saravanan
618 views
9 days ago
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 211...!* ஒன்பதான வாசல்தா னொழியுநா ளிருக்கையில் ஒன்பதாம் ராமராம நாமமென்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோ யடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கி லாய்ந்தமைந் திருப்பதே. 211 *பொருள் விளக்கம்:* ஒன்பது வாசல் கொண்ட உடல் ஒரு நாள் அழியும் என்ற உண்மை உணர்ந்து எந்நேரமும் இராமநாமம் செபித்து அவனைச் சரண் அடையுங்கள். இராமநாமம் செபிக்காத வஞ்சகர்களின் நாவில் நோய் வரும். அப்பொழுதும் அவர்களால் இராமநாமம் செபிக்க இயலாது. இராமனை வணங்கும் அன்பர்களின் நாவில் சதா சர்வகாலமும் இராமநாமம் ஒலிக்கும். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪