ஃபாலோவ்
RamaswamyAnnamali
@swamy_6943
7,693
போஸ்ட்
30,660
பின்தொடர்பவர்கள்
RamaswamyAnnamali
520 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் சாந்த சொரூபியாக மாறிய பகவதி அம்மன்..!! இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். முகவரி: கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம். போன்: +91-480-280 3061. திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இருப்பிடம்: திருச்சூரிலிருந்து 45 கி.மீ., குருவாயூரிலிருந்து 50 கி.மீ., எர்ணாகுளத்திலிருந்து 55 கி.மீ.தூரத்தில் கோவில் உள்ளது. அனைத்து ஊர்களிலிருந்தும் கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது.
RamaswamyAnnamali
612 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#நவராத்ரி பூஜை #நவராத்ரி ஸ்பெஷல் *நவராத்திரி* *ஆறாம் நாள்* *உயர்வு தரும் ஆறாம் நாளான* *இந்திராணி பூஜை* *அம்மன் வடிவம்* : இந்திராணி *பூஜையின் நோக்கம்* : தூம்பர லோசன வதம் புரிதல். *இந்திராணி வடிவம்* : இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள். தென்னாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை. பண்டாசுரன் என்ற அசுரனுடன் போர் புரிந்த போது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப்பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள். நெருப்பு வட்டமானது தனது படைகளை காக்கும் பொருட்டு தீப்பிழம்பாக நின்றாள். இதனால் துர்கா தேவி ஜ்வாலா துர்கா என்று அழைக்கப்படுகிறாள். *அன்னைக்கு சாற்ற* *வேண்டிய* *மாலை :* செம்பருத்தி *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை* : சந்தன இலை *அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : ஆரஞ்சு நிறம் *அன்னையின் அலங்காரம்* : பிறைசூடிய சண்டிகா தேவி அலங்காரம் *அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள்* : சிவப்பு நிற மலர்கள். *கோலம்* : பருப்பு மாவு கொண்ட தேவிநாம கோலம் போட வேண்டும். *நைவேத்தியம் :* தேங்காய் சாதம் *குமாரி பூஜையில் உள்ள* *குழந்தையின் வயது* : 7 வயது *குமாரி பூஜையால் உண்டாகும்* *பலன்கள்* : செல்வ செழிப்பு உண்டாகும். *பாட வேண்டிய* *ராகம்* : நீலாம்பரி *பயன்படுத்த வேண்டிய* *இசைக்கருவி* : பேரி *குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்* : வடகம் *பலன்கள் :* மனக்கவலைகள் நீங்கும், பொருட்சேர்க்கை உண்டாகும். 🙏 🪷🙏
See other profiles for amazing content