saravanan.
516 views
17 hours ago
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:152...!* வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன் எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய் *விளக்க உரை:* ***- கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய். *🌹பாடல் என் :153 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧