Arunachalam
600 views
1 days ago
எப்பொழுதெல்லாம் முதலாளித்துவம் நெருக்கடியை சந்திக்கின்றதோ அப்போதெல்லாம் அதன் இருப்பைக் காப்பாற்ற புதிது புதிதாக ஒருவரை ஆபத்பாந்தவனாக உருவாக்கி சமூகத்தில் உலவவிடும். மக்கள் தமக்கு ஏற்படும் அதிருப்திக்கான நேரடியான காரணிகளை கண்டறியவிடாமல் தடுத்து, அவர்களுக்கு ‘எல்லாம் வல்ல மீட்பர்’ என ஒருவரை உருவாக்கி அவர்கள் தலையில் திணிக்கும். தனியார்மய, தாராளமயத்தின் உழைப்புச் சுரண்டலால். அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பெரும்பாடுபடும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்நிலை மாறாதா என்று மாற்றத்தை நோக்கி எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே. அப்படி மாற்றத்தை நோக்கும் மக்களை திசை திரும்பி போராடாமல் தடுக்க, இத்தகையவர்களை முதலாளித்துவம் உருவாக்குவது ஒன்றும் புதிதல்ல! இதன்படியே "விஜய்" போன்ற ஒரு நடிகர், கொள்கை கோட்பாடு எதையும் முன்வைக்காமல், எதை மாற்றப் போகிறோம் எவ்வாறு மாற்றப்போகிறோம் என்ற எந்த வழிமுறையையும் கூறாமல், தான் வந்தாலே மாற்றம் வந்து விடும் என்று நம்பவைத்து ஆட்சிக்கு வந்துள்ளார். உண்மையில், இப்படியொரு நாயக பிம்பத்தின் மூலம் முதலாளித்துவம் தன்னை எதிர்க்கும் புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக விஜயின் நாயக பிம்பம் மூலம் ஒரு அகழியை உருவாக்கி, அதையே மக்களை பாலாறு என்று நம்பவைக்க முயற்சி செய்கிறது. உண்மை புலப்படும் நாளில் அந்த அகழிகளை தாண்டி முதலாலிகளின் கோட்டையை மக்கள் சக்தி உடைத்தெறியும். #tvkvijay #Tvk #senkanal #capitalism #tvkitwing #👨மோடி அரசாங்கம்