Follow
Arunachalam
@463115585
14,522
Posts
53,057
Followers
Arunachalam
573 views
19 hours ago
உதயநிதியை கைது செஞ்சி வழக்கு பதிவு செய்த காவல்நிலையம் வரை அழைத்து செல்ல முடியாது வக்கற்ற போனது அவமானம்தான்....... காவிரி மேட்டர்ல ஆட்சியில் பங்கில் இருக்கும் கட்சியிடம் வாய தொறக்க முடியாத அளவு இருப்பதும் அதை மறைக்க பஞ்ச் டயலாக் பேசுவதும் அவமானம்தான் அதை திசை திருப்ப எம்பி பீட்டிங் போட்டோஷுட் காமெடி நடத்துவதும் அவமானம்தான்...... ஒரு போதை மருந்து பயன் படுத்தியதாக குற்றம் சாட்டபட்ட ஒரு நபரை மந்திரிசபையில் இருந்து மாற்ற முடியாதது ஒரு அவமானம்தான்....... ஒரு பெண் மந்திரி தனது அந்தரங்க வீடியோ இருப்பதாக சொல்லி சிலர் மிரட்டுகிறார்கள் என்றும் தன்னை எதிரப்பவர்களை கொன்றுவிடுவேன் என்று பேசும் அளவுக்கு பலவீனமான சட்ட ஒழுங்கை கையில் வைத்திருப்பதீ அவமானம்தான்........ ஒரே ஒரு பாராளுமன்ற மேல் சபை உறுப்பினர் கிடைத்தும் அதற்கு சரியான நபர் இல்லாமல் அதை காங்கிரசாருக்கு தாரை வார்த்து தமிழக உரிமையை டெல்லியில் குரலாக கூட ஒலிக்க வக்கற்ற ஒரு கட்சியை வைத்திருப்பது ஒரு அவமானம் தான்........ அவமானம்தான் ஆனா என்ன செய்ய இந்த அவமானத்துக்கு இதெல்லாம் அவமானம்னு புரியுற புத்தி இருக்கணுமே..... #கிழவனார் #👨மோடி அரசாங்கம்
Arunachalam
595 views
19 hours ago
இந்த உலகில் இவனைப்போல் கிறுக்கன்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். விவாகரத்து செய்யுங்கள் RSS கோரிக்கை..! ஸ்வயம்சேவகர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது. அதனால் தான் மோடி திருமணம் செய்யவில்லையோ..? திருமணம் மனிதனை குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ம வினைகளுடன் பிணைக்கிறது, திருமணத்தைத் தவிர்ப்பதன் மூலம் கர்மாவிலிருந்து தப்பலாம். ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் கூட விவாகரத்து செய்யுங்கள். நான் சொல்லித்தான், பிரதமர் மோடியின் வாழ்க்கையை மாற்றினார். ---ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் #👨மோடி அரசாங்கம்
Arunachalam
799 views
19 hours ago
அமைச்சர் ஆதங் அர்ஜுனா அவர்கள் சட்டமன்றத்தில் சொன்ன பொய்யும் நாம் கண்டுபிடித்த சில உண்மைகள் #👨மோடி அரசாங்கம்
Arunachalam
628 views
1 days ago
நடப்பதெல்லாம் நன்மைக்கே! ஒரு நெருக்கடியான சூழல் வரும் போது தான் நண்பன் யார்? துரோகி யார்? எனத் தெரிய வரும்! தொகுதி மறுவரையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அது பல வகைகளில் தமிழ்நாட்டிற்கு பின்னடைவைத் தரும். ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது எனும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதை தக்க வைப்பதில் தான் தமிழ்நாட்டின் தற்காப்பு உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பிக்கள், விசிக 2 எம்.பிகள், சிபிஐயின் 2 எம்.பிக்கள், சிபிஎம்மின் 2 எம்.பிக்கள், மதிமுக மற்றும் முஸ்லிம் லீக்கின் தலா ஒரு எம்.பி என மொத்தம் 20 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம கட்சிகளின் மொத்தம் 37 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுக, தேமுதிக, பாமக இந்த கூட்டத்தை புறக்கணிப்பது ஆச்சரியமல்ல. ஏனென்றால், அவர்கள் பாஜகவிற்கு கட்டுப்பட்டவர்கள். தொகுதி மறுவரையறைக்கு மறு பேச்சில்லாமல் மண்டை ஆட்டுபவர்கள் என ஏற்கனவே அறியப்பட்டவர்கள்! பாஜகவுக்கு ஆதரவானவர்கள் எடுக்கும் நிலைபாட்டையே திமுகவும் எடுக்கிறது என்பது கவனத்திற்கு உரியது. மத்திய பாஜக அரசு அமல்படுத்தவுள்ள தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து முதல்வர் விஜய் கலைவாணர் அரங்கில் கூட்டிய தமிழக எம்.பிக்களின் கலந்தாய்வு நிகழ்வில் பங்கெடுப்பதில் திமுகவுக்கு என்ன தான் பிரச்சினை? இந்த அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தற்கு திமுக சொல்லும் காரணம் ஏற்புடையதா? தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லையாம்…! திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் – அது இன்னும் கையில் கிடைக்கப் பெறாத நிலையில், இதில் விவாதிக்க எதுவும் இல்லையாம்! அப்படியானால், அன்றே நீங்கள் தொகுதி மறுவரையறை கூடவே கூடாது என ஆவேசமாக முழங்கியது ஏன்? அன்றும் இதே நிலை தானே இருந்தது! இங்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் – இந்தியாவில் யாருமே இதை பொருட்படுத்தாமல் விவரமான தகவல் வரட்டும் பார்க்கலாம் என காத்திருந்த போது திமுக மட்டும் முந்திரிக் கொட்டையாக, ''ஆகா, விட்டேனா பார்?'' என முழங்கியது ஏன்? இன்றைக்கும் அதே நிலைபாட்டை இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பிகள் எடுத்து வைத்து, ''தாங்கள் அதே நிலைபாட்டில் தான் உள்ளோம். அதில் மாற்றமில்லை'' என தமிழகத்தின் ஒற்றுமையை ஒன்றிய அரசுக்கு உணர்த்த என்ன தயக்கம்? சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் ''எந்தத் தகவலும் சரியாக இல்லாத போது இதில் எப்படி நாங்கள் முடிவெடுப்பது?'' என்றனர். ஏன் இந்த பின்னடைவு? யாரை திருப்திபடுத்த திமுக எம்.பிக்களின் குரலின் ஸ்ருதி குறைந்தது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொகுதி மறுவரையறை திட்டம் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் பாஜகவின் சதி என்றும், இந்த மறுவரையறையை ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் 'எட்டப்பர்கள்' என்றும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு துரோகம் செய்பவர்கள் என்றும் ஆகவே ஒவ்வொரு தமிழ் நாட்டு கட்சியும், தேசிய கட்சியும் தொகுதிமறுவரையறை மசோதாவை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் என்று பேசினார். உடனே திமுக எம்.பி தயாநிதிமாறனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது? ஏன்? குற்றமுள்ள மனசு குறுகுறுக்கிறதா? அப்படியானால் அன்று நீங்கள் பாஜகவை எதிர்த்து பேசிய பேச்சுக்களும், நடத்திய கூட்டங்களும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்யும் ஒற்றை நோக்கத்திற்கு தானா? அன்று பாசாங்கு அரசியல் செய்தவர்கள் இன்று பம்பி கிடக்கிறார்கள் எனலாமா? ''ராஜா, கண்ணு நீ எங்களை எதிர்த்து அடிச்சு என்ன வேணா கேம் ஆடிக்கோ. ஆனா, காரியம் என்று வரும் போது எங்களுக்கு கை கொடுக்க வேண்டும் புரிகிறதா?'' என்று பாஜக தலைமையின் கட்டளைக்கு ஏற்ப மறைமுக டீலீங் போட்டுக் கொண்டீர்களா? காங்கிரசும், இடதுசாரிகளும், விசிகவும், முஸ்லீம் லீக்கும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக அரசை ஆதரிக்கும் நிலை எடுத்த போது யாருக்குமே திமுக மீது விரோதமோ,பகைமையோ துளியும் கிடையாது. சந்தர்ப்ப சூழல் கருதி –தமிழ்நாட்டின் நலன் கருதி - தான் எடுத்தனர். ஆனால், அதையே சாக்காக வைத்து பகைத் தீயை வளர்த்தீர்கள், இந்தியா கூட்டணியில் இருந்தே விலகினீர்கள்! கூட்டாளிகளாக இருந்த நட்பு சக்திகளை வலிந்து ''துரோகி'' என முத்திரை குத்தினீர்கள்! ஆனால், தற்போது யார் துரோகி என்பது பாஜக எதிர்ப்பில் உறுதிபாடுள்ள அனைவருக்கும் வெள்ளிடை மலையாக விளங்கிவிட்டது. சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
Arunachalam
3.3K views
1 days ago
மொத்தத்துல தமிழ்நாட்டின் அரசியல் கந்தரகுலமாய் இருக்கிறது #👨மோடி அரசாங்கம்
Arunachalam
709 views
1 days ago
சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் நகர நாகரிகம் ஆகியவை வெறும் இலக்கியக் கற்பனைகள் அல்ல, அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்பதை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை ஆய்வுக்கூடம் வெளியிட்டு வரும் புதிய ஆய்வுகள் தெள்ளத் தெளிவாக உறுதிசெய்துள்ளன. கீழடி, கொந்தகை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய தொல்லியல் தளங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மனித எலும்புக்கூடுகளில் இருந்து 75,000க்கும் மேற்பட்ட மரபணு குறியீடுகள் (Genetic Markers) வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டு, மரபணு வரிசைமுறை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தெற்காசிய வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த பிரம்மாண்டமான DNA பகுப்பாய்வு, பழந்தமிழர்களின் மரபணுத் தொடர்ச்சியை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது. உலகளாவிய மனித மரபணு மாறுபாடுகளின் தொகுப்பான ‘1000 Genomes Project’ தரவுகளுடன் இந்த முடிவுகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. அதில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் மரபணுக்கள், இன்றைய தென்னிந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஒட்டுமொத்த தெற்காசிய மக்களுடன் மிக நெருங்கிய மற்றும் நேரடி மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் மரபணுத் தொடர்ச்சி எவ்வித இடைவெளியுமின்றித் தொடர்வது உறுதியாகியுள்ளது. மரபணு ஆய்வுகளுக்கு இணையாக, இங்கிலாந்தின் Liverpool John Moore பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டையோடுகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் அவர்களின் முக அமைப்பை மறுஉருவாக்கம் (Facial Reconstruction) செய்துள்ளனர். இதன்மூலம் சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை நாம் நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தொல்லியல் பானை ஓடுகளில் கண்டறியப்பட்ட புரதங்கள் மற்றும் உயிர்வேதியியல் படிவுகள் (Biochemical residues), அவர்களின் தினசரி உணவு முறையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. பானைகளில் கண்டறியப்பட்ட Cholesterol படிவுகள் அவர்கள் உணவில் இறைச்சி முக்கியப் பங்கு வகித்ததைக் காட்டுகின்றன. மேலும், பழந்தமிழர்கள் பல வகையான நெல் ரகங்களையும், தினை போன்ற சிறுதானியங்களையும் பயிரிட்டுப் பயன்படுத்தியுள்ளனர். பானை எச்சங்களில் கண்டறியப்பட்ட நெய், பருப்பு, கீரை, பால், வெள்ளரிக்காய், நிலக்கடலை மற்றும் தேங்காய் ஆகிய கரிம மூலக்கூறுகள், சங்க இலக்கியங்களான குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு மற்றும் பொருநராற்றுப்படை ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள உணவு முறையோடு நூற்றுக்கு நூறு கச்சிதமாகப் பொருந்துகின்றன. இலக்கிய வரிகளுக்கு அறிவியல் சான்றுகள் உயிர்கொடுத்துள்ள இந்த அரிய கண்டுபிடிப்புகள், விரைவில் சர்வதேச அறிவியல் இதழ்களில் விரிவான ஆய்வுக் கட்டுரைகளாக வெளியாகவுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டடங்கள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை அன்றைய தமிழர்களின் உயர்ந்த நகர நாகரிகத்தைச் பறைசாற்றுகின்றன. அதேபோல, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என Carbon Dating மூலம் தெரியவந்துள்ளது. இது உலகிலேயே மனிதன் இரும்பை உருக்கிப் பயன்படுத்திய மிகப்பழமையான காலக்கட்டங்களில் ஒன்றாகும். இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள், மரபணு ஆய்வுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லும் உண்மை ஒன்றுதான், தமிழினம் வெறும் பழமையான இனம் மட்டுமல்ல, உலக நாகரிகங்களின் விடியலிலேயே தன் முத்திரையை பதித்த தொன்மையான இனம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நகரமைப்பு, உயர்ந்த நெசவுத் தொழில், இரும்புத் தொழில்நுட்பம், எழுத்தறிவு மற்றும் வளமான வாழ்வியலைக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழர்களே, இப் பூவுலகின் மூத்த குடிகள் என்பதும், மனித குல நாகரிகத்தின் ஆதித் தொட்டில் தமிழ்மண்ணே என்பதும் இந்த மரபணுப் புரட்சியின் மூலம் ஆணித்தரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. #👨மோடி அரசாங்கம்
Arunachalam
600 views
1 days ago
தொகுதி மறுவரையறையை எதிர்த்து தென் மாநில முதல்வர்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்களே சட்ட முன்வடிவை தீவைத்துக் கொளுத்தினார். தமிழ்நாடு முழுக்க கருப்புக் கொடி ஏற்ற வைத்தார். திமுக பற்றவைத்த நெருப்பு ஒன்றிய பா.ஜ.க . அரசை அப்போதைக்குப் பின்வாங்க வைத்தது. திமுக அரசு அமைத்த ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் குழு கொடுத்த முதல்கட்ட அறிக்கையில் தொகுதி மறுவரையறைக்குத் தனிப் பகுதியே ஒதுக்கியிருக்கிறது. மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை எதிர்த்துத் திமுக நடத்திய போராட்டங்களையெல்லாம் கடைசி வரை கொச்சைப்படுத்தியது த.வெ.க. ஆளுநருக்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி 75 ஆண்டு கால குடியரசு வரலாற்றில் மாபெரும் சனநாயகத் தடையை அகற்றியது. நிதிப் பகிர்வில் பாகுபாட்ட்டை எதிர்த்து தில்லியில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் கலந்துகொண்டார். 16 வது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கு 50% நிதியினைப் பகிர வேண்டும் என நிதிக்குழுவின் தலைவரைச் சந்தித்து திமுக சார்பில் ஆவணங்களை அளித்தனர். ஒட்டுமொத்த மாநிலங்களில் திமுக மட்டுமே 16 வது நிக்குழுவில் அக்கறையான பரிந்திரைகளை வழங்கியிருக்கிறது என நிதிக்கழுவின் தலைவர் பனகாரியாவே பாராட்டினார். நூறுநாள் வேலைத்திட்ட உரிமையைப் பறிப்பதை எதிர்த்து திமுக அரசௌ சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானத்தை இயற்றியது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளுங்கட்சியாக மாறிய போதும் த.வெ.க அரசு மாநில உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு கண்டனத் தீர்மானம் கூட இயற்றவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர் பணியமர்த்தச் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் ஆளுநரின் விருப்பிற்கேற்ப யூஜிசி பிரதிநிதியைக் குழுவில் சேர்ப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. நேற்று நிறைவேற்றப்பட்ட நிதிப் பகிர்வு தீர்மானம் கூட ஒப்புக்கு நிறைவளற்றப்பட்ட தீர்மானம் அதில் கண்டனம் என்றோ , பா.ஜ.க அரசு என்றோ வரிகள் கூட இல்லை. காவிரி நீர்ச்சிக்கலில் த.வெ.க அரசின் தான்தோன்றித்தனமான முடிவின் காரணமாக கர்நாடகா அரசு தமிழ்நாட்டை ஏய்க்க நினைக்கிறது. கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி பெற்ற உரிமைகளை காங்கிரசின் தன்னலத்திற்கேற்ப அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் தனிக்கொடி தூக்க நினைத்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பலியிட்டு வருகிறது. த.வெ.க ஒன்றைத் தெளிவாக செய்கிறது. ஒன்றிய பா.ஜ.க அரசை பக்கத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஆட்சி அதிகார நலன்களுக்காக இந்தியா கூட்டணியில் சேராமல் தனியாக இருந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் இணைந்தால் பா.ஜ.கவை பகைக்க நேர்ந்துவிடும் என்பதால் தனியாக மாநிலத்தில் ஒரு கூட்டணி என திசைதிருப்ப முயன்றது. அதிலும் சிபிஎம் , சிபிஐ போன்ற கட்சிகள் சேராததால் அந்தக் கூட்டணி ஏமாற்று முயற்சியும் தோல்வி கண்டது. காவிரி உரிமை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக்கூடாது என்பதற்காக தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. திமுகவை தனிமைப்படுத்தி எப்படியாவது தமிழ்நாட்டில் பா.ஜ.க வின் இசைவை ஏற்ற பொம்மை அரசை அமைக்க நினைக்கும் பாஜகவின் திட்டத்திற்கு ஒத்தூதும் வகையில் செயல்படும் காங்கிரசின் முதுகில் குத்தும் நடவடிக்கையால் மட்டுமல்ல பிரவீன் சக்கரவர்த்தி போன்ற திரைமறைவு சங் கூட்டாளிகளை வைத்து மாநில உரிமையை அடகுவைக்க நினைப்பவர்களோடு எப்படி ஓரணியில் நிற்க முடியும். காங்கிரசை பொறுத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு , குறைவு என்பது வெறும் எண்கள் சார்ந்தது. ஆனால் திமுக போன்ற மாநில கட்சிகளுக்குத் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் சார்ந்தது. தன்னுடைய தவறுகளை மறைக்க எல்லாவற்றையுமே திசைதிருப்பு அரசியலின் மூலம் வென்றுவிடலாம் என த.வெ.க தப்புக் கணக்குப்போட்டு வருகிறது. இந்தத் திசைதிருப்பும் அரசியல் வெகுநாளைக்கு நீடிக்காது #👨மோடி அரசாங்கம்
Arunachalam
589 views
1 days ago
இந்தா ..!பிச்சையெடுக்க ஆரம்பிச்சுட்டானுக...! இதுவரை எந்த அரசும் செய்யாத செயல்! அரசுதான் மக்களுக்கான மருத்துவ சேவையை அளிக்க வேண்டுமே தவிர! மக்களிடமே நன்கொடை தாருங்கள் எனக்கேட்பது சரியில்லாத ஒன்று! பின்னே என்ன மயிறுக்கு ஆட்சிக்கு வந்தானுங்களாம் ..? #👨மோடி அரசாங்கம்
Arunachalam
641 views
1 days ago
இன்னைக்கு நம்ம லாட்டரி செம்மல் அமைச்சர் ஆதவ் அவர்கள் தெம்பு இருந்தா தைரியம் இருந்தானு சட்டமன்றத்தில் கத்திட்டு இருந்தாரு. என்னோட மாமனர்ட்ட இருந்து ஏன் பணம் வாங்கினிங்க அத சொல்லுங்கனு கத்திட்டு இருந்தாரு. தேர்தல் நிதியா எந்த நிறுவனமும் எந்த கட்சிக்கும் தேர்தல் நிதி அல்லது அன்பளிப்பு தரலாம் என்பது இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கும் வாய்ப்பு. எல்லா கட்சிகளும் அப்படி வாங்கித்தான் செலவழிக்கிறது. Santiago Martin-ன் Future Gaming and Hotel Services என்ற நிறுவனம் தான் 1368 கோடிக்கு தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கியிருக்கிறது. இதுதான் இந்தியாவிலே அதிக பட்சம். TMC - ரூ.542 கோடி DMK - ரூ.509 கோடி YSR Congress - சுமார் ரூ.160 கோடி BJP - ரூ.100 கோடி Congress - ரூ.50 கோடி. இது போக கணக்கில் இல்லாத வகையில் பிஜேபிக்கு பணம் கொடுத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் கட்டுரை வெளியிட்டும் இருந்தது. இத்தனை கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பெற்றிருக்கிறது. இதில் ஏதும் கருப்பு வெள்ளை எல்லாம் கிடையாது முறையான தணிக்கைக்கு பின்னர் கொடுத்தது. அவர் கேட்க வேண்டியது தேர்தல் ஆணையத்தை தான். அவ்வளவு ஏன் டிவிகே கட்சியின் கரூர் படுகொலைகளுக்கு இழப்பீடு நிதி எந்தெந்த கணக்குகளில் இருந்து சென்றது என்பதை விவாதிக்க முடியுமா ஆதவால் ? ஆதவ் செலவழிக்கும் பணம் எல்லாம் கட்சி கணக்கில் வரும் தானே ? அன்பளிப்பில் தானே அதுவும் வரும். என்ன ஆதாயத்திற்கு அவர் கொடுத்து வருகிறார் . ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான Jose Charles, "ஆதவ் எனது தந்தையின் பணத்தை தவறாக பயன்படுத்துவதோடு எங்கள் குடும்பத்திற்கும் அவபெயரை ஏற்படுத்துகிறார்" என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதற்கு இவர் தைரியமால பதில் சொல்லியிருக்கிறாரா ? திமுக மார்டினை ஏமாற்றி பணம் வாங்கியிருக்கிறது என்றால் மகன் பாண்டிச்சேரி எம் எல் ஏ, மனைவி அதிமுக எம் எல் ஏ கூடுதலாக மருமகன் டிவிகே அமைச்சர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே ? அந்த வக்கு இருக்கிறதா ? குடும்ப அரசியலை பேசும் ஆதவிற்கு ஒரே குடும்பம் வெவ்வேறு கட்சிகளில் பணத்தை முதலீடு செய்து பிழைப்பது தெரியும் தானே ? அது பற்றி அவர் பேசுவாரா ? சட்டமன்றத்தில் ஸ்டாலினை அவமானப்படுத்த வேண்டும், திமுகவை பற்றி அவதூறு செய்ய வேண்டுமென்ற அதே பழைய மயிலாப்பூர் டெக்னிக் தான் ? ஆனால் இதெல்லாம் செருப்பால் கழட்டி அடித்து விரட்டப்பட டெக்னிக். தேர்தல் அறிவிப்பில் அள்ளிவிட்ட பொய்களை மூட இப்படியொரு கதறல். பா. சரவணகாந்த். #👨மோடி அரசாங்கம்