனம் வருந்தினான்.
🔱அதனால் உண்டான தோஷத்தினைப் போக்கிக் கொள்வதற்காக அவன் ஈசனை வழிபட்ட தலம்தான் இந்த மாகாளம்.
🔱கொடும் #விஷத்தை உடையவரான மாகாளன் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் இவருக்கு, 'மாகாளேஸ்வரர்' எனும் திருநாமம் ஏற்பட்டது.
🔱ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள ஏனைய எல்லா கிரகங்களும் ராகு-கேதுவுக்குள் அடைபட்டுவிட்டால், அதன்மூலம் உண்டாகும் கொடிய தோஷம் - காலசர்ப்ப தோஷம்.
🔱எவ்வளவு செல்வச் செழிப்போடு பிறந்தாலும் இந்த #தோஷம் உடையவர்கள் எவ்வித சுக சௌகர்யங்களையும் அனுபவிக்க இயலாது.
🔱வாழ்நாள் முழுவதுமே தடைகளையும் தடங்கல்களையும் மட்டுமே சந்திக்கும் போராட்ட நிலையே எஞ்சும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
🔱இப்படியான தோஷமுடையவர்கள் வழிபட்டு நன்மைகளை அடையச் சிறந்த பரிகாரத் தலம் இந்த அம்பர்மாகாளம் என்கிறார் கள். காலசர்ப்ப தோஷத்தினை காலசர்ப்ப யோகமாக மாற்றிட வல்ல அற்புதமான தலம் இது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷