ஜாதக நோட்டை தூக்கிக்கொண்டு ...
அவரவர் விதியை அறிவதற்காக ஜோதிடரை சந்திக்கும் முன்..
ஜாதகத்தில் உள்ள முக்கிய விதிகளில் .....மூன்றை மட்டும் ஜாதகர் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
ஏனெனில்..
ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து ஜோதிடரின் தரத்தை அறிவதற்கு முன்.
தன்னுடைய சுயத்தை அவரவர் அறிந்து வைத்திருப்பது
அவரவர்
கொடுப்பினையை புரிந்து கொள்ள உதவும்.
பொதுவாக....
எந்த ஒரு ஜாதகத்திலும்
1,5,9 என்கிற திரிகோணாதிபதிகளின் நிலை
மிக முக்கியம்.
ஏனெனில்....
இதுவே ஒரு மனிதனை கம்பீரமாக வலம் வரச் செய்து எந்த சூழ்நிலையிலும் தடம் புரளாமல் நிலையாக நிறுத்த கூடியது..
இதில்....
1 என்பது லக்னம்.
இது மூளையை குறிக்கும்
ஒருவர் மூளையில் தேக்கி வைத்திருக்கக் கூடிய அறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக வெற்றி பெற்று அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வதற்கு லக்னாதிபதியின் பலம்
மிக மிக அவசியமாக உள்ளது..
5 அதாவது பூர்வ புண்ணியாதிபதி.
இது......
இதயத்தை குறிக்கும்
பொதுவாக.....
மனசாட்சி மனசு மனதிற்கு பிடித்தவர்கள் இருக்கும் இடம். அது மட்டுமல் வாழையடி வாழையாக வழிபடக்கூடிய குலதெய்வத்தை குறிக்கக்கூடிய பாவகமும் இதுதான். மேலும் இதயம் சரியாக இயங்கினால் மட்டுமே ஒருவர் உயிர் வாழ முடியும் என்பதால் ஐந்தாம் அதிபதியின் பலம் அவசியமாகிறது.
இறுதியாக..
9 ஆம் அதிபதி அதாவது பூர்வ புண்ணியாதிபதி....
அதிர்ஷ்டங்கள் அனைத்தையும் மொத்தமாக தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கக் கூடிய ஒரு கிரகம்.
இது...
மனிதனுடைய தொடை பகுதியிலிருந்து ஆரம்பித்து
முதுகு தண்டுவடத்தை தாங்கி பிடித்திருக்கக்கூடிய இடுப்பு எலும்பு வரையிலான பகுதியை குறிக்கிறது....
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...
ஆம்..
வசதியாக அமருவதற்கும்
நிமிர்ந்து நிற்பதற்கும்
ஒன்பதாம் அதிபதி பலம்
அவசியமாகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால்
1,5,9 என்கிற திரிகோணாதிபதிகள்..
ஒரு மனிதன்
சிந்தனை வளத்தோடு
தெளிந்த மனத்தோடு
வீறு நடை கொண்டு
வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி புரியும்.
இன்னும் புரியும் படி சொல்ல போனால்....
லக்னாதிபதி வலு
தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை செய்கிறது.
ஐந்தாம் அதிபதி வலு
ஜாதகரின் தன்னம்பிக்கையை
குலதெய்வ அருளினால்
வெற்றி பெற வைத்து
மனம் மகிழ செய்யும்.
ஒன்பதாம் அதிபதி வலு..
தன்னம்பிக்கையையும்
வெற்றியையும் மகிழ்ச்சியையும்
தாங்கி பிடித்திருக்க கூடிய
தூணாகவும்.
ஜாதகருக்கு தேவையான அதிர்ஷ்டத்தை அவ்வப்போது வழங்கக்கூடிய தேனாகவும்
இருக்கும்.
1,5,9 இது மூன்றும் சரியாக இருந்தால்.....
புத்தம் புதிய வாகனத்தை போல வாழ்க்கை சீராக இயங்கும்.
இதில் ஏதேனும் இரண்டு மட்டும் சரியாக இருந்தால்
5 வருட பழமையான வாகனத்தை போன்று இயங்கும்.
ஒன்று மட்டும் சரியாக இருந்தால்...
15 வருட பழமையான வாகனத்தை போன்று இயங்கும்
மூன்றுமே சரி இல்லாத பட்சத்தில்...
ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத வண்டி போல ஆகிவிடும்.
இதை எப்பொழுதும் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது என்பது...
நம்முடைய கொடுப்பினையை நாமே புரிந்து கொள்வதற்கும்
தேவையில்லாத புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகாமல் இருப்பதற்கும் ...
இது உங்களுக்கு உதவும்.
குறிப்பாக முக்கியமாக சுருக்கமாக....
1,5,9 திரிகோணத்தின்
மூலமாக....
ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்.
இதன் மூலம் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய பெருமைகள் ஏராளம்.
குறிப்பாக இதன் மூலம் மனிதர்கள் அடைந்த பொருளாதார உயர்வு ஏராளம்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍#👉🏼இன்றைய ராசிபலன்✡️#🚹உளவியல் சிந்தனை#✡️தோஷ பரிகாரங்கள்#✡️ஜோதிட பரிகாரங்கள்
ஐந்தில் தனித்த கேது இருந்து குழந்தைகள் பிறந்தாலும் அந்த குழந்தைகளால் எதிர்காலத்தில் எவ்வித பயனோ பலனோ இருக்காது.
ஐந்தில் தனித்த குரு இருந்து
குழந்தைகள் பிறந்தாலும் அந்த குழந்தைகளால் எதிர்காலத்தில்
எவ்வித பயனோ பலனோ இருக்காது.
ஒரு குடும்பத்தில் ...
யாருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியாதிபதி
லக்னத்தில் இருக்கிறதோ
அவரிடமே பெரும்பாலான சொத்துக்கள் சென்று சேரும்.
லக்னத்தில் ராகுவோ கேதுவோ இருக்கும் பட்சத்தில்
அவருக்கு வரன் பார்க்கும்போது...
லக்னத்தில் ராகு இருக்கும் நபருக்கு லக்னத்தில் கேது இருக்கக்கூடிய பெண்ணையோ ஆணையோ பார்க்க வேண்டும்.
அதேபோல
லக்னத்தில் கேது இருக்கும் நபருக்கு
லக்னத்தில் ராகு இருக்கக்கூடிய பெண்ணையோ ஆணையோ பார்க்க வேண்டும்.
இது போன்ற அமைப்பு முதல் தர பொருத்தம் ஆகும்.
சனி கேது இணைவு உடையவர்கள்
சிறிய அளவிலான பிள்ளையார் கோவிலை நிறுவி பராமரித்து வருவதன் மூலம்
வாழ்விலும் தொழிலிலும்
வெற்றிகளையும் வசந்தங்களையும் அடைவார்கள்.
மனிதனுக்கு இன்றியமையாத பணம் என்கிற ஒரு ஜடப் பொருளை அடைவதற்கு.....
தன காரகன் குருபகவானே காரகமாகிறார்.
எனவே அவர் ஒரு ஜாதகத்தில்
எந்த நிலையில் இருக்கிறார்.
எந்த கிரகத்துடன் இணைந்து இருக்கிறார்.
எந்த பாவகத்தில் இருக்கிறார்.
என்பதை ஆராய்ந்து
அதன் வழிகளில் நீங்கள் பணம் சம்பாதிக்க முற்பட்டீர்களேயானால்
பணத்தை தாராளமாக சம்பாதிக்கலாம்.
லக்னத்தில் பாவ கிரகங்கள் சுபத்துவம் அடையாமல் இருக்கும் பட்சத்தில்
தியாக மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அதாவது தன்னை அலங்கரித்துக் கொள்வதிலோ தனக்கு தேவையான விஷயங்களை மீதோ நாட்டத்தை குறைத்துக் கொண்டு...
லக்கின புள்ளி எந்த கிரகத்தின் உடையதோ அந்த கிரகம் எந்த பாவகத்திற்குரியதோ அவர்களுக்காக அல்லது அதற்காக
தியாக உணர்வுடன் வாழ்ந்து வந்தால் வாழ்வு இனிக்கும்.
லக்னாதிபதி 12 இருப்பவர்கள் ஏமாளிகள்.
இவர்கள் ஏமாற்றும் நபர்களிடமிருந்து கவனமாக இருப்பது இவர்களுக்கு நல்லது.
லக்னாதிபதி எட்டில் இருப்பவர்கள்
லாட்டரி சூதாட்டம் குறுக்கு வழி திடீர் அதிர்ஷ்டம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்கும்.
கால புருஷ தத்துவத்திற்கு எட்டாம் பாவமான விருச்சிகம் சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில்....
அது அவர்களுக்கு நிறைவேறும்.
சூட்சம வலு எனக்கூடிய
கேது உடன் இணைந்த கிரகம்
கேதுவை தாண்டிய நிலையில்
10 டிகிரிக்கு மேல் இருந்தால்
அந்த கிரக ஆதி பத்திய காரகத்துவம் அதிகரிக்கும்.
குறிப்பாக கேது உடன் இணைந்த அந்த கிரகத்துடைய தசையில் அல்லது புக்தியில் ஜாதகரிடம் தென்படும்.
லக்னத்திற்கு ஒன்பதாம் பாவகத்தில் கேது இருந்தால் தகப்பனாருடைய ஆதரவு பெருமளவில் இருக்காது
அதேபோல பூர்வீக சொத்து என்று பெரும்பாலும் இருக்காது.
லக்னத்திற்கு ஒன்பதாம் பாவகத்தில்
ராகு இருந்தால் தகப்பனாருடைய ஆதரவு பெருமளவில் இருக்கும்.
அதேபோல தகப்பனாருக்கு சொத்து இருக்கும் ஆனால் அது வில்லங்கத்தில் இருக்கும் அல்லது
வில்லங்கத்தை சந்திக்கும்.
அடக்கமாகும் வரை அடக்கமாக இருப்பது லக்னத்தில் பாவ கிரகங்கள் இருப்பவர்களின் வாழ்க்கைக்கு நல்லது.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Only WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள்#✡️தோஷ பரிகாரங்கள்#🚹உளவியல் சிந்தனை#👉🏼இன்றைய ராசிபலன்✡️#🔍ஜோதிட உலகம் 🌍
நேரம் காலம் சாதகமாக இருப்பவரை அதிர்ஷ்டசாலி என்கிறோம்.
( 5,9, ஆம் அதிபதி தொடர்பை பெற்ற தசாபுத்தியை அனுபவித்துக் கொண்டிருக்க கூடிய நபர் )
நேரம் காலத்திற்காக காத்துக் கொண்டும். அதுவரை முயற்சி செய்து கொண்டும். இருப்பவர்களை முயற்சியாளர்கள் என்கிறோம்.
( லக்னாதிபதி வலுப்பெற்ற அதேசமயம் யோக தசைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடிய நபர்)
வந்த வாய்ப்புகளையும்
வருகின்ற வாய்ப்புகளையும்
தவறவிட்டவர்களையும்.
வாழ்க்கையில் ஒரு முறை கூட நேரம் காலம் வராதவர்களையும் துரதிஷ்டசாலி என்கிறோம்.
( லக்னாதிபதி வலுவில்லாத மேலும் தொடர் அவயோக தசா புத்தியை அனுபவித்துக் கொண்டிருக்கிற நபர்)
நேரம் காலத்தைப் பற்றி
சிறிதும் கவலைப்படாமல்
கடமையே கண்ணாய் இருப்பவர்களை
உழைப்பாளி என்கிறோம்.
( ஜாதகத்தில் 6,10 ஆம் இடங்கள் மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் இருக்கக்கூடிய நபர்கள் )
பொதுவாக...
உங்களுடைய பொருளாதார தேவைக்கான பணக்கட்டுகள்.
நீங்கள் விரும்பி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற
வாய்ப்புகள்.
இது போன்ற ...
ஒருவருடைய ஆசைகள் தேவைகள் பிரார்த்தனைகள் அனைத்தும்...
இறைவனிடம் கோரிக்கை வைத்த அடுத்த நொடியே
அனைத்தும் தயாராகிவிடும்.
ஏனெனில் ...
இறைவன் யாருக்கும் எதையும் இல்லை என்று சொல்வதில்லை.
இருப்பினும்.,...
ஒருவர்...
அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் உண்டான தகுதியையும் பக்குவத்தையும் அடைந்த பிறகு மட்டுமே...
அதற்குரிய நேரம் காலத்தில்
இறைவன் ஒருவருக்கு அவர் விரும்பியதை தருவார்.
அதுபோல..
அனைவருக்கும் ...
இரண்டு கண்கள்
இரண்டு காதுகள்
இரண்டு கைகள்
இரண்டு கால்கள்
என்று..
மனித உருவில் பூமியில்
பிறந்து விட்டாலும்.
மனிதனாக இல்லாமல் மிருகங்களாகவும் இருக்கிறார்கள்.
மனிதரில் மாணிக்கமாகவும் இருக்கிறார்கள்.
மனிதனாக பிறந்து மகன்களாகவும் மாறுகிறார்கள்.
மகாத்மாவாகவும்
வாழ்ந்து விட்டு செல்கிறார்கள்.
யாராக இருந்தாலும் ..
ஜீவாத்மாவான நாம்
பரமாத்மாவிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே...
பரம் பொருள் என்கிற ஜோதியில் ஐக்கியமாக முடியும்.
ஜோதிடர்
Jaya Kannan
WhatsApp 78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍#👉🏼இன்றைய ராசிபலன்✡️#🚹உளவியல் சிந்தனை#✡️தோஷ பரிகாரங்கள்#✡️ஜோதிட பரிகாரங்கள்
ஒரு குடும்பத்தில் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த அனேக நபர்களை....
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த
ஒருவர் சமாளித்து விடுவார்.
ஆனால்...
இதுவே...
ஒரு குடும்பத்தில் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த ஒருவரை.
ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்கள் பலர் இருந்தாலும்
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவரை சமாளிக்க முடியாது..
அதற்கு காரணம்,..
ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஆசையை தேவையை...
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களால்
இவர்களின் ஆழ்ந்த ஞானத்தின் மூலம் அறிந்து
பிறருடைய ஆசையை தேவையை எளிதாக பூர்த்தி செய்து விட முடியும்..
ஆனால்...
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஆசை என்ன தேவை என்ன என்பது..
அவர்களுக்கே தெரியாத போது...
மாயையில் இருக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கக் கூடியவர்களுக்கு.
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஆசையை தேவையை புரிந்து கொள்ளவும் முடியாது பூர்த்தி செய்து விடவும் முடியாது.
ஏனெனில்,
ராகு என்பது
மனிதர்களின் நடவடிக்கைகளில் வெளியே தெரியக்கூடிய ...
சத்தமாக சிரிப்பது, ஆசைப்படுவது, பொருளுக்காக ஏங்குவது, கோபப்படுவது,
போன்ற...
(ரஜோ)குணம்போல ஆகும்.
கேது என்பது
சராசரி மனிதர்களுக்கு புரியாத
ஞானிகளின் குணங்களை உடைய...
நிசப்த அமைதியில் இருப்பது.
ஆழ்ந்து யோசிப்பது,
அனைத்து உயிர்களும்
ஒரு மிகப்பெரிய ஒளியிடமிருந்து பிறந்த
ஆத்மாக்கள் என்கிற உண்மையை உணர்ந்து கிடப்பது.
போன்ற...
(சாத்வீக) குணம் போல ஆகும்.
கட்டண முறையில்
ஜாதக பலனை அறிய
ஜோதிடர்
Jaya Kannan WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள்#✡️தோஷ பரிகாரங்கள்#🚹உளவியல் சிந்தனை#👉🏼இன்றைய ராசிபலன்✡️#🔍ஜோதிட உலகம் 🌍
சனியும் செவ்வாயும் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும்.
ஒரு ஜாதகத்தில் இவர்கள் இருவரும்
சுப ஆதிபத்தியத்திற்கு உரியவர்களாகவும் இருக்கும் பட்சத்தில்....
சனி செவ்வாய் கலப்பில்லாத..
அதே சமயம்...
வலுப்பெற்ற சனி செவ்வாயாக
இருந்து....
சுப ஆதிபத்தியத்தின் மீது விழும் பார்வை....
சுப ஆதிபத்திய வீட்டிற்குரிய பலனை தரவே செய்யும்.
இதில் ...
சனியும் செவ்வாயும்
ஒருவருடைய லக்னத்திற்கு..
இரு வேறு ஆதிபத்தியத்திற்கு உரியவர்களாகவே இருந்தாலும்..
இவர்களுடைய பார்வையில்
ஒன்று...
அசுப ஆதிபத்தியத்திற்கு உரிய பலனை தந்தாலும்.
அதே சமயம் இவர்கள் இருவரும்
சுப ஆதிபத்தியத்திற்கு உரியவர்களாகவும் இருப்பதால்..
இவர்களுடைய பார்வையில் மற்றொரு பலனானது...
சுப ஆதிபத்தியத்திற்கு உரிய நல்ல பலனையும் தரும்...
கட்டண முறையில்
உங்களுடைய #✡️ஜோதிட பரிகாரங்கள்#✡️தோஷ பரிகாரங்கள்#🚹உளவியல் சிந்தனை#👉🏼இன்றைய ராசிபலன்✡️#🔍ஜோதிட உலகம் 🌍
ஜாதக பலனை அறிய
ஜோதிடர்
JayaKannan
78100 22628
பேரதிர்ஷ்டமும், பேராபத்தை விளைவிக்கக் கூடிய கண்டமும் வாழ்வில் ஒரு முறை தான் வரும்...
ஒரு முறை நிகழ்ந்த அதிர்ஷ்டம்.. திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதும்.
ஒரு முறை ஏற்பட்ட கண்டம்..
திரும்பவும் நிகழும் என்று
வாழ்நாள் முழுவதும் பயந்து கொண்டே இருப்பது..
என்பது..
வீணான ஒன்று...
பொதுவாக...
பேரதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதும்.
பேராபத்து எனும் கண்டத்தை கொடுக்கக் கூடியதும்...
எட்டாம் பாவகத்திற்கு உரிய கிரகமே....
இவர்
ஒரு ஜாதகத்தில் ...
சுபத்துவமாக இருந்து தசை நடத்தும் போது பேரதிர்ஷ்டத்தையும்.
பாவத்துவமாக இருந்து தசை நடத்தும் போது
ஆபத்தை விளைவிக்கக்கூடிய கண்டத்தையும்.
ஏற்படுத்தும் என்பது
பொதுவான கருத்தாக இருந்தாலும்.
இதனுடன் லக்னாதிபதி தொடர்பு பெற்றிருந்தால் மட்டுமே..
அது ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தையோ..
ஆபத்தை விளைவிக்க கூடிய கண்டத்தையோ ஏற்படுத்தும் .
அதே போல...
தசை முழுவதும் அது தொடருமா?.
என்றால்..
நிச்சயமாக கிடையாது.
குறிப்பிட்ட புத்தியில் மட்டுமே அது நிகழும்.
மேலும் குறிப்பாக....
ஒருவருக்கு அட்டமாதிபதி. பாவத்துவமாக இருந்து கூடவே லக்னாதிபதியின் தொடர்பையும் பெற்று ..
தசையும் நடந்து...
கண்டம் நிகழக்கூடிய புத்தியை கடந்து கொண்டு இருந்தாலும்..
அந்த காலகட்டத்தில்
கோச்சாரத்தில் ....
அட்டமாதிபதி சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில்....
கண்டங்கள் ஏற்படாமல் தடுத்து..
சூரியனை கண்ட பனி போல விலகி செல்லும்.
எனவே ஜாதகத்தில்
ஒரு சம்பவம்
நிகழும் என்று
உறுதிபட இருந்தாலும்..
லக்னாதிபதி வலுவினால் அதை எதிர்கொள்ள முடியும்.
பஞ்சமாதிபதி மற்றும். பாக்யாதிபதி வலுவினால்..
தற்காத்துக் கொள்ள முடியும்.
திசை திருப்ப முடியும்.
கோச்சார நிகழ்வினால்
திசை திருப்ப முடியும்.
இறைவன் மீது உளள தீராத பக்தியினாலும்...
இறைவனின் அருளினாலும்
அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ளவும்.
ஆபத்துகள் வராமலும் தடுத்துக்கொள்ள
முடியும்.
கட்டண முறையில்
ஜாதக பலனை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Only WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள்#✡️தோஷ பரிகாரங்கள்#🚹உளவியல் சிந்தனை#👉🏼இன்றைய ராசிபலன்✡️#🔍ஜோதிட உலகம் 🌍