#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 வருடம், வைகாசி மாதம் 23ம் நாள் 06-ஜூன்-26, சனிக்கிழமை தேய்பிறை ஷஷ்டி விரத நாளில்
பர்வத குமாரி பார்வதி புத்ரன் சம்பு குமாரன் சரவண ஜனிதன் சௌம்ய மூர்த்தி மாலோன் மருகன்
பன்னிருகையான் பவள நிற செவ்வேள் பாலசுப்ரமண்யனை, முருகனை கந்தனை நம் வாழ்வில்
பங்கெடுத்து பிரச்சனைகள், ஏற்படுத்தி துன்பங்களை தரும் தீவினைகளை அழித்திட
பரிபூரணமான பக்தியோடு நம்பிக்கையுடன் போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா, தினமும் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா. வடிவழகா
திருவடியில் தவமிருப்போம், தீர்த்திடுவேன் உன் தீவினைகளை கவலை விடு என தீர்ப்பெழுது திரு முருகா
திருச்செந்தூர் கடல்கரையில் செந்தில் நாதன் அரசாங்கம், நம்பி உனை வந்து நெஞ்சுருகி நின்றால், அருள் தருவாய்
திருமால் மருகா, மயில் வாஹனா, வள்ளி மனமோஹனா, தெய்வானை நாயகா, சரவணபவா அடிமை எனை ஆளவா
திருநீறணிந்து நெற்றியிலே நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி, எனை ஆளுவாய் கந்தா
திருத்தணி வேல் முருகா உன் முகம் காண ஓடி வந்தேன், என் குறை சொல்ல வந்தேன் உன் முகம் பார்த்து
எனையே மறந்து சொல்ல மறந்தேன் பின்பு உணர்ந்தேன் என் சுமை நீங்கியதை, உன் அருளுக்கோர் எல்லையில்லையே கடம்பா
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
🙏🦚🐓