sinthanay sitharal.

saravanan.
474 views
22 hours ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 08.05.2026).. ……………………………………………................... *தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்..''* ...................................................... ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது. எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை செய்து தெரிந்து கொள்கின்ற அறிவு நமக்கு அவசியம் இருக்க வேண்டும்.. யார் எதைச் சொன்னாலும் அது உண்மை தானா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறிவார்ந்த மனிதனாக வளர அதுவே வழி. நம் அய்யன் திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்லி உள்ளார். எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப் பொருள்மெய்ப் பொருள் காண்பதறிவு என்று.. அதாவது., எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்.. ‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் அவரே சொல்லி இருக்கிறார். வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சியது. சரி, அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார் அவர். அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டு விட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது. நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை. அவரும் அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார். அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று சொன்னது. பின்னர்,அருகில் இருந்த மரத்திற்குச் சென்று உட்கார்ந்த பின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே. உன் அறிவு கொண்டு நீ சிந்தனை செய்தால் தான், எதையும் நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை. இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, ''பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்து இருக்கலாம்.உன் பிடியிலிருந்து என்னை விட்டு விட்டாயே என்று சொன்னது. அதற்கு அந்த மனிதர், ''சரி இப்ப என்ன, விட்டு விட்டேன், வேதனை தான், பெரிய இழப்பு தான், பெரிய தவறு தான் என்று சிறிது நேரம் புலம்பி விட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார். அதற்கு அந்தப் பறவை,உன் கடந்த காலத் தவறுகளையும் நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்து போகாதே என்று, நான் உனக்கு முதலில் சொன்னது நினைவு இருக்கிறதா, ? நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது. அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே என்று சொன்னேன். இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்றதனத்தை என்ன சொல்வது? எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லி விட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை. *ஆம்.,நண்பர்களே !* தீர விசாரிக்காமல் எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டு இருக்கிறோம். எதையும் அறிவு கொண்டு சிந்திப்போம்.. தீர விசாரித்து எது உண்மை,எது பொய் என்று அறிந்து வாழ்க்கைப் பாதையிலே நடைபோட்டு முன்னேறுவோம்.. வெற்றி பெறுவோம். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி.....)💐💐💐🙏🏻🌹🌹🌹
saravanan
622 views
3 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 05.05.2026).. …………………………………………...... *"பகைமை மறப்போம்'* ..................................................... இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது. உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறந்து விடுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதி யைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சு ஆக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும் மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார். இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார். தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார். விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார். மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்து இருந்தனர். சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார். அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன். ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்து உள்ளது’ என்றார்.. பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்று தான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது. வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்... . *ஆம்.,நண்பர்களே..* “நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள் பகைமை மறப்போம் . அன்பை செலுத்துவோம்..(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐🙏🏻🌹🌹🌹*
saravanan
580 views
4 days ago
#innraya SINTHANAY சிந்தனை*.( 04.05.2026) .............................................................. *"உங்களின் சிறந்த நண்பர்’’* ……………………………………. உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்த அளவுக்கு அவசியமோ,அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்.. நமது பெற்றோர்களையும், சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது.ஆனால் நண்பனாக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். ஒருவரின் வாழ்க்கையையே திசை மாற்றும் வல்லமை கொண்டது நட்பு., நல்ல செயல்கள் மீது உங்கள் எண்ணங்களை ஊன்ற வைக்கும்படி ஓர் உண்மையான நண்பரால் செய்ய முடியும். துன்பத்தில் இருக்கும் போது அவர் உங்களை உற்சாகப்படுத்தி தூக்கி விடுவார். உங்கள் துக்கத்திலும் பங்கு கொள்வார். எல்லா துன்பங்களிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்கு பெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன். பணம் வரும் போது வருபவனும், பதவிக்காக உடன் இருப்பவனும் நண்பன் இல்லை. உண்மையான நட்பு உங்கள் வாழ்க்கையை உயர்த்தும், பொய் மற்றும் தவறான நட்பு உங்களை அழித்து விடும் இளைஞன் ஒருவன் கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தான்., அது மிகுந்த உயரத்தில் இருந்தது, அவன் மிகுந்த பயத்துடன் அந்தப் பாலத்தை கடக்க முடியாமல் தவித்தான்.. அந்த நேரத்தில் தான் அவனுடைய நண்பன் அந்த பாலத்தில் மறு முனையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இளைஞன் தன் நண்பனை தன்னிடம் வருமாறு கூவினான்.. ஆனால் அவன் வரவில்லை. பல முறை அந்த இளைஞன் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மிகுந்த கோபம் அடைந்த அந்த இளைஞன் பாலத்தை ஒரு வழியாக கடந்து மறுபுறம் வந்து சேர்ந்தான்..பல முறை அழைத்தும் உதவிக்கு வராத தன் நண்பனைக் கொட்டித் தீர்த்தான் ஆனால் அவன் அதற்கும் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். அப்போது அந்த இளைஞன் எதேச்சையாக தன் நண்பனின் கைகளைப் பார்த்தான். அந்த உடைந்த, பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை தன் நண்பன் கைகளால் பிடித்துக் கொண்டு இருந்ததால் கையில் இரத்தம் வழிந்தது...தன் நண்பனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான்.. நண்பனுக்குத் துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக் கூடியது தான் நட்பு. நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது .அதை இழந்து விடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை. *ஆம்.,நண்பர்களே..,* தீய நட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்! நல்ல நட்பை வாசிப்போம்!! நல்ல நட்பையே சுவாசிப்போம்!!! ( ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி..)💐🌺🌺🌹🙏🏻🌳🌹
saravanan
554 views
4 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷04.05.2026🌷 கடினமான பாதைகள் தான்.. அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது..!! 🔸🔹உலகியல் வாழ்வில் நாம் ஒரு சிறு துரும்பு கூட இல்லை என்பதை உணர்ந்து கொண்டோமா.... "இழந்ததை" மறந்து விடு..! "இருப்பதை" இழக்காமல் இருக்க..!! 🔹🔸நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை 🔸🔹நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். 🔸🔹இந்தக் காலம் சிக்கலான முடிச்சுகளை சுமந்தபடி மாறாத தேகத்தில் மாறுகின்ற காலம் 🔹🔸எதற்குமே சஞ்சலமின்றி சரணம் என்றே சுழன்று கொண்டிருக்கின்ற காலம்.... தன்னுள் அடக்கியபடி இயல்பாய் இயங்குகின்றது.... 🔸🔹வாழ்வின் அவசர ஓட்டத்தில் இதைப் புரிந்து கொள்ளத் தான் நமக்கு நேரம் இருப்பதில்லை... காலம் கடந்து புரிந்து கொள்கின்றோம்..... 🔹🔸எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, 🔸🔹உலகில் நானே அறிவாளி... என்னால் எல்லாம் முடியும்... என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கு என்று தேடிக் கொண்டிருக்கின்றோம்... உண்மை இது தான்..... 🔹🔸நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை .. நிம்மதியாய்.... மகிழ்ச்சியாய்... கொண்டாட்டமாய்.... குதூகலத்தோடு... அமைதியாய்... ஆனந்தத்தோடு.... துள்ளல் குறையாமல்... இயந்திரத்தனமாக வாழாமல்..... வாழ்வினை அனுபவித்து..... நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம்... 🔸🔹இந்தத் தெளிவும் புரிதலும் மட்டுமே வாழ்வை எளிதாய் இன்பத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.... இயல்பையும் காலத்தையும் நேரத்தையும் ஆழ்ந்த புரிதல் கொண்டே அவற்றை அனுபவிக்க இயலும் 😊😊😊
saravanan
641 views
5 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 03.05.2026.) .............................................................. *''இலட்சியம் இல்லா வாழ்க்கை''* ............................................................. "வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!" இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும், நமது லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது. லட்சியம் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ,ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல. உண்மையான இலட்சியம்,திட்டமிடுவது, அதை அடைய கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன. நாம் அடைய வேண்டிய எல்லையும், நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும். உங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்து போனது போனது தான், இனி திரும்ப வரப்போவது இல்லை. இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம். இலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள். இலட்சியம் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனை. இலட்சியத்தை முடிவு செய்வதைத் தள்ளிப் போடப் போட நீங்கள் அடைய வேண்டிய வெற்றிகளும் அனுபவிக்க வேண்டிய சுகங்களும் தள்ளிக் கொண்டே போகும். இலட்சியத்தை ஒரே நாளில் முடிவு செய்ய முடியாது தான். ஆனால் ஒரு சில நாட்களில், ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் முடிவு செய்து விடலாம். தனி மனித, சமுதாய இலட்சியங்கள் ஆசைகளே இலட்சியங்களாக வளர்கின்றன. மலர்கின்றன. தனிமனிதன் தனக்கு என்று தேடிக் கொள்பவைகளும் இலட்சியங்கள் தாம். ஆனால் இந்த நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், சாதி வேறுபாடுகள் களையப்பட வேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்று தன்னை மறந்து இந்த நாட்டுக்காகவும் உலகுக்காகவும் பாடுபடுகின்றவர்களின் ஆசைகளும் இலட்சியங்கள் தாம். தனிமனிதன் இலட்சியம் சிறப்பானவை என்றால் சமுதாய இலட்சியங்கள் மகத்தானவை என்று கூறலாம். ஒரு நாட்டிற்கு இந்த உலக சமுதாயத்திற்கு இந்த இரு வகையான இலட்சியங்களும் தேவை தான். உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள் வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ,டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாகக் கொள்ளாதீர்கள். அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். நீங்கள் இதை விடவும் பெரிய லட்சியத்தைக் கொண்டிருங்கள். ஏனைனில், பெரும்பாலும் கார், பங்களா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது. அளவு கடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும். *ஆம்.,நண்பர்களே..,* வாழ்வின் இலட்சியத்தை அடைய முயலுகிறவர்கள் வாழ்வே நீண்டதாகும். லட்சியத்தை அடைய செயல்கள் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு இலட்சியமாக இருத்தல் வேண்டும். (உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐💐💐💐💐
saravanan
471 views
6 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷02.05.2026🌷 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 மகிழ்ச்சி எங்கே? ஆனந்தம் எங்கே? என்று தேடுகின்ற நமக்கான பதிவு இது 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 ஆத்மார்த்த நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.... மனம் விட்டு பேசும் ஒரு நட்பு கிடைத்தால் மட்டுமே மனம் இளகும்.... மனம் இளகினால் வாழ்க்கைப் பிடிக்கும்... வாழ்க்கை பிடித்தாலே மகிழ்ச்சி தான்.... மகிழ்ச்சி என்றாலே பிறகு கொண்டாட்டம் தான்... கொண்டாட்டம் என்றாலே வாழ்வுதான்... என்ற உணர்வு நிலையில் வாழத் தொடங்கி விடுவோம்.... இந்த வாழ்வை நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.. பிறப்பெடுத்து இருக்கிறோம்... நாம் தான் அதைத் தொலைத்து விடுகிறோம்... அல்லது தேடிக் கொண்டிருக்கிறோம்.. 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 ஆசைப்பட்ட வாழ்க்கை என்பது......... அந்தந்த வயதுகளில் வாழ்ந்திருக்க வேண்டிய ஒன்று....... பால்யம் முதல் அந்திமக்காலம் வரை வாழவில்லை என்ற ஏக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது... காலங்கள் கடந்த பின்பு அவைகள் கிடைப்பதில்லை அவைகளை வாழ்வின் எச்சங்களாக... தேங்கி விடுகின்றன. வாழ்க்கை என்பது ஒரு வித்தியாசமான புரிந்து கொள்ள முடியாத புதுவகையான தேர்வு...!!! அதில் ஓவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்!!! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அடுத்தவர்களைப் பார்த்து காப்பியடித்து தங்கள் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள்..!!! 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 உண்மையும் யதார்த்தமும் வேறு.. மகிழ்ச்சி.... நமக்கு அருகாமையில் தான் இருக்கிறது... தொட்டு விடும் தொலைவில் தான் உள்ளது... மனதோடு மனதாக ஒன்றிப் போய் உள்ளது.... உணர்ந்து கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு... இயற்கையுடன் இளைப்பாறி செயற்கை உலகிலிருந்து கொஞ்சம் விடுப்பு எடுத்து , அழுத்தம் நிறைந்த மனதில் இலகுவாக அமைதி நிலவ தேடித் தேடி வரும் துயரங்களைத் தூரம் தள்ளி வைத்து சிறிது நேரம் நமக்காக நம் வாழ்வின் அர்த்தத்தை உணர்வதற்காக... நிம்மதி எங்கும் இல்லை என்ற புலம்பலை மறந்து விட்டு வாழ்வு இங்கு தான் இருக்கின்றது என்று இந்தக் கணத்தில் வாழ்விலே நிம்மதி ஆனந்தம் கொண்டாட்டம்.... 😊😊😊
saravanan
565 views
8 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 01.05.2026) .................................................... *"நியாயமான வழியில் சேர்த்த பணம் தான்..''* ............................................. ............. முறைகேட்டில் சேர்த்த பணத்தை ஈட்டுபவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது; அந்தப் பணத்தைப் பலர் அறிய நிம்மதியாக அனுபவிக்கவும் முடியாது. பணத்தை அனுபவிக்காமல், பிறருக்குக் கொடுக்காமல் இருப்பவனுடைய செல்வம், வீதியில் செல்பவர்களுக்குத் தான் சொத்தாகப் போய்ச் சேரும்’ என்பது பழமொழி. வாழ்க்கையில் பெரும் பணக்காரர்கள் ஆவது தான் பெரும் லட்சியம் என்று நினைக்கக் கூடாது. பெரும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்றால் பெரும்பாலும் நேர்மையைக் கை விட வேண்டி இருக்கும். மேலும் பெரும் பணக்காரர்கள் எல்லோரும் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதில்லை.. இதில் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.. நியாயமான வழிகளில் பணத்தைச் சேமிப்பவர்களே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உழைத்து ஈட்டுகின்ற பணம் தான் திருப்தியையும் பெருமையையும் தரும். அதில் நாம் வாங்குகிற பொருள்கள் ஒவ்வொன்றும் நம் வியர்வையின் நினைவுச் சின்னங்களாக நீடிக்கும். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததார் என குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. "காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?' "இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர். நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார். இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது. "பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன் என்றார்.. இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டு இருந்தார். என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டு விடுங்கள் என்றார் நீதிபதி.. முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.' "பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லி தான். அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. பேராசையின் தேவைகள் தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் பேராசைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''என்றார் நீதிபதி. இயக்குனர் பெரிதாக அழ ஆரம்பித்தார்.அவர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. *ஆம்.,நண்பர்களே..,* மக்களை ஏமாற்றிச் சம்பாதிப்பவர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டிப் பொருளைப் பறிப்பவர்கள்.... யாரானாலும் பறித்த சொத்துக்கள் என்றைக்கும் நிலைக்காது. கொண்டு போக முடியாத பொருளைச் சேர்ப்பதை விட, இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம். இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வரும் காலத்தில் வருபவர்களுக்கும் பயன்படவேண்டும் ( ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி.......)💐💐💐💐💐🌹🌹🌹
saravanan
1.5K views
9 days ago
#sinthanay kalam. களம். உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்! 'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவுபடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் எனக் குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும். பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது. 😊😊😊
saravanan
1.4K views
12 days ago
#sinthanay kalam. தயங்கி கொண்டே நிற்காதே… ஒரு முறை முயற்சி செய்து விடு… வெற்றியானால் அடுத்த கட்டத்திற்கு செல்… தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்… முயன்றால் எதுவும் முடியும்! 🌱வாழ்க்கையில் மிகப்பெரிய தடைகள் வெளியில் இல்லை. 👉 அவை நம் மனதில். “என்ன ஆகும்?” “தவறிவிட்டால்?” “நான் முடியாவிட்டால்?” இந்த தயக்கமே பல கனவுகளை பிறக்காமலே அழித்துவிடுகிறது. --- 🔥 1. தயக்கம் முன்னேற்றத்தின் எதிரி நீ நிற்கும் ஒவ்வொரு நொடியும் நேரம் நகர்கிறது. 👉 முயற்சி செய்யாமல் இருப்பது முன்னேற்றத்தை தள்ளிவைப்பது. --- 🔥 2. முயற்சி ஒரு கதவு நீ முயற்சி செய்தவுடன் ஒரு கதவு திறக்கும். 👉 அது வெற்றியின் கதவாக இருக்கலாம். அல்லது அனுபவத்தின் கதவாக இருக்கலாம். இரண்டும் லாபம் தான். --- 🔥 3. வெற்றி = அடுத்த நிலை நீ சாதித்தால் அங்கேயே நின்றுவிடாதே. 👉 அடுத்த இலக்கை நோக்கு. வளர்ச்சி தொடர வேண்டும். --- 🔥 4. தோல்வி = ஆசிரியர் தோல்வி வந்தால் அது முடிவு அல்ல. 👉 அது “இன்னும் என்ன கற்றுக்கொள்ளலாம்?” என்ற பாடம். --- 🔥 5. கற்றுக்கொள்ளும் மனம் வெல்லும் தோல்வியில் உடைந்தவன் அங்கேயே முடிவடைகிறான். 👉 தோல்வியில் கற்றவன் ஒருநாள் வெற்றி பெறுவான். --- 🔥 6. பயம் ஒரு மாயை நீ முயற்சி செய்யாமல் இருக்கும்போது பயம் பெரிதாக தெரியும். 👉 முயற்சி செய்தவுடன் அது சுருங்கும். --- 🔥 7. சிறிய முயற்சி பெரிய மாற்றம் ஒரு நாள். ஒரு செயல். ஒரு தைரியம். 👉 இதுவே பெரிய பயணத்தின் தொடக்கம். --- 🔥 8. செயல்தான் நம்பிக்கை நம்பிக்கை பேசுவதில் இல்லை. 👉 அது செயலில். நீ செயல் படும்போது உன் மனமும் வலிமை பெறும். --- 🔥 9. வெற்றியும் தோல்வியும் இரண்டும் முன்னேற்றம் ஒரு பாதை நேரடியாக உயரத்திற்கு. மற்றொரு பாதை வழி திருத்தத்துக்கு. 👉 இரண்டும் உன்னை முன்னேற்றும். --- 🔥 10. முயற்சி = சாத்தியம் முயற்சி இல்லாத கனவு கனவாகவே இருக்கும். 👉 முயற்சி சேர்ந்தால் அது இலக்காக மாறும். --- 🌟 முடிவுரை நீ இப்போது தயக்கத்தில் இருக்கிறாயா? நினைவில் கொள்: தயங்கி கொண்டே நிற்காதே… ஒரு முறை முயற்சி செய்து விடு… வெற்றியானால் அடுத்த கட்டத்திற்கு செல்… தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்… முயன்றால் எதுவும் முடியும்! இன்று ஒரு முயற்சி செய். அது உன் வாழ்க்கையை மாற்றும் முதல் அடி ஆகலாம். 🚀🔥✨ 🌹🌹🌹
saravanan
1.7K views
16 days ago
#sinthanay kalam. களம். சிறு சிறு விஷயங்களில் கூட சில கருத்து முரண்பாடுகள் எழும் போது, அதை எதிர்கொள்வது என்பது ரொம்பக் கடினமான விஷயம் தான். சில நேரங்களில் நாம் செய்யக் கூடிய செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக விமர்சனங்கள் எழும் போது, அதை எதிர்கொள்வது தான் இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, யுவதிகளுக்கும் தேவைப்படுகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும். இன்றைய இளைஞர்களிடம் ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், சிந்தனைகளும் இருக்கின்றது. அதை நோக்கிய உடல் உழைப்புகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், ஒன்றைத் தவிர. அது தான், ‘விமர்சனம்’. விமர்சனங்கள் என்பது மனிதனுக்கு எதிரானதா? நிச்சயமாக இல்லை. விமர்சனங்கள் என்பது முன்னேற்றத்தின் தூண்டுகோல். நம்மை ஒருவர் ஒரு விஷயத்தில் விமர்சனம் செய்யும் பொழுது, நம்மிடம் உள்ள குறைகளில் நின்று அணுக முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான், நம்மிடம் உள்ள பிரச்னைகள் தீரும். சொல்லப்படக் கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் நாம் தவறாகக் எண்ணக் கூடாது. ஆரோக்கியமான விமர்சனங்கள் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். அதனால், அது எந்த இடத்தில் கிடைத்தாலும் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். தரங்கெட்ட விமர்சனங்கள் நமக்கு இழிவாகும். அதற்கு எதிராக எல்லா நேரத்திலும் துணிந்து போராடுங்கள். அது, நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆரோக்கியமாகும். 😊😊😊