#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵
*ஸ்ரீ:*
*ஸ்ரீமதே ராமாநுஜாய நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛
*ஸ்ரீமத் வரவரமுநயே நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*பெரியாழ்வார் திருமொழி...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
*பாசுரம்:152...!*
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
*விளக்க உரை:*
***- கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.
*🌹பாடல் என் :153 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹*
*🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏*
*🙏ஓம் நமோ🙏*
*🙏நாராயணா🙏*
*தொடரும்...*
🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧