Arunachalam
669 views
2 days ago
மூன்று நாட்களாக என் மூளைக்குள் முடங்கிக்கிடந்த சமாச்சாரத்தை கொஞ்சம் இறக்கி வைத்து இளைப்பாறுவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே...! சந்தர்ப்ப சூழ்நிலையால பல மனிதர்கள் கொஞ்சம் தடம் மாறி போவதை பார்த்து இருக்கிறோம்... அவர்களே மீண்டும் நல்வழிக்குத் திரும்பும் போது ஏற்றுக் கொள்வது மனித இயல்பு... பாராளுமன்றத்தில் சங்கிகள் பப்பு என்று ராகுலை கேலி கிண்டல் செய்த போதெல்லாம், ராகுல் பப்பு இல்லை... இவர்தான் இந்தியா கூட்டணியின் பிரதம வேட்பாளர் என்று உரக்கச் சொன்ன முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை இனிப்பு கொடுத்து கட்டித் தழுவியது எல்லாம் போலி நடிப்புதான் என்று அப்போது எங்களுக்கு புரியவில்லை. புதிதாக ஒரு நடிகனின் சிநேகிதம் கிடைத்ததும், ஸ்டாலினின் முகம் பார்க்க அஞ்சி, இந்திய கூட்டணியில் இருந்தும் இல்லாதது போல் மறைந்து வாழ்ந்த மானங்கெட்ட ராகுலை ஒரு சராசரி மனிதனாக கூட இப்போது நம்மால் பார்க்க முடியவில்லை. திமுகவை தீய சக்தி என்றும், அடுத்த முதல்வர் நான் தான் என்றும் நின்ற ஒரு நடிகனிடம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு இந்தியா கூட்டணியில் இருப்பது போல் வேஷம் போட்டு, கண்ட காங்கிரஸ் கபோதிகளை எல்லாம் திமுகவுக்கு எதிராக பேசவிட்டு, ஒரு நியமன எம்பியையும் - 28 எம் எல் ஏ சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கே வராமல் நீ போட்ட வேஷத்தை பார்த்து அரசியல் வட்டாரமே கைகொட்டி சிரித்தது சிரித்தது...! நீ தவெகவுடன் கள்ள உறவில் இருந்ததை அறிந்தும் அதை பொருட்படுத்தாமல், திமுக காரர்கள் இரவு பகல் பாராமல் மக்களை சந்தித்து ஐந்து இடங்களை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி கூட சொல்லாமல் ஐந்து எம்எல்ஏ-க்களையும தவெக என்ற குப்பைக் கூடையில் கொட்டிவிட்டு, நடிகனோடு கூட்டணி அமைத்துக் கொண்டாய்... அரசியலில் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் இப்படி துரோகியாகிப் போனாயே ஏன்...? கூட்டணிப்பற்றி பேசும்போதே நாங்கள் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம் என்று சொல்லிவிட்டு மரியாதையோடு ஒதுங்கியிருக்கலாமே ஏன் அதை செய்யவில்லை நன்றிகெட்ட ராகுலே...? திமுகவிடம் சொல்லிக் கொள்ளாமல் தவெக-வுடன் கூட்டணி வைக்க நினைப்பது காங்கிரஸின் உரிமை என்றால், திமுக கொடுத்த ஒரு எம்பி சீட்டையும் - ஐந்து எம்எல்ஏ-வையும் ராஜினாமா செய்துவிட்டு அல்லவா ஓடி இருக்க வேண்டும்...? திமுக காரர்கள் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கும் போது... காங்கிரஸ்காரர்கள் விசில் வெற்றி பெற உழைத்துக் கொண்டிருந்தார்கள். தவெக பெருவாரியாக வெற்றி பெற்றவுடன், அதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பாவிகள் காங்கிரஸ் சங்கிகள். நன்றி கெட்ட காங்கிரசை அழிக்க இனி திமுக தேவையில்லை... பாஜக அதை கனகச்சிதமாக செய்துமுடிக்கும். நன்றிகெட்ட காங்கிரசை இனி நாடு பார்த்துக் கொள்ளும். எதிரிகளோடு எத்தனை காலம் வேண்டுமென்றாலும் போராடலாம்... துரோகி என்று தெரிந்த பிறகு நாம் தூரமாக நிற்பதே நல்லது...! காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியும்... ஆனால் திமுக இல்லாமல் காங்கிரசுக்கு வாழ்க்கையே இல்லை. குட் பை ராகுல். -Rajan Kandhasamy. #👨மோடி அரசாங்கம்