ஃபாலோவ்
RamaswamyAnnamali
@swamy_6943
7,965
போஸ்ட்
31,560
பின்தொடர்பவர்கள்
RamaswamyAnnamali
4.1K காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
#தீபாவளி #பத்தி #தெரிந்து கொள்வோம் என்றால் பலகாரம் சாப்பிட வேண்டும், பட்டாசு வெடிக்க வேண்டும். இத்தோடு நம் கடமை முடிந்து விட்டது என்று தான் இன்றைய நிலைமை இருக்கிறது. *நாளை தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது மிக மிக முக்கியமான கடமை.* இதை கங்கா ஸ்நானம் என்பர். காசியில் இருக்கும் கங்கை நதி இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் நிறைந்து இருப்பாள். நம் வீட்டு வெந்நீர் பானைக்கு கூட அவள் வந்து விடுவாள். தன்மகன் என்று அறியாமல் நரகாசுரனை கொன்றுவிட்ட சத்தியபாமா, பூமாதேவியின் அவதாரம் ஆவாள். பொறுமையின் சின்னம் அவள். விஷ்ணுவிடம் சென்று, "ஐயனே! என் மகன் தவறு செய்து விட்டான். அதற்காக அவன் யார் என்றே அறியாமல் அவனை கொன்று விட்டேன். இருப்பினும் மக்கள் அவனது மரணத்தை கொண்டாடுவதை பார்த்தால், அவன் செய்த தவறுகளின் அளவு எனக்கு புரிகிறது. இப்போது குளிர்காலம். இந்த மக்கள் நாளை கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். குளிரில் அவர்கள் நடுங்கிப் போவார்கள். எனவே அவர்கள் வெந்நீரில் குளிக்க அனுமதி அளியுங்கள்" என கேட்டாளாம். அவளது தயாள குணத்தை அறிந்து நெகிழ்ந்து போன விஷ்ணு, அனைத்து மக்களும் சுடுநீரில் குளிக்க அனுமதி அளித்தார். சுடுநீரில் குளிப்பதையும், ஏனோ தானோ என்று செய்யக்கூடாது. மண்பானை அல்லது செம்பு பானையில் வெந்நீர் வைப்பது சிறப்பு வாய்ந்தது. எந்த பானையில் வைத்தாலும் பாத்திரத்தை சுத்தமாக தேய்த்து இருக்க வேண்டும். பானை மீது மாக்கோலம் போட்டிருக்க வேண்டும். சமையலறை மற்றும் குளிக்கும் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே சுத்தப்படுத்தி இருக்க வேண்டும். ஒருவர் குளித்து முடித்து மற்றொருவர் குளிக்கச் செல்லும் முன் மீண்டும் குளியலறையை சுத்தப்படுத்த வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் நமது வீட்டுக்கு லட்சுமி தாயார் வருவாள் என்பது ஐதீகம்? அவள் சுத்தத்தை மிகவும் விரும்புவாள். எனவே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குளிக்கும்போது காசி விஸ்வநாதரையும் கங்காதேவியையும் மனதில் நினைத்தபடியே பக்தி உணர்வுடன் நீராட வேண்டும். இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. மனம் இருந்தால் இது போன்ற சடங்குகள் மீண்டும் நமது இல்லங்களில் துளிர் விட இந்த ஆண்டே விதை விதைக்கலாம்.
RamaswamyAnnamali
692 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்
#தீபாவளி #தெரிந்து கொள்வோம் #பத்தி தீபாவளி சீர்!* 🌹 *தீபாவளி என்றாலே* மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். அதில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கநாதரும் அடங்குவார். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளிக்கு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெருமாளுக்கு சாத்தப்படும். மேலும், கோயில் சிப்பந்திகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் பெருமாள் சார்பாக வழங்கப்படும். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. தொடர்ந்து கோயிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நதிகளுக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், விரலிமஞ்சள் பெருமாள் சார்பாக அந்தந்த சந்நதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வாருக்கு ஆசார்யர் சந்நதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு புத்தாடை, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, மூலஸ்தானத்துக்கு கிழக்கில் உள்ள கிளி மண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காக காத்திருப்பார்கள். அப்போது பெருமாளின் மாமனார் பெரியாழ்வாரும் ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகத் காத்திருப்பார். உற்சவர் நம்பெருமாள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க மங்கள வாத்தியம் வாசிக்கப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நிகழ்ச்சிக்கு பிறகு பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிஅளிப்பார். அதன்பின் கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவருக்கும் பெருமாள் புது வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். இந்த திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பண வரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது. குடும்பத்தில் மகிழச்சி பொங்கும். ஆரோக்கியமான வாழ்வும், செல்வமும் கிட்டும்.🌹
RamaswamyAnnamali
558 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்
#🙏கோவில் #தெரிந்து கொள்வோம்*மலைக்கோயில்* *கடற்கரை* *கோயில் ரகசியம்*: மலைகளிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா! நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஒரு மலையைக் காட்டி, ""இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாமப் பயிற்சி,'' என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா! ""வேறு வேலை இல்லையா! போங்க சாமி!'' என்று ஒருமாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அதேநேரம், ""அந்த மலையில் தங்கப்புதையல் இருக்கிறதாம்! அங்கே நிரூற்று இருக்கிறதாம். அதில் நீராடினால், கருப்பாய் இருப்பவர் கூட சிவப்பாகி விடுவாராம்,'' என்றால் என்னாகும்! அடித்துப் பிடித்து ஏறி மலை உச்சியை அடைந்து விடுவார். இதுதான் மனிதனின் மனநிலை. அதனால் தான் மலையிலும், கடற்கரையிலும் கோயில்களை அமைத்து வழிபாட்டு தலமாக்கினர் முன்னோர். மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம். விடுமுறை எடுக்க வேண்டிவராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்துசிந்திக்கும். இது ப
RamaswamyAnnamali
575 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்
#🙏ஆன்மீகம் #பத்தி#ஐப்பசிமாதம் ஸ்பெஷல் *இன்று ஐப்பசி மாதம் பிறக்கிறது : இந்த நாட்களை மறந்து* *விடாதீர்கள் !!* ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்? ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது. *ஐப்பசி பௌர்ணமி* : சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம். *ஐப்பசி சதயம் :* ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. *வளர்பிறை ஏகாதசி :* ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம். *தேய்பிறை ஏகாதசி :* ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும். *கடைமுகம் :* ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும். *தீபாவளி :* தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை நாட்களில் கொண்டாடப்படுகிறது. *கந்த சஷ்டி :* கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். 🙏🪷🙏
See other profiles for amazing content