காலை சிவசிந்தனை
====================
பகவான் ருத்ரர் ஆயிரம் கண்களை உடைய பரமபுருஷர் என்று ஶ்ரீ அதர்வ வேதமும்,ஶ்ரீ வாயுமஹாபுராணமும் கூறுகின்றன.
ஶ்ரீ அதர்வ வேதம்:
11.2.7.நாங்கள் வலிமையான வில்லாளியும்,நீலநிற கேஶசத்தை உடையவரும்,ஆயிரம் கண்களை உடையவரும்,அர்தகனை வதைத்தவருமான அந்த ருத்ரருக்கு எதிரானவர்களாக எப்போதும் ஆகாதிருப்போமாக.
11.2.17.நாம் நமது நாக்குகளால்(தவறான சொற்களைக் கூறி) பரந்த பார்வையை உடையவரும்,ஆயிரம் கண்களை உடையவரும்,பரந்த ஞானத்தை உடையவரும்,தனது அம்புகளை முன்னோக்கி வெகுதூரத்திற்கு எய்பவருமான ருத்ரரைக் கோபம் கொள்ளச் செய்யாதிருப்போமாக.
"11.2.7.அஸ்த்ரா நீலஶிகண்டேன ஸஹஸ்ராக்ஷேண வாஜினா|
ருத்ரேணார்தககாதினா தேன மா ஸமராமஹி||
11.2.17.ஸஹஸ்ராக்ஷமதிபஶ்யம் புரஸ்தாத்ருத்ரமஸ்யன்தம் பஹுதா விபஶ்சிதம்|
மோபாராம ஜிஹ்வயேயமானம்||"
ஸ்ரீ வாயுமஹாபுராணம்:
அத்யாயம்-97:
மஹரிஷி ப்ருகு செய்த சிவஸ்துதியிலிருந்து,
97.167-168.ஆயிரம் கரங்களை உடையவரும்,நிர்மலமான ஆயிரம் கண்களை உடையவரும்,ஆயிரம் வயிறுகளை உடையவரும்,ஆயிரம் கால்களை உடையவரும் ஆன தமக்கு நமஸ்காரம்.ஆயிரம் தலைகளை உடையவரும்,பல வடிவங்களை உடையவரும்,படைப்பவரும்,பவரும்,விஶ்வரூபரும்,வெண்ணிறத்தவரும்,புருஷரும் ஆன தமக்கு நமஸ்காரம்.
"97.167.ஸஹஸ்ரபாஹவே சைவ ஸஹஸ்ராமலசக்ஷுஷே|
ஸஹஸ்ரகுக்ஷயே சைவ ஸஹஸ்ரசரணாய ச||
168.ஸஹஸ்ரஶிரஸே சைவ பஹுரூபாய வேதஸே|
பவாய விஶ்வரூபாய ஶ்வேதாய புருஷாய ச||" 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்