Follow
arukanimembers
@781094736
594
Posts
446
Followers
arukanimembers
452 views
3 hours ago
குமரி மாவட்டம் - சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கேரை (yellowfin tuna ) மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது 5 கிலோ முதல் 200 கிலோ வரை உள்ள கேரை மீன்களை தூண்டில் மூலம் பிடித்து வந்த மீனவர்கள் வார கடைசியான இன்று (சனிக்கிழமை) உற்சாகமாக விற்பனை செய்தனர். கேரை மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
407 views
3 hours ago
💥 சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு: 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது சுசீந்திரம் அருகேயுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள வடிவீஸ்வரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதத்தார் இசக்கியம்மன் கோயிலின் கதவை உடைத்து திருட்டு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயிலுக்கு வந்த பூசாரி, ரூ.1500 மதிப்புள்ள பித்தளை சூலாயுதம் காணாமல் போனதை கவனித்து நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். இதுகுறித்து அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில் செயல் அலுவலர் கொம்பு குமார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மருங்கூர் அமராவதி விளையை சேர்ந்த மரிய சேவியர் (37) கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
493 views
4 hours ago
குமரி மாவட்டம் - நாவல்காடு அருகே கான்கிரீட் போடும் வாகனத்தை இழுத்து வந்த டிம்போ கவிழ்ந்து விபத்தானதில் ஒருவர் பலி. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
1.2K views
4 hours ago
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பனியின் போது நெடுமங்காடு பகுதியை சார்ந்த சுஜாதா என்ற பக்தர் தவறவிட்ட மணி பர்சை பணத்தோடு மீட்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
492 views
14 hours ago
அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
6.1K views
1 days ago
நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (06.03.2026) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் திரு.என்.சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), திரு.ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் உட்பட பலர் உள்ளார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
565 views
1 days ago
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி செல்போனை தவறவிட்ட ஆசாரிபள்ளத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பக்தரின் செல்போனை கண்டறிந்து ஒப்படைத்த போலீசார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
arukanimembers
480 views
1 days ago
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பேருந்து நிறுத்ததில் பயணிகள் அமருவதற்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளது. பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்கும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் இருக்கையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
See other profiles for amazing content