திருநீற்றுச் சுவடு
612 views
3 days ago
#✡️ஜோதிட பரிகாரங்கள் #📅பஞ்சாங்கம்✨ #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️தோஷ பரிகாரங்கள் தோஷம் நீக்கும்* *சுயம்பு நாகப்பா கோயில்* 🌹 ஜாதகத்தில் சில கிரகங்களில் நிலை சரியில்லாமல் இருந்தாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும், நமக்கு தோஷங்கள் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம், லக்னம் 2,5,7,8, 12ம் இடங்களில் இருக்கும் பட்சத்தில், அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது. நாகங்களுக்கு கேடு விளைவிப்பதன் மூலம் ஏற்படும், தோஷமே நாக தோஷம் என்று சொல்லப்படுகிறது. நாக தோஷத்தை நீக்கும் கோவிலாக, சுயம்பு நாகப்பா கோவில் அமைந்து உள்ளது. சிக்கனஹள்ளி கிராமத்தில் இக்கோவில் உள்ளது. கோவிலில் உள்ள பாறையில் துாங்கும் நிலையில் இரண்டு நாகங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அதற்கு தினமும் பூஜைகள் நடக்கிறது. கோவிலுக்கு சென்று நாக சிலைகளை வழிபட்டால், தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலுக்கு சென்று வந்த பின் தங்கள் வாழ்வில் அதிசயங்கள் நடந்ததாகவும், சில பக்தர்கள் கூறியுள்ளனர். நாக சிலைகளை வழிபடுவதன் மூலம் திருமண தடை, குடும்ப பிரச்னை, பண இழப்பு, ஆரோக்கிய குறைபாடு நீங்குவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். கோவில் நடை எப்போதும் திறந்தே இருக்கும். நாக சிலைகளுக்கு, பக்தர்கள் தாங்களாகவே பூஜை செய்து வழிபடலாம். பெ ங்களூரில் இருந்து சிக்கனஹள்ளி கிராமம் 51 கி.மீ., சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, மாண்டியா செல்லும் பஸ்சில் சென்று, ராம்நகரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு செல்லலாம். கார், பைக்கில் செல்வோர் தங்கள் வாகனங்களை நிறுத்த, கோவில் முன் வசதி உள்ளது🌹 #🔍ஜோதிட உலகம் 🌍