sinthanay sitharal.

saravanan
566 views
14 hours ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 18.04.2026.) .................................................................. *" வெறுப்புணர்ச்சி வேண்டாம்''..* ........................................................ உலகில் உங்கள் எதிர்ப்படும் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா?.. ஏன் முடியாது? . குழந்தைகளாக இருக்கும் போது அந்த நமக்கு உணர்வு இல்லையே.பெரிய ஆளாக வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர் விட்டு படர்ந்து விருட்சமாக இன்று வளர்ந்து இருக்கிறது.. வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள். உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள். குழந்தைகளாக இருக்கும் போது மனதில் துளிர் விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும் வளர்ப்பாலும் நம் மனதில் மெல்லக் குடி புகுகிறது. விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்டுகின்றோம். இந்த வெறுப்பு உணர்வால் நமக்குக் கிடைப்பது ஒன்றும் இல்லை. நண்பர்களின் வழி காட்டல், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பது தான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியது தான். உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்து விட்டால் அவ்வளவு தான். அனைவருமே உங்களுக்கு எதிரியாகத் தோன்றுவார்கள். சரி.இந்த வெறுப்புணர்ச்சியை ஒழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்..? உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் காட்ட வேண்டும். இனம், நிறம், சாதி, மதம், பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.- அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது. வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் குறுகிய மனப்பான்மையுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும். வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். *ஆம்.,நண்பர்களே..,* முதலில் நாம் நம்மை சோதித்துக் கொள்வோம்.. தவறான, முழு விவரம் தெரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் மீது வரும் எண்ணங்களே வெறுப்பு உணர்வுக்கு அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலை நிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்பு உணர்வு ஒழிந்து அன்பு மலரும்... (உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐
saravanan
456 views
1 days ago
#innraya SINTHANAY 𝐓𝐇𝐎𝐔𝐆𝐇𝐓 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐃𝐀𝐘 The struggles you face today 🌧️ Are shaping the strength you’ll carry tomorrow 💎 Embrace every challenge with courage 💪 Trust the journey and stay persistent ⏳ Victory belongs to those who never quit 🔥 Your mindset is the foundation of achievement 🧠 Nurture it with positivity and discipline 🌿 Let resilience guide your journey 🌊 Stay focused on your goals 🎯 And success will naturally follow 🔥 🍂𝐆𝐎𝐎𝐃 𝐓𝐈𝐌𝐄𝐒 🍂 🍀💥🍀💥🍀💥🍀💥🍀💥🍀💥
saravanan
1.5K views
8 days ago
#irav sinthanay. #இரவு #சிந்தனை 🌙 🌹 *10.04.2026* 🌹 🌼 *விதையின் மாற்றமே வேர்* 🌼 🌼 *நேற்றைய மாற்றமே இன்று* 🌼 🌼 *சேமிப்பின் மாற்றமே முதலீடு* 🌼 🌼 *அறியாமையின் மாற்றமே அறிவு* 🌼 🌼 *தோல்வியின் மாற்றமே வெற்றி* 🌼 🌼 *துன்பத்தின் மாற்றமே இன்பம்* 🌼 🌼 *இரவின் மாற்றமே பகல்* 🌼 🌼 *கோபத்தின் மாற்றமே அன்பு* 🌼 🌼 *குழந்தையின் மாற்றமே மனிதன்* 🌼 🌼 *நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை* 🌼 🌼 *கல்வியின் மாற்றமே நாட்டின் வளர்ச்சி* 🌼 🌼 *முடியாதென்பதன் மாற்றமே முடியும்* 🌼 🌼 *இப்படி பல மாற்றங்களுக்கு பிறகே நமது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்* 🌼 🌼 *மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே. வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது* 🌼 🌼 *எனவே தங்களின் நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் மாற்றங்களுக்குத் தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம் 👍* 🌼 🌼 *வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் 😀😀😀🙏 👍👍👍* 🌼 🤲 முருகா இன்றைய 10-04-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 11-04-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா ⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏
saravanan
620 views
14 days ago
#innraya SINTHANAY சிந்தனை".*.( 04.04.2026) .................................. *உடல்,மனம் மேம்படுத்த'..* ................................. ஆரோக்கியம்’ என்றால் என்ன? `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது… உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’என்கிறது. ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மன அளவில் மகிழ்ச்சி இல்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர். உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்; அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப்போகும். மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் உடலின் ஆரோக்கியத்திற்கு உந்து சக்தியாக அமையும். இதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வது என்பது ஒரு அற்புதக் கலை. அதை அனுபவித்தவர்கள் பகிர்ந்த சாட்சிகள் பல இணையத்தில் உள்ளது. உடல் நோய் வாய்ப்படும் பொழுது மனதை திடமாக இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவை விட மனம் நொந்து இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவு என்பது அதிகம் ஆகிறது. எனவே தான் மருத்துவர்கள் தைரியமாக இருங்கள் என்று நோயாளிகளிடம் கூறுவதைக் கண்டு இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் என்கிறதை அடைவதற்கு முதலாவது மன ஆரோக்கியம் முக்கியமானதாக இருக்கிறது..!! நம்மில் பலருக்கு தினமும் மனதையும், உடலையும் மேம்படுத்த நேரம் இல்லை என்பார்கள்.. ஆனால் தினமும் உடற்பயிற்சிக்கும் மற்றும் மனப் பயிற்சிக்கும் என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம். *ஆம்.,நண்பர்களே..,* ''நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை". இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது, உடல், மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம். (ஆக்கம். உடுமலை. சு.தண்டபாணி)💐💐💐💐💐
saravanan
456 views
15 days ago
#innraya SINTHANAY சிந்தனை. ''பாராட்டுங்கள்...!'' எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவது தான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும் பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய் விடுகிறது... *ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்... நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...! நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்... சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விட வேண்டும்... 😊😊😊
saravanan
556 views
15 days ago
#innraya SINTHANAY சிந்தனை".*.( 03.04.2026) ............................................. *"எது புத்திசாலித்தனம்''...?* ....................................... ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார். மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..? இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி விடும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும், அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படி பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை புத்திசாலிகள் என்று அழைக்க முடியாது. இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அந்த மாதிரி புத்திசாலித்தனம் நமக்குத் தேவை இல்லை. நாம் எப்போதும் பிரச்னைகளால் அறிவு மந்தமாகி விட்டது என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். எந்த சூழ்நிலையை நாம் எப்படி அணுகிறோம் என்பதில் தான் பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நாம் விரும்பவில்லை என்பதால், அந்தச் சூழ்நிலையைத் துரத்தி விட முடியாது. அப்போது நாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று செயல்பட வேண்டும். எனவே எந்த சூழ்நிலையையும் விருப்பு, வெறுப்பு இன்றி நோக்குங்கள். ஒவ்வொரு நிகழ்வையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கொஞ்சம் நம் புத்திசாலித்தனத்தோடு திறந்த மனதோடு ஆராயுங்கள். பிரச்னையா?, இல்லையா? என்பது நிகழ்வில் இல்லை. அதை நாம் எப்படி புத்திசாலித்தனத்தோடு நாம் ஏற்கின்றோம் என்பதில் தான் இருக்கிறது. *ஆம் நண்பர்களே.,* கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல் நோக்கி எப்படிப் போவது என்று பார்ப்பது தான் உண்மையான ''புத்திசாலித்தனம்..'' (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி ........)💐💐🙏🏻❤❤
saravanan
664 views
16 days ago
#innraya SINTHANAY சிந்தனை."*.( 02.04.2026) .............................. *''நிகழ்காலம் மட்டுமே...''* ................................ யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.. இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி,பசி, உறக்கம்,இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு. மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். . உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், ''உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. *ஆம்.,நண்பர்களே..,* மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர்,, ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம்..இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்.. சக மனிதர்களை மதிப்போம்.. மனிதனாக வாழ்வோம்.. ( ஆக்கம். உடுமலை சு. தண்டபாணி..)💐💐💐💐💐💐
saravanan
548 views
17 days ago
#innraya SINTHANAY சிந்தனை".*.( 01.04.2026) ................................................. *"அமைதியைத் தேடி.."* ........................................ நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை. தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஓய்வதில்லை. அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட, 'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே…அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி... சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!! ஆம்.,நண்பர்களே. தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''. (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி )💐💐💐💐💐
saravanan
493 views
18 days ago
#innraya SINTHANAY சிந்தனை".*.( 31.03.2026).. ...................................... *" பணம் தான் வாழ்க்கையா?’’..* ........................................ ‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லிக் கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மை தான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை. ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை வைத்து இருப்பது தான் தவறு.. பணத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம். ஒரு வணிகப் பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம் தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம். ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலை வந்து விட்டால், எல்லாரும் குழம்பிப் போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.” இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம், பசியை வாங்க முடியாது, மருந்தை வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம், தூக்கத்தை வாங்க முடியாது, புத்தகத்தை வாங்கலாம், புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம், அழகை வாங்க முடியாது, ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம், நண்பர்களை வாங்க முடியாது, வேலைக்காரர்களை வாங்கலாம், விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொல்லி உள்ளார்.. வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார். பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்” *ஆம்.,நண்பர்களே..*, பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களுடன் பழகாதீர்கள். பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்... (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐💐