நேரம் காலம் சாதகமாக இருப்பவரை அதிர்ஷ்டசாலி என்கிறோம்.
( 5,9, ஆம் அதிபதி தொடர்பை பெற்ற தசாபுத்தியை அனுபவித்துக் கொண்டிருக்க கூடிய நபர் )
நேரம் காலத்திற்காக காத்துக் கொண்டும். அதுவரை முயற்சி செய்து கொண்டும். இருப்பவர்களை முயற்சியாளர்கள் என்கிறோம்.
( லக்னாதிபதி வலுப்பெற்ற அதேசமயம் யோக தசைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடிய நபர்)
வந்த வாய்ப்புகளையும்
வருகின்ற வாய்ப்புகளையும்
தவறவிட்டவர்களையும்.
வாழ்க்கையில் ஒரு முறை கூட நேரம் காலம் வராதவர்களையும் துரதிஷ்டசாலி என்கிறோம்.
( லக்னாதிபதி வலுவில்லாத மேலும் தொடர் அவயோக தசா புத்தியை அனுபவித்துக் கொண்டிருக்கிற நபர்)
நேரம் காலத்தைப் பற்றி
சிறிதும் கவலைப்படாமல்
கடமையே கண்ணாய் இருப்பவர்களை
உழைப்பாளி என்கிறோம்.
( ஜாதகத்தில் 6,10 ஆம் இடங்கள் மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் இருக்கக்கூடிய நபர்கள் )
பொதுவாக...
உங்களுடைய பொருளாதார தேவைக்கான பணக்கட்டுகள்.
நீங்கள் விரும்பி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற
வாய்ப்புகள்.
இது போன்ற ...
ஒருவருடைய ஆசைகள் தேவைகள் பிரார்த்தனைகள் அனைத்தும்...
இறைவனிடம் கோரிக்கை வைத்த அடுத்த நொடியே
அனைத்தும் தயாராகிவிடும்.
ஏனெனில் ...
இறைவன் யாருக்கும் எதையும் இல்லை என்று சொல்வதில்லை.
இருப்பினும்.,...
ஒருவர்...
அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் உண்டான தகுதியையும் பக்குவத்தையும் அடைந்த பிறகு மட்டுமே...
அதற்குரிய நேரம் காலத்தில்
இறைவன் ஒருவருக்கு அவர் விரும்பியதை தருவார்.
அதுபோல..
அனைவருக்கும் ...
இரண்டு கண்கள்
இரண்டு காதுகள்
இரண்டு கைகள்
இரண்டு கால்கள்
என்று..
மனித உருவில் பூமியில்
பிறந்து விட்டாலும்.
மனிதனாக இல்லாமல் மிருகங்களாகவும் இருக்கிறார்கள்.
மனிதரில் மாணிக்கமாகவும் இருக்கிறார்கள்.
மனிதனாக பிறந்து மகன்களாகவும் மாறுகிறார்கள்.
மகாத்மாவாகவும்
வாழ்ந்து விட்டு செல்கிறார்கள்.
யாராக இருந்தாலும் ..
ஜீவாத்மாவான நாம்
பரமாத்மாவிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே...
பரம் பொருள் என்கிற ஜோதியில் ஐக்கியமாக முடியும்.
ஜோதிடர்
Jaya Kannan
WhatsApp 78100 22628
#🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்