Follow
Arunachalam
@463115585
14,429
Posts
52,640
Followers
Arunachalam
587 views
21 hours ago
திமுகவை மட்டுமே "தீய சக்தி" என்று சொல்கின்றனரே ஏன்??? ==============\\\================ 1967 லிருந்து 2021 வரை திமுக 21 ஆண்டுகளும், அதிமுக 35 ஆண்டுகளும் ஆட்சி செய்த நிலையில், திமுகவை மட்டுமே தீய சக்தி என்று சொல்கின்றனரே ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.! நான் அவரது சந்தேகத்திற்கு கூறிய காரணங்கள்... 🔹1. நில உச்சவரம்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஒரு குடும்பம் (கணவன் மனைவி) 15 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமல்.! உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்றதால், குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது.! நிலக்கிழார்கள் தங்களின் பாசமான அடிமைகள் பெயரில் எழுதி வைத்திருந்த நிலங்கள், அந்த அடிமைகளுக்கே சொந்தமானது.! நிலச்சுவான்தர்களின் எதிரி, கலைஞர்.! தீயசக்தி No 1. 🔹2. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களை அவர்களுக்கே பட்டா வழங்கி, ஓட்டு வீடு கட்ட திட்டம் கொடுத்தது.! இது குடியானவர்களை அதாவது நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக் கொண்டவர்களை எரிச்சலூட்டியது.! குடியானவர்களின் எதிரி, கலைஞர்.! தீய சக்தி No 2. 🔹3. குடிசைமாற்று வாரியம் அமைத்து நகர்ப்புறங்களில் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தால் அனைவருக்கும் வீடு. எங்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடா.! பணக்காரர்களின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 3. 🔹4. பேருந்துகளை அரசுடமையாக்கி கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை இயக்கினார். பேருந்து முதலாளிகளின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 4. 🔹5. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தி ஹிண்டு, தினமணி, துக்ளக், விகடன், தினமல பார்ப்பணர்களை எரிச்சலூட்டியது. பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 5. 🔹6. FCIக்கு எதிராக TNCSC ஆரம்பித்து நியாயவிலைக் கடைகளை திறந்து குறைந்த விலையில் அரிசி வழங்கி, குடியானவர்களிடம் கையேந்தும் நிலைமையை மாற்றியது. குடியானவர்களுக்கு சங்கடம். குடியானவர்களின் எதிரி, கலைஞர்.! தீய சக்தி No 6. 🔹7. எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநில கட்சி திமுக, கலைஞர். இது தேஷியவாதிகளை எரிச்சலூட்டியது. தேஷியவாதிகளின் எதிரி, கலைஞர. தீய சக்தி No 7. 🔹8. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட உரிமை, தகப்பன் சொத்தில் பெண்களுக்கு உரிமை, 8ம் வகுப்பு வரை பிறகு 10ம் வகுப்பு வரை படிக்கும் பெணுகளின் திருமணத்திற்கு உதவியாக ரூ. 10,000 வழங்குவது என்ற சட்டங்களை நிறைவேற்றினார். ஆண்களின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 8. 🔹9. பெரியார் சமத்துவபுரம் அமைத்து பறையர், பள்ளர், அருந்ததியர்களோடு வேளாளர், முக்குலத்தோர், பார்ப்பணர், வன்னியர், கோணார், நாடார், உடையார் சமூக மக்களையும் ஒன்றாக வாழ வைத்தது. ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 9. 🔹10. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 10. 🔹11. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட உரிமையை அதிகரித்து, வேளாளர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பை அதிகரித்தார். இது செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது. செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர். தீயசக்தி No 11. 🔹12. இட உரிமை அடிப்படையில் இந்துக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் அறநிலையத் துறை அதிகாரிகளாக கோவில்களில் நியமித்தார், கலைஞர். இது, பறையர்களையும், பொம்பளைகளையும் கேட்டுத்தான் நாங்கள் முடிவெடுக்க வேண்டுமா என்று அறங்காவலர்களாக இருந்த செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது. செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர். தீயசக்தி No 12. 🔥இப்படி தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களும், பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.! அந்த பலன்களை அடைந்த பயனாளிகளோ, தங்களுக்கு இந்த பயன்கள் கலைஞரால்தான் கிடைத்தது என்பதை உணராமல், ஊடகங்களின் பரப்புரைக்கு இறையாகி, அவர்களும் கலைஞரை கடிச்சு கொதற ஆரம்பித்ததால்... அவர்களுக்கும் கலைஞர் தீய சக்தியாக மாறி விட்டார்.! உண்மையில், கலைஞர்... தீயவர்களுக்கு மட்டுமே தீய சக்தி.! Revathi Ram 🔥 Rajkumar Microbe #தமிழ்நாடு_வெல்லட்டும்_ஸ்டாலின்_தொடரட்டும் #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_வெல்லட்டும் #தமிழ்நாடு_வெல்லும் #👨மோடி அரசாங்கம்
Arunachalam
606 views
21 hours ago
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 துடப்பங்கள் (ராஜ்யசபை MPகள்) பாஜகவில் சேர்ந்துள்ளதோடு, பஞ்சாப் மாநில AAP கட்சியின் MLA களையும் விலைபேசி தங்களின் பக்கம் இழுத்து தமிழ்நாட்டின் கூவத்தூரில் நடந்தது போன்ற ஒரு ஆட்சியை உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளனர் என்பதான செய்திகள் வெளிவருகின்றன. சென்ற மாதம் ராஜ்ய சபையில் மொபைல் போன் ரீ சார்ஜ் செய்வது தொடர்பாக இந்த ஆள் பேசியதற்கு 🔥 விடாதவர்களே இல்லை எனலாம்! முன்பு AAP கட்சியை கெஜ்ரிவால் தொடங்கிய போது அது NGO,அமெரிக்க முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்காக தாத்தா அண்ணா ஹசாரே, ஆன்மீக மாமா பாபா ராம்தேவ்,காவல்துறையிலிருந்த கிரண்பேடி மற்றும் சிலரால் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த போது கழுவிக்கழுவி ஊற்றப்பட்டவர் சென்ற தேர்தலின் போது இந்திய கூட்டணிக்குள் வந்து விழுந்ததும் புனிதராகிவிட்டார். வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல். இது சித்தாந்தங்கள் முடிவடைந்துவிட்ட காலம். நாங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. தனியார்மய எதிர்ப்பு, உலக வர்த்தக கழக எதிர்ப்பு தேவையில்லை. காரியம் நடப்பதற்கு எது பொருத்தமோ அதைச் செய்வோம்”. இவையெல்லாம் ஆம் ஆத்மியின் அரசியல் கொள்கை பற்றிய நிலைப்பாடுகள். இதன் விளைவுகளால் தொழிலதிபர்கள்,கல்வி நிறுவன முதலாளிகள்,பிரபலமான கிரிக்கெட் வீரர் ஹர்பதன்சிங் போன்றவர்களுக்கு ராஜ்யசபை MP பதவிகளை வாரி வழங்கினார் கெஜ்ரிவால். இப்போது அந்த பண முதலைகள் மற்றொரு பெரும் தொகைக்கும்,ஏற்கனவேயிருக்கும் சொத்தை பாது காத்துக் கொள்ளவும் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தமிழகத்தில் கூட பல அதிமுக தலைகள் பாஜகவிடம் நேரடியாக வும்,மறைமுகமாகவும் அடைக்கலம் புகுந்துதான் கிடக்கிறார்கள். மாநில அளவில் பல முன்னாள் அதிமுக MP,MLA கள் திமுகவில் புகுந்தும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாத குதிரையான *இந்திய கூட்டணி* மீது சவாரி செய்ய யாரும் தயாராக இல்லாத போது பாஜகவின் இந்த ஆள் கடத்தல் விளையாட்டு தொடரவே செய்யும். #👨மோடி அரசாங்கம்
Arunachalam
2.5K views
21 hours ago
இந்தியா ஜனநாயக நாடு இல்லையா இல்ல மணிப்பூர்ல நடக்குறது வன்முறை இல்லையா... #👨மோடி அரசாங்கம்
Arunachalam
602 views
21 hours ago
"சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்தி பரப்பினால் சிறை தண்டனை" - செய்தி அது சரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதங்கள் சமூகத்தில் பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்துல தான் ராமர் பிறந்தாரா? கங்கை நதியும் ஜம்ஜம் நீரூற்றும் புனிதமானதா? இயேசுவின் வருகை சமீபத்தில் இருக்கிறதா? கோவில்களின் தல புராணங்கள் எல்லாம் உண்மையானதா? இது போன்ற பொய்களை சமூகத்தில் பரப்பிக் கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடியுமா? #👨மோடி அரசாங்கம்
Arunachalam
661 views
1 days ago
💢 மோடி ஆட்சி ஊழல் பெருச்சாளி ஆட்சி என்பது மீண்டும் அம்பலம். 💢54,282/-(ஐம்பத்தி நான்காயிரத்து இருநூற்றி எண்பத்திரண்டு கோடி) ரூபாய் எங்கே மிஸ்டர் மோடி? 🛑 இதுதான் யோக்கிய சிகாமணிகள் ஆட்சி. 💢 இது போன்ற மறைமுக வருவாய் பணத்தை பயன்படுத்தித் தான் M.P-களையும், MLA-க்களையும் வாங்கி ஆட்சி நடத்தும் பாஜக கும்பல் என்பதை தேசம் பார்க்கட்டும். #👨மோடி அரசாங்கம்
Arunachalam
897 views
1 days ago
இந்திய மாநிலங்களிலேயே மிகச்சிறந்த மாநிலம்! தமிழ்நாடு! என்றுதான் தினந்தோறும் தம்பட்டம் அடித்து பூரித்துக்கொண்டோமே! சிந்தனையாளர்கள்! படித்த அறிவாளிகள் நிறைந்த மண்! பகுத்தறிவு கொண்ட மக்கள்! என தினந்தோறும் பூரித்து பூச்சூடி மகிழ்ந்த கொண்ட தமிழ்நாட்டில்! இத்தனை மூடர்களும்! தற்குறிகளும்! சினிமா மோக சினிவேள் பைத்தியங்களும் இவ்வளவு காலமும் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறோமே என்பதையெண்ணி வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? என்றே தெரியவில்லை! சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆளப்போகிறேன் என்று! ஒரு முட்டாள்! நம் அனைவரையும் முட்டாளாக்கி! தனது சுயநலத்திற்காக வசப்படுத்திக்கொள்ளும் CINEWALE GAMEஐ மூளைக்குள்ளே ஊடுருவச்செய்து பைத்தியமாக்கி கொண்டிருக்கிறானே! அவன் பாஜக சங்கிகளைவிட மிக ஆபத்தானவன் என்பதை முழுமையாக உணரமுடிகிறது! சினிமா உலக வாழ்க்கை! பிழைப்பு! இனிமேல் தனது 52வயதுக்கப்புறம் கைகொடுக்காது என்று தெரிந்தவுடன் அரசியலில் நுழைந்து! அரசியலையே நாசமாக்கியவனின் கைகளில் ஒட்டுமொத்த இப்போதைய இளையசமூகமும் சிக்கிக்கொண்டு சின்னாபின்னம் ஆகுவதை இனிமேலும் நாம் அனுமதித்தால்! ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிள்ளைகள்! குழந்தைகளும்! சினிவேள் கேம்பிளிங்க் விபரீதத்திற்கு பலியாக நேரிடும்! அந்த நடிகன் உச்சத்தைவிட்டு வெளியே வரவில்லை! உங்களுக்காக! வருகிறேன் எனச்சொல்வதெல்லாம் CYCOSISIM BRAIN WASH என்பதை கொளுந்துவிட்டு எரியவேண்டுமென்கிற அற்ப பேராசையின் COMPULSION! இவன் நடத்துவது அரசியலல்ல! அயோக்கியத்தனம்! BJP செய்ய முடியாததை! தயங்குவதை! RSS செய்துமுடிக்க வைக்க முடியுமென்று தத்தெடுத்த கைக்குழந்தைதான் தவெக விஜய்! அதன் கூட்டங்களும்! சொல்லப்போனால்! பாஜக RSSஐவிட மிக ஆபத்தானவன்! விஜய் என்பது வெறும் பொம்மைதான்! அதை இயக்கும் KEY REMOTE RSSயிடம் உள்ளது! முதலில் உளவியல் ரீதியாக தமிழ்நாட்டு மக்களை அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிரித்து உள்ளுக்குள்ளேயே கலவரத்தை மூழ வைப்பதுதான்! இவர்களின் முதல் குறி IT SOFTWARE WORKING PERSONS! GOVERNMENT EMPLOYEES! மற்றும் கடைசியாக சிறு குழந்தைகள்! DRPOUT EDUCATION YOUNGERS! இதில் பலர் மூழ்கியே விட்டார்கள்! கிராமப்புறத்திற்குமே இந்த தொற்று பரவுகிறது! இது ப்ளுவேல் போல! சினிவேள் கேம்ப்ளிங்காக ஆகிக்கொண்டிருக்கிறது! முதலில் திராவிட சித்தாந்தத்தை சிதைப்பதும்! அதன் கிளையமைப்புகளை அவர்கள் பாணியிலேயே கொள்கை முழக்கமிட்டு அழிக்கிற வேலையை RSS மூலமாக இறக்கிவிடப்பட்ட சைக்கோ சாத்தானே இவன்தான்! இந்த சைக்கோத்தனத்திற்கு எந்த மதமும்! சாதியுமே தப்பவில்லை! இறைநம்பிக்கை அதிகம் கொண்ட இஸ்லாமிய சமூகத்திற்குள்ளுமே இது ஊடுவுருவியிருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது! மே4ல் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! நடத்தப்படலாம்! ஏனென்றால் இந்த கூட்டங்கள் அத்தனையும் அரசியல்வாதிகளல்ல! GENZ புரட்சிக்கூட்டத்தைவிட மிக அபாயகரமான கூட்டங்கள்! வெற்றிபெற்றால் பழிதீர்க்கும்! வெற்றிபெறாவிட்டாலும் கலவரத்தை மூட்டும்! தயவுசெய்து குழந்தைகளை தனியே விடாதீங்க! 18,20வயதுக்கு மேற்பட்ட தவெக ஆதரவுகள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் பக்குவப்படுத்தி பாதுகாத்துக்கொள்ளுங்கள்! வன்முறைகள் நிகழ்த்தவும் திட்டமிடும் கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சமூகம் காப்பாற்றப்பட வேண்டும்! நடிகன் தோற்றுவிட்டால்! அதன்மீது மோகம் கொண்ட பைத்தியங்கள் தற்கொலைக்கும் முயலும்! அப்படிப்பட்ட கூட்டங்கள்தாம் அவை! ஆஸ்திரேலியாவிலிருந்து குறுகிய காலத்தில் யார் வந்திருந்தாலும்! அவர்களை கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லது! ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியல்ல! RSSன் கலவரத்தை தூண்டும் வைரஸ்! இனிமேல் நாம் வடமாநிலத்தவர்களை விமர்ச்சிப்பது நல்லதல்ல! காரணம் நாமே! நம்முடைய தமிழ் மண்ணில் இவ்வளவு தற்குறிகளை! சினிவேள் பைத்தியங்களை அடையாளம் தெரியாமல் வைத்திருக்கிறோம்! வடவர் முட்டாள்களைவிட இந்த ITWARE தற்குறிகள் விஷத்தை பரப்பும் விஷங்களாக உள்ளிருக்கிறது! இனிமேல் இதற்கென்று தனி செயற்பாடுகளை அமைத்து திருந்தவைக்கவில்லையெனில்! தமிழ்நாடு வடமாநிலங்களைவிட மிகமோசமான சூழ்நிலைக்குள்ளே மாட்டிக்கொண்டு வீழும்! தரமான! அறிவுசார்ந்த கருத்துக்களை உரைத்து விதைத்து பகுத்த்தறிவை! சிந்தனையை தூண்டிய தமிழ்ச்சினிமா இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் அறிவற்ற முட்டாள்களாக உருவாக்கி வருவதையெண்ணி வெட்கமும்! வேதனையும் பட வைக்கிறது! தமிழ்ச்சினிமா! தரங்கெட்ட தற்குறிகளை உருவாக்கி வருவது ஆபத்தானது! தமிழ்ச்சினிமா மனிதர்களைத்தான் சிந்தனைக்குழப்பத்தை விதைத்தது போக! இப்போது நாட்டையாளும் அனுபவ முறையையும்! அரசியலையும் நாசப்படுத்த துணிந்திருப்பது! நாளை தமிழ்ச்சினிமா உலகமே அழிவை நோக்கியே நகரவைத்துவிடும்! தெளிவோம்! தெளிந்தவர்கள் தெளியாத தற்குறிகள் ஆகி ழூழ்கிடும் நம் சந்ததிகளை தெளியவைப்போம்! அறிவாயுதமெனும் சோறூட்டி அறிவுடைய சமூகமாக மீண்டும் நிலைநிறுத்துவோம்! #👨மோடி அரசாங்கம்
Arunachalam
696 views
1 days ago
👉🏻 வெக்கபட வேண்டும் 👈🏼 விசையின் வருகைக்கு பிறகு தான் 75 வருட கட்சியும் 50 வருட கட்சியும் ஆட்டம் கண்டதுனு சொல்ல ஒரு பத்திரிகையாளனாக நா கூசவில்லையாடா 👈🏼 விசை என்ன பெரியாரா அண்ணாவா கலைஞரா எம்ஜிஆர்ரா காமராஜரா கக்கனா யார்டா விசய் ஒரு சினிமா நடிகன் அதை விட ஒரு தகுதியை சொல் அல்லது அவரின் அரசியல் இந்தியாவில் யாரும் சொல்லாத காட்டாத ஒரு புதுமையோடு வருகிறாறா 👈🏼 ஊடக தர்மம் என்றால் என்ன காற்று புக முடியாத இடத்தில் கூட புகுந்து மக்களும் எது நல்லது கெட்டது என்ற செய்தியை சொல்பவனுக்கு பெயர் தான் பத்திரியாளன் 👈🏼 ஆனால் இன்று எவண்டா ஊடக தர்மத்தோடு மக்களுக்கு உண்மையான செய்தியை சொல்றீங்க காசுக்கும் கவருக்கு கவரேஜ் செய்து அவனே வல்லவன் நல்லவன் என்று மக்களை மூளை சலவை செய்து முட்டாளாக மாற்றி கொண்டு இருக்கீங்க 👈🏼 இப்ப ஏதாவது ஒரு சானல் பத்திரிகையாவது நடுநிலையாக செய்தி போடுவது உண்டா கடந்த முறை ஓட்டு மொத்த ஊடகமும் சுதந்திர போராட்ட தியாகி சின்னமாவுக்கு பெங்களுர் சிறைச்சாலை முதல் சென்னை போயஸ்கார்டன் அவர் வீட்டு வரை நேரலை செய்ய செலவு ஒரு நாளைக்கு மட்டும் 190 கோடி 👈🏼 இன்று கடந்த இரண்டு வருடமாக விசய் வீட்டு வாசலில் நாய் போல் காத்து கெடந்து பில்டப் கொடுத்து கொடுத்து விசய் தான் தமிழ்நாட்டின் அரசியல் மாற்று என்று 👈🏼 விசயின் வீட்டு கதவு தொறந்தது விசய் வெள்ளை சட்டை போட்டு இருக்கார் விசய் கருப்பு ஜட்டி போட்டார் விசய் காரில் 🚗 ஏறினார் வழி நெடுக மக்கள் வெள்ளம் விசயின் வாகனத்தை தொடர்ந்து பவுன்சர்கள் 👈🏼 விசய் ஏர் போர்ட் வந்து விட்டார் ஏர்போர்டில் குவிந்த மக்கள் தள்ளுமுள்ளில் தவழ்த விசய் விசையை நெருக்கவிடாமல் பாதுகாப்பு படை 👈🏼 4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 7 மணி நேரம் ஆனது மக்கள் வெள்ளத்தில் விசய்னு சும்மா பில்டப் கொடுத்து கொடுத்து மக்களை முட்டாள் ஆக்கவாடா ஊடகம் 👈🏼 எந்த கட்சியாக இருந்தாலும் நடுநிலையாக இந்த ஆட்சி சரி இந்த ஆட்சி சரி இல்லை இந்த தலைவர் இப்டி அந்த வேட்பாளர் அப்டினு ஒரு ஒரு மக்களுக்கு அவர்களின் உண்மையான முகத்தையும் குணத்தையும் தோலுரித்து காட்ட வேண்டிய மாபெரும் பொருப்பு இந்த ஊடகத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் இருக்கு 👈🏼 பொது மக்கள் உங்களை நம்பி தான் தொலைக்காட்சி 📺 அச்சு நாளிதழ் வாங்கி பார்த்து படிக்கிறார்கள் 👈🏼 அப்டி நம்பி பார்ப்பவர்களையும் படிப்பவர்களையும் தகுதியை இல்லாத ஒருவனை மக்கள் தலையில் கட்டுவதா ஊடக தர்மம் ஒரு ஊடகம் சரியாக இருந்தால் இந்த அரசியல் நல்லா இருந்து இருக்கும் காசும் கவரும் கொடுத்தால் அவனை கர்ணன் ரேஞ்சுக்கு கொண்டு போய்டுவிங்க 👈🏼 இதே சினிமாவில் இருந்து தானே கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தார் அவருக்கு ஏன் இந்த நேரலை கொடுக்கவில்லை அந்தாள் நீதி நேர்மை உண்மை என்பான் நமக்கு ஒருபயனும் இல்லை என்று அவரை பிரபல படுத்தவில்லை யாரையும் பிரபலப்படுத்த வேண்டாம் 👈🏼 அவர்கள் கையில் எடுக்கும் அரசியல் சரியா தப்பா அதை மக்களிடம் சொல்வது தானே உங்க வேலை அதைவிட்டு காசு கொடுப்பவனை தலையில் வைத்து கொண்டாடுவதா பத்திரிகை துறையின் வேலை தர்மம் 👈🏼 ஸ்டாலின் எடப்பாடி கமல்ஹாசன் விசய் வரைக்கு அவர்களின் அரசியல் அறிவு பார்வை என்னானு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டு அதை விட்டு கூட்டம் கூடி விட்டால் அவன் தான் சிறந்த தலைவன் என்பதா டாஸ்மாக்கில் உள்ள கூட்டம் இளநீர் கடையில் இல்லை இப்ப எது நல்லது மக்களுக்கு 👈🏼 இன்னும் ஆயிரம் நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும் இது ஜனநாய நாடு உரிமை உண்டு ஆனால் ஒரு பத்திரியாளனின் பணி அவர்களின் உண்மையான முகத்தை மக்கள் வசம் காட்ட வேண்டும் நீயே இப்டி hype ஏத்தினால் மக்கள் என்ன செய்வார்கள் இந்த சமுதாயத்தில் உங்களுக்கும் அதிக பொறுப்பு இருக்கு அதுவும் முக்கியமான பொறுப்பு 👈🏼 விலை போகும் விபசார கூட்டம் அல்ல பத்திரிகை துறை ஆனால் இன்றையை உங்கள் செயல் ரெம்ப அசிங்கமாக இருக்கு விஜயகாந்த் உங்களை காறி துப்பியதில் எந்த தப்பும் இல்லை நானும் துப்புகிறேன் அடத்து மானம் கெட்டவனுங்களா இதுக்கு நீங்க வேற தொழில் செய்யலாம் 👈🏼 நன்றி இரா.வெங்கடேஷ் செளத் ஆப்ரிக்கா #👨மோடி அரசாங்கம்
Arunachalam
656 views
1 days ago
புதுச்சேரியில் முதல்வராக இருந்த மாமனாரும் கல்வி அமைச்சராக இருந்த மருமகனும் சேர்ந்து பாசிச பாஜகவின் கட்டளைப்படி அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ கல்வி முறையை திணித்து தாய்மொழி தமிழை ஒழித்து இந்திக்கு பாய் விரித்துவிட்டுள்ளனர்! #துரோகிகள் #புதுச்சேரி #👨மோடி அரசாங்கம்
Arunachalam
664 views
2 days ago
நான்கு மாநிலங்களில் ராகுல் காந்தி செய்த பிரச்சாரத்தின் போது சொன்னவை: வேலை இல்லா திண்டாட்டம் சமூக நீதி சமத்துவம் சிறுபான்மையினர் நலன் காதலதிருமணங்கள் பெண் உரிமைகள் கல்வி சுகாதாரம் விவசாயிகளின் நலம் AI மற்றும் டேட்டா பொருளாதாரம் மேதகு பூஜிக்கத்தக்க பிரதமர் மோடி பேசியவை: காங்கிரஸ் காங்கிரஸ் காங்கிரஸ் ஊடுருபவர்கள் ஊடுருபவர்கள் ஊடுருபவர்கள் மத பிளவு மத பிளவு சென்ட்டிமென்ட் சென்ட்டிமென்ட் மதுரை தர்கா தூணில் விளக்கு ஏற்றுவது #👨மோடி அரசாங்கம்
Arunachalam
1.1K views
2 days ago
◾◾பார்ப்பனக் கடப்பாரையைக் கையிலேந்திய சீமானுக்கு புரியும் வகையில் பாடம் புகட்டுவோம்!◾◾◾ ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் நேரடியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியாது என்ற சூழலில் தனது பினாமிக் கும்பல்களை வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பெயரில் இறக்கிவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த வகையில் தமிழ் பாசிசக் கும்பலின் தலைவனான சீமானை ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கி விட்டுள்ளது. அதற்கு தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஒருவரான ஷிவ் நாடார் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீதர் வேம்பு போன்றவர்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகிறார்கள். இந்த பினாமிக் கும்பலின் தலைவனான சீமான் தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சிந்தனைகளை விதைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ வைத்துக் கொண்டுள்ள மாபெரும் சீர்திருத்தவாதிகளான பெரியார் உள்ளிட்டவர்களின் சிந்தனைகளைக் குழிதோண்டி புதைப்பதற்கு பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பார்ப்பன கும்பலில் அரசியல் ஆலோசகரான திருவாளர் குருமூர்த்தி வழிகாட்டுதலின் கீழ் திராவிட இயக்கத்தின் மீது தாக்குதலை தொடுப்பதற்கு பிராமண கடப்பாரையை எடுத்துக் கொண்டதாக சீமான் பெருமை பீத்தி வருகிறார். இவரை ரங்கராஜ் பாண்டே போன்ற ஹைடெக் பார்ப்பனர்கள் முதல் கருப்புப் பார்ப்பனர்கள் வரை தூக்கி வைத்துக் கொண்டாடுவது உள்நோக்கம் கொண்டதாகும். ‘பிராமணன் என்றாலே பிரம்மனின் முகத்தில் பிறந்தவன்’ என்ற தகுதியை வர்ணத்தின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு வழங்குகின்ற இழிவான செயலாகும். இதனாலேயே ‘பிராமணன் என அழைக்காதே! பார்ப்பான் என கூப்பிடு’ என்றார் பெரியார். “பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதாலேயே, தங்களுக்கு நாட்டை ஆளுகின்ற தகுதி முதல் அனைத்து அதிகார மட்டங்களிலும் முன்னிலை வகிக்கின்ற தகுதி உள்ளது” என்று திமிர் பிடித்து திரிகின்ற பார்ப்பனக் கும்பலின் ஏவல் நாய்களில் ஒருவர்தான் திருவாளர் சீமான். இவர் கையில் பிராமண கடப்பாறை என்று கௌரவமாக கூறுவதை விட பார்ப்பன கடப்பாரையை ஏந்தி திராவிட இயக்கங்களின் மீதான தாக்குதலை தொடுப்பது மட்டுமின்றி, பொதுவுடமை கொள்கைகளின் மீதும், கம்யூனிச சித்தாந்தத்தின் மீதும் வெறுப்புணர்ச்சியையும் கொடூரமான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றார் திருவாளர் சீமான். ஜெர்மனியின் ஹிட்லர்; இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் வாரிசுகளாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள தமிழ் பாசிச கும்பலின் தலைவனான சீமான் முன்வைக்கின்ற வாதங்கள், பொருளாதார திட்டங்கள் அனைத்தும் கற்பனையான, பொருளற்ற தன்மை கொண்டது என்பது தெரிந்தாலும் திராவிட இயக்கங்களின் மீது சாதி ரீதியாகவே வெறுப்பு கொண்ட பார்ப்பன மற்றும் மேல் சாதியினர் திராவிட இயக்கங்களை ஒழித்து கட்டுவதற்கு சீமான் போன்றவர்களை கையில் எடுத்துக் கொண்டு திரிகின்றனர். தமிழகத்தின் சொத்துக்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற பார்ப்பன மற்றும் பார்ப்பனர்களாக மேல் சாதிகளின் அரசியல் பிரதிநிதியாகவே சீமான் தமிழகத்தில் களமாடுகின்றார். இந்த வகையில் மாற்று என்று முன்வைத்து கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் என்பது போலவும், 10 பைசா தேர்தலில் செலவு பண்ணாமல் தேர்தலில் போட்டியிடுவதைப் போலவும் பகடி வித்தைகளை காட்டி வருகிறார். திரள்நிதி என்ற பெயரில் ஈழத்தமிழர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்வது; தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு கொண்ட சிறு குறு தொழில் முனைவர்கள்; தனி நபர்கள் ஆகியோர்களை தனது சதித்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டுக் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ள இவர் குடிக்கின்ற தண்ணீர் கூட மினரல் என்பதில் மோடி பயன்படுத்துகின்ற வகையைச் சார்ந்த மினரல் தண்ணீராகும். இந்த லட்சணத்தில் எளிய வாழ்க்கையை வாழ்வதுப் போலவும், நிதி கையில் இல்லாமல் அன்றாடம் திண்டாடி கொண்டிருப்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்களுக்கும் தனது கட்சி தொண்டர்களுக்கு உருவாக்கி வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஏறக்குறைய பல பேர் இவர்களை வந்து விலகி விட்டனர். இவரது உண்மை முகம் தெரிந்தவுடன் இவர் பேசுகின்ற தமிழ் தேசியமானது பார்ப்பன கும்பலில் அடிமை புத்திக் கொண்ட, திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஐந்தாம் படை தமிழ் தேசியமே என்பதால் நேர்மையான தமிழ் தேசிய எண்ணம் கொண்டவர்கள் இவரிடம் இருந்து விலகி விட்டனர். “கம்யூனிச இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினரும், திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினர்களும் ஒன்று சேரும் புள்ளி பாஜக ஆதரவு என்ற கோடாக விரிவடைகிறது. மற்றொருபுறம் பாஜகவை வெறுக்கின்ற எப்படியாவது நல்லது நடந்தால் போதும் என்று சிந்திக்கின்ற “அன்பான சர்வாதிகாரத்தை ’ஆதரிக்கிறவர்கள் சீமானிசத்தையும், சீமானையும் ஆதரிக்கிறார்கள். இதனால்தான் 2010 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த சீமான் கட்சிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. இவர்கள் பாஜகவிற்கு சாதகமாக திமுக ஆதரவு ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பதல்ல நமது பிரச்சனை. பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தமிழர் × தெலுங்கர், தமிழர் × மலையாளி தமிழர் × கன்னடியர் போன்ற முரண்களை முன்வைத்து தமிழ் பாசிச அமைப்பாக வளர்ந்து வருகின்ற சீமான் கட்சி பாரம்பரிய பாசிச கட்சியான ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக ஒன்றிணைகிறது. நடைமுறையில் எதிர்த்துப் பேசுவதாகவும், போராடுவதாகவும் கூறிக் கொண்டாலும் அன்பான சர்வாதிகாரம் என்பதை முன்வைக்கின்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் செயல்படுவது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை உயர்த்திப் பிடிப்பது, பகிரங்கமாக அன்பான சர்வாதிகாரம் தமிழகத்திற்கு தேவை என்று பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலமாக பாசிச சர்வாதிகாரத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதில் சீமான் முன்னேறி வருகிறார். ‘சீமான் ஒரு நடிகர்’, ‘ கோமாளி’, ‘ குடிகாரர்,’ ‘மூக்கு நோண்டி’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்து அவரை முறியடிக்க முடியாது. மாறாக அவர் முன்வைக்கின்ற தமிழ் பாசிச அரசியலை எதிர்த்து முறியடிப்பதற்கு தயாராக வேண்டும் என்பதுதான் தற்போதைய கட்டத்தில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் பணிக்கு உதவுகின்ற செயல்பாடாகும்.” என்று தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதியுள்ளோம். பாசிஸ்டுகளுக்கே உரிய உடல் மொழியும், கவர்ச்சிவாதப் பேச்சும் ஒருங்கிணைந்த வகையில் பார்ப்பனக் கடப்பாறைகளில் ஒருவனாக உருவாகியுள்ள தமிழ் பாசிச கும்பலின் தலைவனை, தமிழ் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் மணியரசன் போன்றவர்களும், ஈழத் தமிழர்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டு பூனைகளாக தமிழகத்தில் வலம் வந்த சில தமிழ் இன ஆதரவாளர்களும் ஆதரித்து வருவது வெட்கக்கேடானது. குருமூர்த்தியின் பயிற்சி பட்டறையில் உருவாகி, தேசங்கடந்த தரகு முதலாளிகள் நிதியளிப்புடன், ஈழத் தமிழர்களை ஏய்த்துப் பிழைத்த நிதியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும், கம்யூனிச இயக்கங்களுக்கு எதிராகவும் களத்தில் குதித்துள்ள சீமான் போன்ற பார்ப்பன அடிவருடிக் கும்பலை, பார்ப்பனக் கடப்பாரையை ஏந்தி துணிச்சலாக வலம் வரும் பயங்கரவாதிகளை தேர்தலில் முறியடிப்பது மட்டும் போதாது. பார்ப்பன அடிமைப் புத்தியுடன் நேருக்கு நேர் களத்தில் இறங்கி முண்டா தட்டுகின்ற இவர்களுக்கு புரிகின்ற மொழியை கையாள்வதற்கு தமிழகத்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறை கூவலாக விடுகின்றோம். ◾தமிழ்ச்செல்வன். #👨மோடி அரசாங்கம்