ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
488 views
8 days ago
தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் நாராயணகேட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தியம் - கல்பனா தம்பதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். தனக்கு சொந்தமான நிலத்தில் முத்தியம் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் நாராயணகேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்பனா செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கல்பனாவிற்கு அதே மருத்துவமனையில் பணியில் இருந்த மனூரு மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டூ என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறி உள்ளது. மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு நாளும் காதலனுடன் நேரத்தைச் செலவழித்துவிட்டு கல்பனா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். : ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய டிரைவர்... விசாரிக்காத போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வீட்டில் இருந்தாலும் அடிக்கடி போனிலேயே நேரத்தைச் செலவழித்து இருக்கிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் முத்தியம், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார். தங்கள் உறவுக்கு கணவன் முத்தியம் தடையாக இருப்பதாக நினைத்த கல்பனா, காதலன் சிண்டூவுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். கொலை திட்டத்தின்படி கடந்த 16ஆம் தேதி இரவு, கணவனுக்கு அதிக அளவில் கல்பனா மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து இருக்கிறார். அதன்படி போதையில் முத்தியம் தூங்கிய பிறகு, காதலன் சிண்டூவை வீட்டிற்கு வரவழைத்து இருக்கிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து முத்தியம் ரெட்டியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கிராமத்தின் எல்லையில் உள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு உடலை எடுத்துச் சென்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைத்து விட்டனர். மேலும் அந்த இடத்தில் கற்களைப் போட்டு குழி தோண்டப்பட்ட அடையாளம் தெரியாமல் செய்து விட்டனர். இரு நாட்கள் கடந்த நிலையில் கணவன் காணாமல் போய்விட்டதாக முத்தியம் ரெட்டியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் கல்பனா தெரிவித்து இருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கல்பனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்தனர். அப்போது அவர் அடிக்கடி தனது காதலன் சிண்டூவிற்கு போன் செய்வது தெரிந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தியம் ரெட்டியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் அங்கேயே உடற்கூறு ஆய்வு நடத்தி, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். கல்பனா, சிண்டூ ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔