ஃபாலோவ்
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
8,365
போஸ்ட்
62,435
பின்தொடர்பவர்கள்
💕குறும்புக்காரன்🐬
471 காட்சிகள்
#கிரிக்கெட் #ரெங்கா! #renga-vamba! பாக் வீரர் இன்சமாம் உல் ஹக் விமர்சனம். நன்றி: திரட்ஸ் Balasubramanian
💕குறும்புக்காரன்🐬
563 காட்சிகள்
#இரவு வணக்கம் ஒரு வழியாக தனித்துபோட்டி என அறிவித்துவிட்டார் விஜயண்ணா, அவருடன் எந்த கட்சியும் கூட்டணி வைப்பதாக தெரியவில்லை அவர் எதிர்பார்த்த காங்கிரசும் அவர் முதுகில் ஏறி திமுகவிடம் பெரிய கிளையினை பற்றி கொண்டு ஓடிவிட்டது போலிருக்கின்றது இதனால் அவர் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டிருக்கின்றார், இதனால் பெரும் சவாலை எதிர்கொள்கின்றார் அதாவது அணில் குஞ்சுகள் தியேட்டரில் விசிலடித்து அல்லது விஜய்க்காக யாரையாவது மிரட்டியே பழக்கபட்டவை அவைகளிடம் விசிலடிப்பினை எதிர்பார்க்கலாமே தவிர தேர்தல் பணியினை எதிர்பார்ப்பது கடினம் , காரணம் அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரியாது தேர்தல் என்பது மாபெரும் பணத்தை கோரும் விஷயமாகிவிட்டதால் செலவினை யார் செய்வார்கள் என்பதும் கேள்வி, விஜய் தரப்பு பெரும் பணம் இறக்கினால் கண் கொத்தி பாம்பாக இருக்கும் சில அமைப்புகள் நிதிமூலம் கேட்டு பெரும் தொல்லை கொடுப்பார்கள், இது வில்லங்கமானது இதனால் தொகுதிரீதியாக பணம் செலவழிப்பது முதல் தேர்தல் பணிகள் வரை அணில்குஞ்சுகளுக்கு சவால்கள் அதிகம் அங்கே அவை இவற்றை எதிர்கொள்வது கடினம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் விசில் சின்னமும் சில நிபந்தனைக்கு உட்பட்டே கொடுக்கபட்டிருக்கின்றது, சில தொகுதிகளில் இதே விசில் சின்னத்துடன் சுயேட்சைகள் நிற்கவும் வாய்ப்பு உண்டு, அப்போது அணில்குஞ்சுகளே தடுமாற கூடும் ஒரு பக்கம் தேர்தல் பணி, ஒரு பக்கம் பெரும் செலவு, ஒரு பக்கம் அணில்குஞ்சுகளின் உள்வீட்டு சண்டை, ஒரு பக்கம் எதிர்கட்சிகளின் வியூகம் இவற்றுகிடையில் விஜயண்ணாவின் நிலை வரும் தேர்தலில் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான் "அமைதியா வேலைபாருங்கடா அப்ப்ரசெண்டிகளா,, சோதிக்கிறாங்களே என்னய... அடேய் பல கோடி காண்ட்ராக்ட்டுடா.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானுகளே" ஆம், பிரென்ட்ஸ் படத்தின் பிரபலமான காமெடி வசனம் தனக்கே வரும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார், என்ன செய்வது? சற்றும் எதிர்பாராதெல்லாம் நடப்பதுதான் வாழ்க்கை... #ரெங்கா! #renga-vamba! முகநூல் பதிவு தரவு இருந்து
💕குறும்புக்காரன்🐬
596 காட்சிகள்
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 #ரெங்கா! #renga-vamba! பாரத தேசம் இன்று 77வது குடியரசு தினத்தினை பெருமையுடன் கொண்டாடுகின்றது. பாரத தேசம் பழம் பெரும் தேசம் நீர் அதன் புதல்வர் இந்நினை அகற்றாதீர் - மகாகவி பாரதியார்
💕குறும்புக்காரன்🐬
457 காட்சிகள்
#கிரிக்கெட் #ரெங்கா! #renga-vamba! Abhishek Sharma, Remember the name🔥IND vs NZ ( 3 rd T20 in Indian soil) He becomes the second-fastest to score a half-century for India in T20Is, after his mentor Yuvraj Singh, who did it in 12 balls. 📸: Jio Star
💕குறும்புக்காரன்🐬
587 காட்சிகள்
அண்டை தேசம் #பங்களாதேஷ் அண்டை தேசம்அண்டை தேசம்வங்கதேசத்தில் பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... வங்கதேச ஜவுளித் துறை நெருக்கடியில் இந்தியாவின் பங்கு ஷேக் ஹசீனா தலைமையில் ஜவுளித்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது, வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 80% க்கும் மேல் ஜவுளித்துறையே பங்களித்தது... சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் உருவெடுத்தது. ஆனால் வீதி யாரை விட்டது? அமெரிக்க ஆசியால் ஷேக் ஹசீனாவை விரட்டி இந்திய விரோத யூனிஸ் ஆட்சி வந்தது * இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதி செய்ய வங்கதேசம் 5 முக்கிய தரைவழிகளை தடை செய்தது. * இந்தியாவிலிருந்து வரும் அரிசி, மீன் மற்றும் புகையிலை மீது கட்டுப்பாடுகளை விதித்தது. * இந்திய சரக்குகள் வங்கதேசப் பகுதி வழியாகச் செல்வதற்குப் புதிய போக்குவரத்துச் சுங்கக் கட்டணங்களை (Transit Fees) விதித்தது. இதையெல்லாம் பார்த்த பாரதம் நாங்க அமெரிக்காவையே சுருட்டி அக்குள் ல வச்சிடுவோம் நீ என்னடா சுண்டக்கா பயனு ஆட்டத்தை ஆரம்பித்தது... 1. துறைமுகக் கட்டுப்பாடுகள் (Port Restrictions): 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் (RMG) மற்றும் சணல் பொருட்களைக் கொண்டு வர இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது... முன்னதாக 76% வர்த்தகம் பெட்ராபோல் (Petrapole) போன்ற தரைவழி எல்லைகள் வழியாக நடந்து வந்தது... ஆனால், இந்தியா இதைத் தடுத்து, கொல்கத்தா மற்றும் மும்பையின் நவா ஷேவா (Nhava Sheva) ஆகிய இரண்டு கடல் துறைமுகங்கள் வழியாக மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்தது... இதனால் போக்குவரத்துச் செலவு அதிகரித்ததோடு, 2-3 நாட்களில் நடக்க வேண்டிய வர்த்தகம் வாரக்கணக்கில் தாமதமாகிறது... 2. தரைவழி இறக்குமதித் தடை: சில குறிப்பிட்ட சணல் பொருட்கள் மற்றும் துணி வகைகளை நில எல்லைகள் வழியாகக் கொண்டு வர இந்தியா முழுமையாகத் தடை விதித்துள்ளது. இது வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 3. 'டம்பிங்' (Dumping) - குறைந்த விலை நூல் விற்பனை: இந்திய அரசு தன் நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்குப் பல்வேறு மானியங்களையும் (Subsidies), குறைந்த வட்டி கடன்களையும் (சுமார் 6%) வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்திய உற்பத்தியாளர்கள் வங்கதேச சந்தையில் அவர்கள் விலையை விடக் குறைவான விலைக்கு நூல்களைக் குவித்து வருவதாக வங்கதேச ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வங்கதேச ஆலைகளின் சுமார் 12,500 கோடி டாக்கா மதிப்பிலான நூல் விற்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்... வங்கதேசத்தின் ஜவுளித்துறை (Textile Industry) தற்போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வங்கதேச ஜவுளி ஆலைகள் சங்கம் (Bangladesh Textile Mills Association - BTMA) வரும் பிப்ரவரி 1, 2026 முதல் நாட்டில் உள்ள அனைத்து நூல் உற்பத்தி (Spinning) ஆலைகளையும் காலவரையன்றி மூடப்போவதாக அறிவித்துள்ளது. ஆலை உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்... "சொத்துக்களை விற்றால் கூட கடனை அடைக்க முடியாது" என்று BTMA தலைவர் ஷவ்காட் அஜீஸ் ரசல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்... #Geopolitics #EconomicPower #modi
See other profiles for amazing content