ரவிசங்கர் ராஜா, ஆரணி
745 views
16 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ===================== திருமந்திரம் _______________ ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம் ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓம்கார சீவ பரசிவ ரூபமே பொருள்:- நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் ஓம் என்னும் பிரணவத்திலிருந்தே உண்டாயின – ஓம்காரத்திலிருந்துதான் அசையும், அசையாப் பொருட்கள்உண்டாயின. ஓம் எனும் பிரணவத்துள்ளே விஞ்ஞானகலர் (ஆணவ மலம் பற்றிய ஆன்மா). பிரளயாகலர் (ஆணவம், கன்மம் இரண்டும்), சகலர் (ஆணவம், கன்மம், மாயை ஆகியமும்மலங்களும் பற்றிய ஆன்மா) ஆகிய மூன்று வகைப்பட்ட உயிர்களும் ஒடுங்கியுள்ளன. ஓம்காரம் என்பது சிவ சொரூபமாகவும் பரசிவவடிவமாகவும் அமைந்தது. ஓம் எனும் பிரணவம் மந்திரம் மட்டும் அல்ல; மகேசனின் உருவமும் ஆகும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்