#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - திருச்சீரலைவாய்.*
*திருமுருகாற்றுப்படையின் 78 முதல் 102 வரையிலான வரிகள் Shaivam, முருகப்பெருமான் பிணிமுகம் என்னும் யானை மீது ஏறி, தன் ஆறு திருமுகங்களுடன் திருச்சீரலைவாயில் எழுந்தருளும் காட்சியையும், அந்த ஆறு முகங்களின் வெவ்வேறு சிறப்பான பணிகளையும் விவரிக்கின்றன.*
பாடல் வரிகள் :
*திருமுருகாற்றுப்படை - திருச்சீரலைவாய்*
வைந்நுதி பொருத
வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை
ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும்
மருங்கின் கடுநடைக் (80)
கூற்றத் தன்ன
மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன
வேழமேல் கொண்டு
ஐவேறு உருவின்
செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய
முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின்
சென்னிப் பொற்ப (85)
நகைதாழ்பு துயல்வரூஉம்
வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை
வாண்மதி கவைஇ
அகலா மீனின்
அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத்
தந்தொழில் முடிமார்
மனன்நேர் பெழுதரு
வாள்நிற முகனே (90)
மாயிருள் ஞாலம்
மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்
றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த
அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத்
தன்றே ஒருமுகம்
மந்திர விதியின்
மரபுளி வழாஅ (95)
அந்தணர் வேள்வியோர்க்
கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை
ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக்
கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச்
செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட்டன்றே ஒருமுகம் (100)
குறவர் மடமகள்
கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்
தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும்
முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த
அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய
மொய்ம்பின் சுடர்விடுபு (105)
வண்புகழ் நிறைந்து
வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின்
ஐயர்க் கேந்தியது
ஒருகை உக்கம்
சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை
அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ
ஒருகை இருகை (110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலம்
திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்
கொட்ப ஒருகை
பாடின் படுமணி
இரட்ட ஒருகை (115)
நீல்நிற விசும்பின் மலிதுளி
பொழிய ஒருகை
வான்அர மகளிர்க்கு வதுவை
சூட்ட ஆங்குஅப்
பன்னிரு கையும்
பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம்
கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப
வால்வளை நரல (120)
உரம்தலைக் கொண்ட
உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை
வெல்கொடி அகவ
விசும் பாறாக
விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த
ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே,
அதா அன்று (120) 2
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏