உற்சாக பானம்#

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
616 views
1 months ago
எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ (From Lankasri Technology) +++++++++++++++++++++ உடல் எடை என்பது இப்போது உள்ள காலகட்டங்களில் அனைவரிடமும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. சிலர் எனது உடல் எடையை குறைக்க முடியவில்லையே என புலம்புவதும் உண்டு. அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பலருக்கும் பயனளிக்காமல் போய் இருக்கலாம். உடல் எடையை குறைக்கும் பொருட்களை உங்களது சமையல் அறையில் வைத்துக் கொண்டு ஏன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆம் தினசரி நாம் உணவில் பயன்படுத்தும் பட்டை, இஞ்சி தான் அந்த பொருள்கள். தினசரி காலையில் சூடாக ஒரு பட்டை இஞ்சி குடித்தால் போதுமானது. உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிடும். எடையை குறைக்க உதவும் அந்த டீயை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் பட்டை - 2 இன்ச் இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது) ப்ளாக் டீ இலைகள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை - 2 துண்டுகள் புதினா - 5 முதல் 6 இலைகள தேன் - தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து பரிமாறினால், பட்டை இஞ்சி டீ தயாராகி விடும். தினசரி இந்த டீயை குடித்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்வும் பெறும்.✍🏼🌹 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
593 views
1 months ago
எடை குறைக்கலாமா*? இலவங்கப்பட்டை தேநீர் 👇👇 ஒரு கப் கொதிக்கும் நீரில் இலவங்கப்பட்டை சேர்க்கவும். 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். பிறகு இலவங்கப்பட்டையை அகற்றி விடலாம், இலவங்கப்பட்டை சாறு அதில் இறங்கி இருக்கும். இப்போது அந்த நீரில் விரும்பினால் தேநீர்ப்பையைச் சேர்த்து பருகி மகிழுங்கள்! ❤️இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட இலவங்கப்பட்டை உதவுகிறது ❤️நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ❤️புற்றுநோய் வராமல் தடுக்கிறது ❤️நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்து ❤️கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது ❤️எடை குறைப்புக்கு உதவுகிறதுமாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது ❤️உங்கள் சருமத்திற்கு நல்லது. #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
581 views
1 months ago
#𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚•••• *🔹🔸இந்தியாவுக்குள் சீன முதலீடுகள் வர ஒன்றிய அரசு பச்சைக்கொடி!* *பச்சைக்கொடி* *📍. கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன முதலீடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.* *விதிகளை தளர்த்தி, மின்னணு மற்றும் உற்பத்தித் துறையில் சீன முதலீடுகள் எளிதாக இந்தியாவுக்குள் வர வழிவகை செய்ய முடிவு.* #ChineseInvestment | #IndiaChinaRelation #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
544 views
5 months ago
நீயே பலவீனமாக்காதே... உன்னுள் உள்ள உயிர் ஆற்றலை இயக்கு... உன்னுள் புதைந்திருக்கும் திறமையைச் செயலாக்கு... இது வெல்பவர்களின் உலகம்... இது வெல்பவர்களுக்கான உலகம்... இங்கே தோற்றவர்களைக் கண்டு கொள்வதில்லை.இங்கே புலம்புவர்களை யாரும் மதிப்பதில்லை.இங்கே அழுபவர்களை ஆறுதல்படுத்துவதில்லை... உங்களுக்கு உதவிட எவரும் வரப்போவதில்லை... மனிதர்களை நம்பி நேரத்தை வீணாக்காதே... நீயே விழுந்தாய்... நீயே எழுந்திரு... நீயே தோற்றாய்... நீயே வெல்... நீயே அவமானப்பட்டாய்... நீயே மரியாதை அடை...! இங்கே வாழ்க்கையை வாழக் சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதுமில்லை... அவர்கள் வாழ்வதற்கே வழி தேடி அலைகிறார்கள்... நீ திடம் கொள்... தீர்க்கமாய் இரு... உனக்குள் இருக்கும் உன்னையே அறிந்து தெளிந்து செயலாக்கு... "வாழ்க்கை" உன் வசம்..! ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.... முயற்யில்லாத ஆசையாலும் பயனில்லை...!!! #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
739 views
5 months ago
இன்று* *15 நவம்பர் 2025-சனி* *===========================* 1791 : முதலாவது அமெரிக்க கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. 1837 : சர்.ஐசக் பிட்மனின் சுருக்கெழுத்து முறை முதன் முதலில் வெளியானது. 1896 : தி போனோஸ்கிராப் எனும் முதல் சினிமா பத்திரிக்கை நியூயார்க்கில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. 1901 : நியூயார்க்கில் மில்டர் ரீஸ் ஹட்சின்சன் என்பவர் காது கேட்கும் கருவிக்கு காப்புரிமம் பெற்றார். 1904 : அமெரிக்காவைச் சேர்ந்த கிங் காம்ப் ஜில்லட் ரேஸர் பிளேடுக்கு காப்புரிமை பெற்றார். 1920 : பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1922 : பிரிட்டனில் முதல் முதல் தேர்தல் முடிவுகள் பிபிசி மூலம் ஒலிபரப்பப்பட்டது. ஈக்வடார், குயாகுவில் நகரில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டனர். 1926 : என்பிசி வானொலி நெட்வொர்க் 24 நிலையங்களுடன் சேவையைத் தொடங்கியது. 1930 : பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் முதன் முதலில் வண்ண விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. 1933 : தாய்லாந்தில் முதல்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1936 : ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே பெர்லினில் நடந்த கால்பந்து போட்டி முதன் முதலாக நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1943 : நாஜி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிட்டது. 1948 : இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1949 : நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் மகாத்மா காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர். 1969 : வியட்நாம் போர் :- வியட்நாம் போரை எதிர்த்து வாஷிங்டனில் 2,50,000 பேர் வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1971 : இன்டெல் நிறுவனம் உலகின் முதல் வணிக ஒற்றை சிப் நுண்செயலியான 4004 ஐ வெளியிட்டது. 1978 : தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் உயிரிழந்தனர். 2000 : ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அங்கோலா, ருவாண்டாவில் விமானம் ஒன்று விழுந்ததில் 40 பேர் உயிரிழந்தனர். 2006 : அல்-ஜசீரா ஆங்கில செய்தி சேனல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2007 : வங்க தேசத்தில் வீசிய சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். 2012 : ஜி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2018 : கஜா புயல் தமிழகத்தை குறிப்பாக டெல்டா பகுதிகளில் பெறும் சேதத்தை ஏற்படுத்தியது. #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
597 views
5 months ago
*_வெற்றி வேண்டுமா? 'தள்ளிப்போடுதல்' என்ற வார்த்தையை விலக்குங்கள்!_* * 🌹🌹🌹இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கும் தகுதியும், திறமையும் இப்போது என்னிடம் இல்லை. என்னை நான் தயார்படுத்திக்கொள்ளாமல் உடனடியாக இந்த வேலையை ஆரம்பித்தால் நான் தோல்வியைத்தான் தழுவவேண்டியிருக்கும். முதலில் நான் என் செயல் திறமையை வளர்த்துக்கொள்ளப் போகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். அதற்குப் பிறகுதான் இந்தக் காரியத்தை ஆரம்பிக்கப்போகிறேன்' என்று காரியம் தொடங்குவதை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடாதீர்கள். சிலர் அளவுக்கு மீறி முன் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் சாதித்தது மிகவும் குறைவானதாகத்தான் இருக்கும். ஒருவன் சொந்தமாக வீடுகட்ட ஆசைப்படுகிறான். அவன் ஆசைப்படும் வீட்டைக்கட்டி முடிக்க அவனுக்கு ரூ. 3 இலட்சம் தேவை. அதைச் சம்பாதித்தவுடன்தான் நான் வீடு கட்ட ஆரம்பிக்கப் போகிறேன் என்று முடிவெடுப்பவர் களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்நாட்களிலேயே வீடே கட்டாதவர்களாகத்தான் உருவெடுப்பார்கள். அப்படி ஒருவன் 3 இலட்சம் சேமித்தாலும்கூட விலைவாசி உயர்வினால் அதே வீட்டைக்கட்ட அப்போது 6 இலட்சம் தேவைப்படும். அதற்கு மாறாக கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு வீட்டுமனை வாங்கியவர்கள் வீடு கட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்குச் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் நகை அடகு வைப்பது, சேமிப்பு நிதியிலிருந்து கடன் வாங்குவது போன்ற வழிகளில் கொஞ்சம் திரட்டி வீடுகட்டும் பணியை ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே திட்டமிட்டு ஒரு செயலை நினைத்துவிட்டால் தாமதிக்காமல் உடனே செய்யும் பழக்கம் உயர்வைத்தரும் என்பதில் ஐயமில்லை. ஒரு பெரிய காரியத்தை எப்படிச் சுலபமாக முடிப்பது என்பதைப் பற்றி ஹென்றி ஃபோர்ட் கீழ்க்கண்ட அறிவுரையை வழங்கியிருக்கிறார். நீங்கள் செய்ய விரும்பும் அந்த காரியத்தை நிறைய சிறிய சிறிய காரியங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின் ஒவ்வொரு நாளும் உங்களுடைய சௌகரியத்திற்குத் தகுந்த மாதிரி இரண்டு அல்லது மூன்று சிறிய காரியங்களைச் செய்து முடியுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் ஒருநாள் அந்தப் பெரிய காரியம் முடிந்துவிட்டிருப்பதைக் காணலாம். தள்ளிப்போடுதல்', 'தாமதம்' என்ற வார்த்தைகளை நமது அகராதியிலிருந்து கூடுமானவரை விலக்கவேண்டும். எதையும் உடனே செய்கின்ற பழக்கம் கொண்டவனையே அனைவரும் விரும்புவார்கள் அவனிடமே முக்கியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். வெற்றி பெற்றுச் சாதனை படைக்க எண்ணுகின்ற நீங்கள், எதையும் உடனே செய்யும் பழக்கத்தை உடனே ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 🌹🌹🌹 #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
610 views
5 months ago
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (01.11.2025) .................................................................*வயது என்பது...!* ....................................... வயது என்பது மனதைப் பொறுத்தது. நாம் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலே போதும். வயது முதிர்ந்தவர்கள் 23 - வயது இளைஞனைப் போல இன்னும் உற்சாகத்துடன் பல சாதனைகளை செய்து கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம்... நமக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. நாம் மனம் தளரும் வரை நம்முடைய கனவுகளை யாராலும் நம்மிடமிருந்து பறித்து விட முடியாது. கனவுகளை அடைவதற்கு தேவை முயற்சி மட்டுமே...! நாம் விரும்பும் வாழ்க்கையையும், வானத்தையும் வசப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தருவது மன உறுதி தான்... நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்து விட்டு மறைகிறோமா...? அல்லது, பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் செல்கிறோமா...? என்பதைப் பொறுத்து தான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? என்பதை முடிவு செய்கிறது... நம்மில் பெரும்பாலோர் வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லும் வழிப்போக்கர்களாக மட்டும் இருப்பதால், மக்கள் தொகையில் ஒரு புள்ளி விவரமாகவே இருந்து விட்டு மறைகிறோம்... சிலர் தான் தங்களுக்கு முன் இருக்கும் முட்புதர்களைக் களைந்து புதிய பாதைகளை அமைத்து, புதிய பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுகிறார்கள்... எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. உலகம் மாற மாற சாதனையாளர்களின் வயது வரம்பும் மாறிக் கொண்டே வருகிறது... ஒரு காலத்தில், 50 வயதில் சாதித்த நபர்கள் இருக்க, தற்போது 15 வயதிலேயே பல புதிய சாதனைகளை எளிதாக சிலர் செய்து விடுகிறார்கள்... மிக இளம் வயதிலேயே, ஒரு நிறுவனத்தின் தலைவராக, அல்லது உலகைச் சுற்றிய நபராக, அல்லது மென்பொருள் கண்டுபிடிப்பாளராக எனப் பல விதங்களில் சாதனையாளர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்... ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார், ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்... பில்கேட்ஸ் தனது 30 வயதிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார், ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்... ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை... ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மையாகிறார்... ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல துன்பங்களை அனுபவித்து 50 வது வயதில் செல்வந்தராகிறார்... எடுத்துக்காட்டாக., சர்ச்சில் தனது 82 வது வயதில் ''History of English Speaking People'' என்ற புத்தகத்தை எழுதினார்... பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் ''Pertouched Pepler'' என்ற நாவலை எழுதினார்... டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் ''I Cannot Be Silent'' என்றார்... வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதைத் தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்... *ஆம் நண்பர்களே...!* 🟡 வயதாகி விட்டதே இனி நம்மால் எதுவும் சாதிக்க முடியாதா எனக் கவலைப்படாதீர்கள். உங்களுக்கென இதுவரை எந்தக் குறிக்கோள்களும் இல்லாவிட்டால் பரவாயில்லை...! 🔴 இனி இருக்கும் நாட்களில் பயன்பாடுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தீர்மானியுங்கள். வயது எத்தனை ஆனாலும், மனதின் தன்னம்பிக்கையை உடைக்க முடியாது...!! 🟠 இனி வருகின்ற காலங்களில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம். ஒருமுறை தவறினாலும், தொடர்ந்து நாம் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாக ஒருநாள் வெற்றி பெறும்...!!! ⚫அதற்கான மன உறுதியோடு, நாம் வாழ்க்கைப் பயணத்தை தொடர்வோம். எந்த சாதனைகளுக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும், முதுமையும் உடலுக்குத் தானே தவிர, மனதுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
588 views
5 months ago
மருத்துவக் குணங்கள்..!!?? சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தைத் தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு. #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#