ஃபாலோவ்
Arunachalam
@463115585
14,326
போஸ்ட்
52,383
பின்தொடர்பவர்கள்
Arunachalam
580 காட்சிகள்
அரசு பயங்கரவாத கொடூரமான ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்ய போராடுவோம் ==================== தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தலில் பாசிச பாஜகவை முறியடிப்பதற்கு திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முற்போக்கு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாசிசம் என்பது தமிழகத்தில் மட்டும் தனியாக நுழையப் போவதில்லை நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலாக மதச் சிறுபான்மையினர் மீது அறிவு துறையினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பன மதத்திற்கு உள்ளேயே உள்ள பெரும்பான்மை மக்களான சூத்திர பஞ்சம சாதிகள் மற்றும் பழங்குடியினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் யாரை கையை காட்டுகிறதோ அவர்கள் மீது ஊபா சட்டத்தை பாய்ச்சுவதன் மூலம் விசாரணையும் இல்லை; பெயிலும் இல்லை என்று சிறையில் அடைக்கப்படுகின்றனர். கோவை மாவட்ட பியூசிஎல் அமைப்பைச் சேர்ந்த தோழர் பொன். சந்திரன் முன் வைத்துள்ள கட்டுரையின் இணைப்பாக ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்த காணொளி விளக்குகிறது. ---------------------------- https://youtu.be/kPgCDb122JM?si=5X4HKIPzgyapIgXn #👨மோடி அரசாங்கம் ----------------------------- வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வளர்களும் அரசு பயங்கரவாத கொடூரமான ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்யவும், பாசிச பாஜக கொண்டுவந்துள்ள மக்கள விரோத சட்டங்களை திரும்பபெறவும் போராடுவோம். மக்கள் கலை இலக்கியக்கழகம் தமிழ்நாடு. 20-02-2026
Arunachalam
1.9K காட்சிகள்
#திமுக கூட்டணியிலிருந்து #விசிகவை உடைப்பதற்காகவே விசிகவினுள் அனுப்பப்பட்ட வன் தான் #ஆதவ்அர்ஜூனா எனும் #சங்கி களின் கைகூலி... ஆனால்,... அச்சூழ்ச்சியை இலாவகமாக முறியடித்தார் #தோழர்திருமா. தோழர் திருமாவை நடிகன் #தற்குறியோடு சேர்க்கப் போட்ட திட்டம் தோல்வியடைந்தபின், தான் தவெகவிலேயே அய்கியமானான் #லாட்டரிவியாபாரி ஆதவ்! இப்போது #காங்கிரஸில் சில கைகூலிகளை வைத்து கூட்டணியை உடைத்துவிட முயல்கிறது இக்கூட்டம். இன்னும் முதல் தேர்தலை சந்திப்பதற்கு முன்பே, கேடுகெட்ட சூழ்ச்சிகளை நம்பி கேவலமான பேரங்களை அரங்கேற்றும் நடிகன் #தற்குறியின் நாடகம் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வும் என்பது உறுதி. எத்தனையோ ஜாம்பவான்கள் முட்டி, மோதி மண்டையை உடைத்துக் கொண்டு சென்ற #திமுக எனும் கற்கோட்டையின் மீது, #லாட்டரிவியாபாரி, #வாச்சாத்தி குற்றவாளி, #பாண்டி மது வியாபாரி, #அரசியல் தரகர்கள், #பாஜக ஆகியோரை நம்பி #தற்குறியும் முட்டிக் கொண்டிருக்கிறான்! "#டேக்ஷாட்" "#ஆக்‌ஷன்" என்றதும் சற்று ஆடிவிட்டு, கேரவன்குள் சென்று ஓய்வெடுக்கும் ஒப்பனை கலையாத தொழிலல்லடா அரசியல்! குறைந்தபட்ச அறம் கூட இல்லாதவர்கள் இங்கே அம்பலப்பட்டு அழிந்தே போவார்கள். இத்தேர்தல் #தற்குறிக்கு அரசியலை புரிய வைக்கும்! #தமிழ்நாடு நடிகனின் பதவிபோதையை தெளிய வைக்கும்!!.. #👨மோடி அரசாங்கம்
Arunachalam
568 காட்சிகள்
பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது" - எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்: வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது. அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார். வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார். அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில் (11.12.1968) பேசினார். மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான். எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்". தரவு: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம். #👨மோடி அரசாங்கம்
Arunachalam
650 காட்சிகள்
இந்துத்துவ தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்படும் முஸ்லீம்கள்...😡 கேள்வி குறியாகும் அரசியல் அமைப்பு சட்டம் கேள்வி குறியாகும் தலைநகரின் சட்டம் ஒழுங்கு.. சனாதன சங்கிகள் ஆட்சியின் தலைமை இடமான தலைநகர் டெல்லி நந்த்நாகரிக் பகுதியில் உள்ள B1 அரசு பள்ளி அருகில் 15 வயது இஸ்லாமிய மாணவன் தெஹ்ஜீம் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த பொழுது.... அங்கே கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளை கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவர் தன்னிடம் இருந்த செல்போனை பயன்படுத்தி வீட்டுக்கு போன் செய்து தந்தையிடம் பேசிய பொழுது. தன்னை 15கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குவதாகவும் தன்னை வந்து காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். இதைக் கேட்ட தந்தை முகமது அமருதீன் (35) சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். அங்கே தன் மகனை 15 இருக்கும் மேற்பட்டோர் தாக்குவதை கண்டதும் குறுக்கே புகுந்து காப்பாற்ற முயற்சி செய்தார்... அதில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாணவரின் தந்தையை குறி பார்த்து மார்பில் சுட்டுள்ளான்.. துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த முகமது உமருதீன் குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி முகமது அமர்ருதீன் உயிரிழந்தார்.... காவல்துறை வழக்கு பதிவு செய்தது ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்று யாரையும் இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை... சம்பவ இடத்திற்கு வந்த முகமது அமருதீன் மனைவி சுயநினைவு இழந்தார் பிறகு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி டெல்லி பாஜகவினர் கூறும் பொழுது. எப்படியும் நீதிபதி தங்களை சேர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்றும் மூன்று நான்கு வருடங்களில் நன்னடத்தை காரணமாக அவர்களை எங்கள் அரசு விடுவிக்கும் என்று தைரியமாக கூறினார்கள்....😷😷 #👨மோடி அரசாங்கம்
Arunachalam
652 காட்சிகள்
💢 நிருபர் : RSS - தலைவர் மோகன் பகவத் ஒவ்வொரு இந்துவும் 3-குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாரே? 💢சங்கராச்சியார் அவிமுக்தேஷ்வரானந்தா : முதலில் மோகன் பகவத் கல்யாணம் செய்து கொண்டு 3-குழந்தைகள் பெற்று அவர்களை வளர்த்து ஆளாகட்டும் பிறகு பேசலாம். - 💢 மோகன் பகவத் மண்டையிலிருந்த களிமண் கரையட்டும். 💢 அடுத்தவன் பிள்ளைகளை கலவரம் செய்யவும், குடி கெடுக்கவும் தயார் செய்வான், இவன் பிள்ளையாக இருந்தால் அது போல் செய்வாரா என்று நறுக்கென்று பதில். 🤜🤛 #👨மோடி அரசாங்கம்
Arunachalam
679 காட்சிகள்
என் நாட்டின் சீர்கேட்டை என்னவென்று சொல்வது?? தவறான வழியில் பணம் புகழ் பெற்ற ஒரு மோசமான இழிவான மனிதன்.. சாமியார் என்று சொல்லி பல நூறு ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அதுவும் வனவிலங்குளுக்கு உரிய இடத்தை எவ்வித மனசாட்சி உறுத்தும் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு... இளைஞர்கள் இளம் பெண்களை யோகா கற்று தருவதாக கூறி உள்ளேயே வைத்து... தலையை மொட்டையடித்து அரை வயிறு கால் வயிறு கஞ்சி ஊற்றி அவர்களை யோகா என்ற பெயரில் கொடுமைப்படுத்தி....பெற்றோர்களிடம் அனுப்பி வைக்காமல் அவர்களின் எதிர்காலத்தை சின்னாப்பின்னமாக்கி.... சரி... இந்த (அ)யோக்கியன் திருமணம் செய்து கொள்ளாத துறவியா என்றால்...#இல்லை.. திருமணம் ஆகி மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்... பலரும் அப்பெண்ணைக் கொன்றவர் இந்த மனிதன் என்று சொல்வது ஒரு பக்கம்... பல இளைஞர்களின் வாழ்வை சீரழித்த இந்த மகா உத்தமன் தன் மகளுக்கு வெளிநாட்டு வாழ் கணவனை திருமணம் செய்து வைத்தார்...நதியை இணைக்கிறேன் என்று சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டவன்... ஒவ்வொரு சிவராத்திரியன்று சினிமா பிரபலங்கள் குறிப்பாக கவர்ச்சி நடிகைகளின் நடனம்.. இந்த விழாவுக்கு வருகைத் தருவதெல்லாம் #பிரதமர் #உள்துறைஅமைச்சர் #குடியரசுதலைவர்... இதென்ன அரசு விழாவா...??? சமீபத்தில் தான் சுபஷ்ரி என்று ஒரு பெண் இவரது யோகா மையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் குடியரசு தலைவர் இங்கே வந்திருப்பது போன்ற ஒரு கொடுமை உலகில் எங்கும் நிகழ்ந்திருக்காது... இந்த கேவலங்களை முந்திக் கொண்டு எழுதி காசு பார்க்கும் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள்.. மானமுள்ள என்னைப் போன்ற மானமுள்ள ஒவ்வொருவரும் காறி உமிழ வேண்டும்... இப்போது நான் எழுதும் இந்த செய்தி பல திராவிட மாடல்களுக்கு எரிச்சல் தரும்.. ஆமாம்.. குடியரசு தலைவர் யோகா மையத்திற்கு வருகிறார் என்றால் இதனை தமிழக முதல்வர் கட்டாயமாக அனுமதித்து இருக்கக் கூடாது... எக்காரணம் கொண்டும் தமிழ் நாடு காவல்துறை அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க முன் வந்திருக்கக் கூடாது... இன்னும் சொல்லப்போனால் தடை ஆணை கூட வாங்கி இருக்கலாம்.. ஜெயலலிதா குற்றவாளி எண் ஒன்று என்பதாகலாம்... ஆனால் இந்த யோகா மையத்திற்கு குடியரசு தலைவர் வருகிறார் என்றால் அதனைத் தடுத்து நிறுத்தி இருப்பார் நிச்சயமாக... இந்த யோகா மையத்திற்கு குடியரசு தலைவருடன் ஒரு அமைச்சர் வேறு எடுப்பு... சிவராத்திரி விரதம் இருப்பது என்பது பக்தர்களின் தனிப்பட்ட நம்பிக்கை.. அமைதியாக பக்தர்கள் சிவனை வழிபடுவதற்கான ஒரு தினம் . அந்த இரவில் சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் தேவாரம் திருவாசகம் போன்ற பதிகங்கள் பாடி துதிப்பதை அர்த்தமற்றதாக்கி... கவர்ச்சி நடிகைகளுடன் சேர்ந்து இந்த ஜக்கி நடனம் என்ற பெயரில் கூத்தடிப்பது..போதை வஸ்துக்கள் உபயோகிப்பது... இதற்கெல்லாம் தரம் பிரித்து கட்டணம் வசூலிப்பதும்... #கண்டணத்துக்குரியது... என் இந்த பதிவை அநேகமாக பலரும் #பார்க்காதது_போல_கடந்து_சென்று_விடுவார்கள்... காரணம் #பயம்_பயம்_பயம்..... இம்முறை ராணுவ வீரர்கள் இவன் கையால் ஷீல்டு வாங்கிய கொடுமை... ஒரு போதும் வரும் முன் காப்போம் என்பதே இல்லை.. #தமிழ்நாட்டின்இந்தியாவின் லிட்டில் ஜேம்ஸ் தீவு போன்ற தோழர் Sasikala Devi Sulaiman .. #👨மோடி அரசாங்கம்
Arunachalam
685 காட்சிகள்
ஊருக்கு உபதேசம் இவர் வாழ்வது அனைத்தும் இலவசத்திலேயே சாமானிய மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் இந்த அயோக்கியர்கள் பெற்றுள்ள வசதி வாய்ப்புகளை பாருங்கள். கீழே இவர்கள் பெரும் சலுகைகளை வேண்டாம் என்று கூறிவிட்டு இவர் எது வேணாலும் பேசட்டும் இலவச குடியிருப்பு: புது தில்லியில் உள்ள முழுமையாக ஏசி பொருத்தப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு. இலவச பாதுகாப்பு: அந்த குடியிருப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வழங்கும் ஆயுதம் தாங்கிய உயர்மட்ட பாதுகாப்பு. இலவச பயணம் மற்றும் போக்குவரத்து: இலவச ஓட்டுநர்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ இலவச அரசு வாகனங்கள், முதல் வகுப்பு ஏசி ரயில் பயணங்கள் பணியாளர்களுக்கும் சேர்த்து இலவசம் மற்றும், அதிகாரபூர்வ பயணத்திற்கு செலவான பணத்தை அரசிடம் கோரி திரும்பப் பெறுதல் போன்ற பல இலவச பயணச் சலுகைகள் உண்டு. இலவச மருத்துவ வசதிகள்: தலைமை நீதிபதி மற்றும் அவரைச் சார்ந்த குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு உட்பட விரிவான இலவச மருத்துவ சிகிச்சைகள். இலவச மின்சாரம், தண்ணீர், தொலைபேசி, கைபேசி, பிராட்பேண்டு இணையம்: பணிக்காலத்தில்: தலைமை நீதிபதிக்கு அவரின் அரசு குடியிருப்பில் தொலைபேசி, மின்சாரம், தண்ணீர், கைபேசி டேட்டா இணையம் யாவும் இலவசம். ஓய்வுக்குப் பிறகு: 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிக்கு குடியிருப்பு தொலைபேசி இணைப்பு இலவசமாகவும், குடியிருப்பு தொலைபேசி, மொபைல் போன், பிராட்பேண்ட் அல்லது மொபைல் டேட்டாவிற்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை மாதத்திற்கு ரூ.4,200 வரை மட்டும் இலவசமாகவும் உண்டு. இலவச ஊழியர்கள்: செயலாளர்கள் மற்றும் எழுத்தர் ஊழியர்கள் உட்பட அர்ப்பணிப்புள்ள தனிப்பட்ட ஊழியர்கள் அரசின் சம்பளத்துடன். ஓய்வுக்குப் பிந்தைய இலவச சலுகைகள்: குறிப்பிடத்தக்க ஓய்வூதியம் (கடைசியாகப் பெற்ற சம்பளத்திற்குச் சமம்), கூடுதலாக வாழ்நாள் முழுவதும் இலவச பணியாளர்/ஓட்டுநர் சேவைகள். ஓய்வுக்குப் பிந்தைய காலத்திலும் மருத்துவக் காப்பீடு உட்பட விரிவான இலவச மருத்துவ சிகிச்சைகள். மேற்கண்ட இலவசங்கள் எல்லாம் தாண்டி... மாதா மாதத்திற்கு 2,80,000 ரூபாய் சம்பளம். பண்டிகை கால போனஸ். பஞ்சப்படி. இது எலாம் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விட இவருக்கு அதிகம். இப்போது... இவர் கேட்ட முக்கியமான கேள்விக்கு வருவோம். மாதா மாதம் இவர் பெறும் 2.8 லட்சம் ரூபாய் சம்பளம் தாண்டி... இவர் அனுபவிக்கும் மேற்கண்ட அனைத்தும் இலவசம் எனும் போது... இது குறித்து... அந்த ஏழை மக்கள் இவரை பார்த்து திருப்பிக் கேட்க மாட்டார்களா..?!அய்யா நீதிபதி அவர்களே "லட்ச கணக்குல சம்பளம் வாங்குறீங்களே அப்புறம் எதுக்குங்க உங்களுக்கெல்லாம் இலவச பங்களா - பங்களாவுல பணி செய்றவங்களுக்கு சம்பளமும் அரசாங்க ( மக்கள் வரி பணம் ) காசுல, இலவச மின்சாரம், இலவச வாகனம் - அந்த வாகனத்துக்கு எரிபொருள் இலவசம் - சுங்க கட்டணம் இலவசம், விமான பயணம், கோவில் வழிபாடுகள்ல சலுகைகள் - முன்னுரிமைகள், இது போக மருத்துவப் படி அது இது ன்னு ஏகப்பட்ட இலவசங்கள், சலுகைகள் லாம் உங்களுக்கு எதுக்குங்க ????. அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு தான் லட்க கணக்குல சம்பளம் வருதில்ல, அதுலேயே பார்த்துக்கிறோம் ன்னு சொல்லுங்க சார் .... லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கு இவர்கள் நாட்டின் நலன் கருதி 10,000 15,000 சம்பளத்தில் வாழ தயாரா? இத்தனை இலவசங்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டு நாட்டின் நலன் கருதி பத்தாயிரம் மற்றும் 15 ஆயிரம் சம்பளத்துக்குள் வாழ தயாரா? ஜே அப்துல் சமது #👨மோடி அரசாங்கம்
Arunachalam
713 காட்சிகள்
பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்னை விட, உயர்ந்தவர் நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி! இவரு ராஜினாமா பண்ணவும் மாட்டார்! மோடி டிஸ்மிஸ் செய்யவும் மாட்டார்! மோடி குடுமி ஹர்தீப் சிங் பூரி கையில்! ரட்சிக்கணும் பாபாவே! #👨மோடி அரசாங்கம்
See other profiles for amazing content