ரவிசங்கர் ராஜா, ஆரணி
616 views
2 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் தன் வினைதான் தன்னைச் சுடும்.!! #குதம்பைச்சித்தர்... "எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த #வினையின் #எதிர்வினை ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது. ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும். அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம். ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார். "தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார் சிந்தை தெளிந்திலரேகுதம்பாய் சிந்தை அதளிந்திலரே." #குதம்பைச்சித்தர் - "பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்ககு உறுமென்றால் வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய் வெள்ளறிவு ஆகுமடி." -#குதம்பைச்சித்தர் - “என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும். "என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும். "இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் #குதம்பைச்சித்தர். #ஓம் #நமச்சிவாய... #விழிப்புணர்வு எப்போது பிறக்கும் ?? நீங்கள் நீங்களாக இருக்க கூடாது என்பதற்காக எப்படி எல்லாம் கையளபடுகிறீர்கள் என்று நீங்களே அனுபவித்து உணரும் தருணம்.. உங்களுக்கு விழிப்புணர்வு என்று ஒன்று இருக்கிறது என்று தெரியும் தருணமே... நீங்கள் நீங்களாக சிந்திக்க வெளிப்பாடும் உணர்வே விழிப்புணர்வு.. அதுவரையில் யார் என்ன சொன்னாலும் நீங்கள் அவர் உணர்வை வேண்டுமானால் எற்றுகொள்ளலாம்... அது உங்களுக்கான விழிப்புணர்வு இல்லை என்பது தான் மெய்... செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்து பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் #இழப்புகள் என்று பொதுப்படையாக சொல்லி விடுகிறோம், ஆனால் இழப்புகள் வழியே பெற்றதை உணர மறுக்கிறோம் !! இழப்புகள் வழியே பெற்றது எல்லாமே !! என்றுமே , எதிலுமே இழக்கவே முடியாத பக்குவங்கள் தான் , வெளியே இழந்தது உள்ளே கொடுத்துவிட்டு தான் இழந்தது !! இழப்பு வழியே பெற்றது தான் அனைத்துமே !! எதையோ ஏமாந்தது தொலைத்தல் அது இழப்பு என்று சொல்கிறோம் என்று வைத்து கொள்வோம் , ஆனால் அந்த இழப்பு வழியே எப்படி ஏமாற கூடாது என்பதை பெற்றோம் தானே !! சுவாசம் இழந்து சுவாசம் பெறுவது போல , யாவும் பரிமாற்றமே இங்கு , கொஞ்சம் ஆழ்ந்து உணர்ந்தால் இழப்பே நம் பிழைப்பு என்ற மெய் புரியும் , மெய் புரிய வாழ்த்துகள் .. சுமப்பது இன்பம் என்று ஏமாறும் உலகில் .. இழப்பதே விடுவிப்பான பேரின்பம் என்று மெய்யுணர்ந்தோர் மிக சிலரே .. நம்மையே நாளும் கொஞ்சம் , கொஞ்சமாக இழந்து .. முழுவதாய் இழப்பது தானே வாழ்க்கை .. எதையோ இழப்பதுபோல காட்டி .. உன்னையே இழந்துகொண்டு இருக்கிறாய் .. ஆதலால் பரிபூரணமாய் அனுபவித்து வாழு என்றே எல்லா இழப்புகளும் நமக்கு அறிவுறுத்துகின்றது .. தன்னையே இழந்துகொண்டு இருப்பதோ .. இப்போது இழந்துகொண்டு இருப்பதை உணராதே .. என்றோ இழந்ததை எண்ணியே ஏங்கி .. இப்போது பெற்று அனுபவிப்பதை , உணராதே இழந்து கொண்டு இருக்கின்றது என்பது தானே மெய் .. திருச்சிற்றம்பலம் தோற்கும் போது, அதுதான் நமக்கு, இறுதியென, உறுதி செய்துவிடாதே, ஏனென்றால் இங்கு, இறப்பை தவிர, இறுதியானதும், உறுதியானதும் நமக்கு, வேறொன்றுமில்லை.. சந்தோஷம் இருக்கனும். சந்தேகம் இருக்கக்கூடாது..! அன்பு இருக்கனும் ஆணவம் இருக்கக்கூடாது..! கண்டிப்பு இருக்கனும் கட்டாயம் இருக்கக்கூடாது..! விருப்பம் இருக்கனும் வெறுப்பு இருக்கக்கூடாது..! நம்பிக்கை இருக்கனும் நடிப்பு இருக்கக்கூடாது சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் நாம் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லாத போது வரக்கூடியது தான் தோல்வி... வெற்றியும், தோல்வியும் நிரந்தரமல்ல... தொடர் முயற்சி ஒருபோதும் தோற்பதில்லை ஓடு... மீண்டும் வேகமாக ஓடு ஜெயிப்பாய் 🥰 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏 அப்பர் பெருமான் அருளிச் செய்த ஐந்தாம் திருமுறை பதிகம் - 41 தலம் - திருப்பைஞ்ஞீலி *காவிரி வடகரைத் தலங்களில் அறுபத்து ஓராவது தலம்* *இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்.* *இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.* *பண் - திருக்குறுந்தொகை* *திருச்சிற்றம்பலம்* உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே. மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்; பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே. விழுது சூலத்தன்; வெண்மழுவாட்படை கழுது துஞ்சு இருள் காட்டுஅகத்து ஆடலான்; பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர்தம் வினை தூளியே. ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார்! இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே. வேழத்தின்(ன்)உரி போர்த்த விகிர்தனார் தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர் தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; யாழின் பாட்டை உகந்த அடிகளே. குண்டுபட்டு குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து உய்யப் போந்து நான் கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தெனே. வரிப் பை ஆடுஅரவு ஆட்டி மதகரி- உரிப்பை மூடிய உத்தமனார் உறை திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர் வானவரோடு இனிதுஆகவே. கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் ஆடும் நாகம் அசைத்த அடிகளே. கார் உலாம் மலர்க்கொன்றைஅம்தாரினான் வார்உலாம்முலைமங்கை ஓர்பங்கினன் தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே! தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே. *திருச்சிற்றம்பலம்* #புகழ்ச்சியில் வளர்பவருக்குத் தான் பிறர் துணை தேவை. முயற்சியில் வளர்பவருக்குத் #தன்னம்பிக்கையே துணை. வாழ்த்தியவர்களை விட, #வீழ்த்தியவர்களே நாம் முன்னேற மிகப்பெரிய #தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் வாழ்த்தியவர்கள் தூண்டியது #தன்னம்பிக்கையை. வீழ்த்தியவர்கள் தூண்டியது நம் #தன்மானத்தை. உங்களை வீழ்த்தியவர் விழிபிதுங்கிப் பார்க்கும் வளர்ச்சியை எட்டுங்கள். உங்கள் முயற்சிக்கு வெற்றியின் வாசல் திறந்தே இருக்கிறது வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர்.. ஊற்றித் தான் ஆகவேண்டும். #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #தெய்வீக சிந்தனைகள் #ஆன்மீகம் #பக்தி கதைகள்