Follow
arukanimembers
@781094736
708
Posts
585
Followers
arukanimembers
606 views
10 hours ago
குமரி மாவட்டம் தேரேகால்புதூர் அருகே உள்ள வீட்டுவளாகத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து ஜன்னல் வழியாக வீசியதாக கூறி, குழந்தையின் தாய் சுபாஷினி (23) மற்றும் அவரது அக்காள் கணவர் மதன்குமார் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.குமரி மாவட்டம் தேரேகால்புதூர் அருகே உள்ள வீட்டுவளாகத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து ஜன்னல் வழியாக வீசியதாக கூறி, குழந்தையின் தாய் சுபாஷினி (23) மற்றும் அவரது அக்காள் கணவர் மதன்குமார் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
515 views
10 hours ago
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த முத்து பாலன் என்பவர் நேற்று பழவிளையில் மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலீசார் மின்வாரியத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
884 views
10 hours ago
கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத்தாமரை குளம் பழையாறு அருகே மிதிவண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத தொழிலாளி மீது ரயில் மோதி பலி! சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
475 views
1 days ago
கன்னியாகுமரி மாவட்டம் – 2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும் திட்டமிட்டும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நிறைவு பெற்றன. தேர்தல் பரப்புரை பாதுகாப்பு * தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததிலிருந்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்ட பரப்புரைகளுக்கு காவல்துறை சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் சீராக நடைபெற உறுதி செய்யப்பட்டது. தேர்தல் நாள் பாதுகாப்பு * வாக்குப்பதிவு நாளில், மாவட்ட காவல்துறையின் தீவிர மற்றும் துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகளால், எந்தவித குற்றச்செயல்கள் அல்லது அசம்பாவிதங்களும் இன்றி, அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு * மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட்டு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நாள் பாதுகாப்பு * வாக்கு எண்ணிக்கை பணிகள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று, அதற்காக பலத்த மற்றும் பலத்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எண்ணிக்கை மையத்திலும், மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. * நாட்டின் ஜனநாயகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க, முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
943 views
1 days ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல்விளை Y-183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க லிமிட்-ல் வெளிநாட்டில் பணியில் இருக்கும் வட்டவிளை ஊரைச்சார்ந்த சிவபாரத் என்பவரின் நகைகளை 68.3 கிராம் நகையை ஆவணத்தை திருத்தி போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்த செயலாளர் மனோகரன் கிளார்க் இராதிகா மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் R.சத்தியரூபன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மேலும் இது போன்று பாதிக்கப்பட்ட நபர்கள் யார் யார் என விசாரிக்க வேண்டும் எனவும் இது போன்ற கையாடல்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்று உள்ளதா என மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கூட்டுறவு சங்க ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் ஓட்ட பட்ட போஸ்டரால் பரபரப்பு. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
521 views
1 days ago
கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த தவெக வேட்பாளர் SR.மாதவன். " கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு நன்றி., எனக்கு வாக்களித்த 72,000 பேருக்கும் ஓட்டு போடாத மக்களுக்கும் நன்றி. தளபதி ஆட்சி அமைத்து என்ன என்ன திட்டங்கள் அறிவித்தாரோ அனைத்தையும் நான் எம்எல்ஏ வாக இல்லா விட்டாலும் மக்களுக்காக நிறைவேற்றுவேன். மக்கள் என்னை நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க, 72,000 பேருக்காக மட்டும் இல்ல எல்லா மக்களுக்கும் நல்லது செய்ய வந்து இருக்கிறோம் தளபதியும் அதே தான் சொல்லி இருக்கிறார். மக்களுக்கான ஆட்சியை தலைவர் விஜய் கண்டிப்பாக கொடுப்பார்." - R. மாதவன். தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
469 views
3 days ago
சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பாறைகளால் விபத்து அபாயம்! கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே புளிமூடு பகுதியில் கடந்த மாதம் மழை நீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டது . அப்போது அங்கிருந்த பாறைகளை சாலையோரத்தில் வைத்து விட்டு மழை நீர் வடிகால் ஓடை கட்டினர். ஆனால் இன்று வரை அந்த சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கற்கள் அகற்றப்படாமல் அங்கேயே உள்ளது. இதனால் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்லும் போது இடையூறாக உள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல இடங்களில் வடிகால் ஒடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் இதே நிலைமை உள்ளது. எனவே பாறை கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
559 views
4 days ago
சிறுமியிடம் தவறாக நடந்தவர் கைது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள பகுதியில் 7 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது டெம்போ டிரைவரான நீலகண்ட பாபு என்பவர் சிறுமியை பார்த்து ஆபாச செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தாயார் தட்டி கேட்ட நிலையில் நீலகண்ட பாபு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து நீலகண்ட பாபுவை கைது செய்தனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
498 views
4 days ago
மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலி திருட்டு. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே காரவிளையைச் சேர்ந்த சாந்தா (77), என்ன மூதாட்டி நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் திருவிழாவிற்குச் சென்றபோது, வெட்டூர்ணிமடம் பகுதியில் அவரது 7 பவுன் தங்கச் சங்கிலி மர்ம ஆசாமியால் திருடப்பட்டது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் நகையைப் பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், வடசேரி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்