#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! #அரசியல் பழகு #கற்றுது அரசியல் 13வது நாளாக தொடரும் ஈரான் அமெரிக்க போரில் நேற்று பெஞ்சமின் நேதன்யாகு பத்திரிகையாளர்களை சந்தித்தது முக்கிய விஷயம், அவர் எங்கள் தாக்குதலில் கொல்லபட்டார் என ஈரான் வதந்தி பரப்பியபின் இப்போது நேரடியாக வந்த நேதன்யாகு "நான் இதோ வந்துவிட்டேன் அவர்களின் புதிய தலைவர் எங்கே" என்பது போல் வந்து நின்றார்
அவர் போரை ஈரானிலும் லெபனானிலும் தொடர்வதாக அறிவித்தார், ஈரானில் ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை அல்லது மக்கள் எழுச்சிபெறும் காலம் வரை இது தொடரும் என்பதுபோல் அவரின் அறிக்கை இருந்தது, அதுவரை எத்தனை தலைவர் வந்தாலும் கொல்வோம் என அவர் சீறியது இனி ஹமாஸ், ஹெஸ்புல்லா போல ஈரானையும் அவர்கள் நீண்டகால இலக்காக கொண்டுவிட்டார்கள் , ஒரு அரசாங்கமாக அல்லாமல் தீவிரவாத இயக்கமாகவே அவர்களை கருதுகின்றார்கள் என்பதை காட்டுகின்றது
இந்நிலையில் ஈரானிய கொத்து குண்டுகள் இஸ்ரேலில் விழுந்திருக்கின்றன, ஆனால் இவை இஸ்ரேலிய மக்களை அச்சுறுத்தும் விஷயமாக பார்க்கபடுகின்றது, இஸ்ரேலியர்கள் இதற்கு கலங்குபவர்கள் அல்ல என்பதால் உறுதியுடன் நிற்கின்றார்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை வேகமாக தொடர்கின்றன, ஈரானும் அடிவாங்கி கொண்டே சில தாக்குதல்களை செய்கின்றது, அமெரிக்க எண்ணெய் நிரப்பும் பெரிய விமானம் ஜோர்டான் அருகே வீழ்ந்திருக்கின்றது, நிச்சயம் இதை ஈரானோ அல்லது அடிபொடி இயக்கமோ தாக்கியிருக்க வாய்ப்பில்லை என்பதால் அது விபத்தாகவே கருதபடுகின்றது
ஈரானில் ஆட்சிமாற்றம் என களமிறங்கிய அமெரிக்கா அது உடனே நடக்கவில்லை என்பதை அறிந்து அந்த விவகாரத்தை தள்ளிவைத்துவிட்டு ஈரானை மிக இறுக்கமாக கட்டுபடுத்திவிட்டு ஹோர்ம்ஸ் நீரிணையினை மீட்டு கப்பல் போக்குவரத்தை சீர்படுத்த விரும்புகின்றது, அதற்கேற்ற நகர்வுகள் நடக்கின்றன
இன்னொரு பக்கம் ஈரானும் ஒரு முடிவுக்கு வர விரும்புகின்றது, அதன் பொருளாதாரம் தள்ளாடுவதால் ஒரு கவுரவமான தோல்வியுடன் அடிவாங்குவதை நிறுத்த அது முயல்கின்றது, இந்தியாவின் ஜெய்சங்கருடன் நான்காம் முறை நடத்தும் பேச்சுவார்த்தை அதை சொல்கின்றது
இப்போர் ஆயுத சந்தையில் அமெரிக்க பலத்தை காட்டியிருக்கலாம், எவ்வளவு அடித்தாலும் வாங்கும் ஈரானின் முதுகு பலத்தையும் காட்டியிருக்கலாம் இங்கு அமைதியாக சாதித்தவர் புட்டீன், கடந்த 10 நாட்களில் மட்டும் ரஷ்ய எண்ணெய்யின் ஏற்றுமதி அமெரிக்க அனுமதியுடன் 40 சதவீதம் அதிகரித்திருக்கின்றது
பல கோணங்களில் பார்த்தால் உக்ரைனில் நடக்கும் சண்டையினை ஈரான் பக்கம் திருப்பிவிட்டு இப்போது புன்னகையுடன் சம்பாதித்து கொண்டிருப்பவர் அவர்தான், ஆடாமல் ஜெயித்துகொண்டிருக்கின்றார்
இப்போர் எப்போது முடியும் என்பதை விட அது கொடுத்து கொண்டிருக்கும் பாதிப்புகளே உலகை கலங்க வைக்கின்றன, அரபு பகுதிகள் செல்வளம் மிக்கவை, பெரிய பெரிய முதலீடுகளை கொண்டிருப்பவை, வான்வழி போக்குவரத்து, சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி என எல்லா வகையிலும் முக்கியமானவை
இதனால் அங்கு நடக்கும் குழப்பங்கள் உலக பொருளாதாரத்தை அசைத்து பார்க்கும், இது உலகில் பெரிய பொருளாதார மந்த நிலையினை விரைவில் ஏற்படுத்தலாம், இன்னொரு பக்கம் போரினால் சேதமான துபாய் , குவைத், சவுதி என பல பணக்கார நாடுகள் உலகெங்கும் உள்ள தங்கள் நிதிமூலத்தை உள்நாட்டுக்கு இழுக்கும்போது அது பலவகையான பாதிப்புக்களை உலகில் ஏற்படுத்தும்
உலகம் ஒரு பொருளாதார மந்த நிலையினை நோக்கி செல்கின்றது, இதை அவதானித்தே இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா
அப்படி ஒரு நிலை வந்தால் 1 லட்சம் கோடி ரூபாய் உடனே விடுவிககபடும் என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றார்
கொரோனா காலத்தில் உலகம் முடங்கியபோது நிர்மலா அம்மையார் அறிவித்த 19 லட்சம் கோடி நிதி அறிவிப்புத்தான் இந்தியாவினை தூக்கி நிறுத்தியது, இல்லையேல் இலங்கை, நேபாளம் வங்கதேசம் மாலத்தீவு என பல தேசங்கள் சிக்கியது போல் இந்தியா சிக்கியிருக்கும்
இப்போது முதல்கட்ட நிதி 1 லட்சம் கோடி, நிலமை மோசமானால் பெரிய நிதி வழங்கபடும் என மோடி அரசு அறிவித்திருக்கின்றது, இது உலகின் மூன்றாம் பொருளாதார வல்லரசு இந்தியா என்பதை மெய்பிக்கின்றது, எந்த சூழலுக்கும் அசராத வகையில் மோடி அரசு தேசத்தை வடிவமைத்ததை இது காட்டுகின்றது
இந்நேரம் மோடி 25 பைசாதான் திருப்பி கொடுக்கின்றார் என சில்லறைபுத்தியுடன் பேசிய கோஷ்டிகளை மக்கள் நினைத்து கொள்வது நல்லது, உங்கள் அப்பன் வீட்டு பணமா என கேட்ட குரல்களை இப்போது நினைக்கவேண்டும்
மோடி மக்களின் வரிபணத்தை தன் வீட்டுக்கு தூக்கி செல்லவில்லை அதை நாட்டுக்காக பலவகையில் செலவிட்டு சேர்த்தும் வைத்தார், அதுதான் அவசர காலம் மிக கடுமையான மந்த நிலை காலத்தில் கைகொடுக்கின்றது
இவை எல்லாம் அறிந்தாவது மக்கள் திமுகவின் பொய்பிரச்சாரத்தை தள்ளி, அந்த மகா பொய்களை தரம் கெட்ட பொய்களை, தேசபற்றில்லா மகா அருவருப்பான பொய்களை வஞ்சனைகளை,பச்சை துரோக வார்த்தைகளையும் அதை சொல்பவர்களையும் புறக்கணித்து மோடியின் கரங்களை வலுபடுத்துதல் நன்று
கோவிட் காலத்தில் நாட்டை காத்த மோடி அரசு அதைபோன்ற மிக பெரும் பாதிப்பினை தரும் இந்த போர் காலத்திலும் நாட்டை காத்து கொண்டிருக்கின்றது , எந்த சூழலும் நாட்டை அசைக்காதவாறு வலுவான நிலையில் அது தேசத்தை நன்முறையில் வழிநடத்துகின்றது
மோடி அரசு காலம் கொடுத்த வரம், சரியான நேரம் தெய்வம் தந்த கரம், அந்த கரத்தை வலுபடுத்துவோம் தொடர்ந்து தேசத்தை பலபடுத்துவோம், தேசம் எந்த கடின சூழலையும் வெல்ல தோள்கொடுப்போம்
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த். ஆதாரம் & Credit goes to பிரம்ம ரிஷியார் சமுக ஊடக வலைதள பதிவு இருந்து