🌏உலக அரசியல்🌏

💕குறும்புக்காரன்🐬
1.5K views
2 months ago
AI indicator
Solution made for crude oil by the PM modiji Govt.: ஈரான் போர் உக்கிரமாக 13ம் நாள் நடக்கின்றது, டிரம்பர் வழக்கம் போல் சாமியாடி கொண்டிருக்கின்றார் உப சாமியாடியான இஸ்ரேலுக்கு ஆட இன்னொரு இடம் கிடைத்திருக்கின்றது அது லெபனான் ஆக அமெரிக்க சுடலை சாமி ஈரானை மயனாமாக்கி ஆடிகொண்டிருக்க, லெபனான் பக்கம் ஆட ஆரம்பித்திருக்கின்றது நேதன்யாகு சாமி, அது தன்னால் லெபனான் முதல் ஈரான் வரை எங்கும் ஆடும் வல்லமை உண்டு என அருள்வாக்கு வேறு சொல்லி கொண்டிருக்கின்றது ஈரானில் இனி உச்சகொடை நடக்கும் என டிரம்பர் சாமி அறிவித்த நிலையில் அதிரடி தாக்குதல் தொடர்கின்றது, அங்கே இப்போது இன்னொரு வகையான உத்தியினை கையில் எடுக்கின்றது அமெரிக்கா அதாவது ஹொர்ம்ஸ் நீரிணை வழியாக எதிரி நாட்டு கப்பலை அனுமதிக்கமாட்டோம் என ஈரான் மல்லுகட்டும்போது அப்படியானால் ஈரானுக்கு செல்லும் கப்பலை அனுமதிக்காமட்டோம் என கிளம்பியிருக்கும் அமெரிக்கா சீனாவில் இருந்து ஈரான்க்கு செல்லும் கப்பல்களை எதிர்கொண்டு காத்திருக்கின்றது , இந்த கப்பல்களில்தான் ஈரானுக்கான ஆயுதம் முதல் பல உதவிகள் இருக்கின்றது என்பதால் டிரம்பர் சாமி ஆட்டம் முடிந்ததாகவே சந்தோஷமடைகின்றது அதாவது ஈரான் பல விஷயங்களில் இறக்குமதியினை நம்பும் நாடு, இதனால் முடிந்தவரை உள்ளே செல்லும் பல விஷயங்களை தடுத்தாலே குறிப்பாக ஆயுத பொருள், வெடிபொருள் , ரசாயாண மூட்டைகளை தடுத்தாலே போதும் யுத்தத்தை அது தொடரமுடியாமல் சரியும் என்பது இப்போது டிரம்பர் கணக்கு ஒரு பக்கம் ஈரானுக்கு கிடைக்கும் ஆயுதங்களை தடுப்பது இன்னொரு பக்கம் உள்ளே இருக்கும் ஆயுத குடோனை நொறுக்குவது என டிரம்பர் சாமி இருமுனை ஆட்டம் ஆடிகொண்டிருக்கின்றார் இந்நிலையில் இந்தியா ஈரானுக்கு மனிதநேய அடிப்படையில் உணவு மற்றும் சில அத்தியவாசிய பொருட்களை அனுப்பும் பதிலுக்கு ஈரான் இந்திய எண்ணெய் கப்பல்களை தடுக்காது என ஒரு முடிவின் அடிப்படையில் இந்தியாவுக்கு சலுகைகளை ஈரான் அறிவித்துள்ளது, இதனால் இந்தியாவில் எழுந்த பெரும் எண்ணெய் தட்டுபாடு அச்சமும் புரளியும் முடிவுக்கு வந்திருக்கின்றது உலகின் பல நாடுகளில் இருந்து மாற்றுவழியினை இந்தியா தேடிகொண்டே ஈரானிடமும் பேசியது ஈரானின் சபாஹர் துறைமுகம் முதல் பல இடங்களில் இந்திய முதலீடு உண்டு ரஷ்யா ஈரான் வழியாக இந்தியாவுக்கு வரம் சரக்குபாதை ஒப்பந்தம் உண்டு என்பதால் ஈரானும் இறங்கி வருகின்றது இந்தியகடல் மற்றும் அரபிகடலில் ஈரானின் கப்பல்களை அமெரிக்கா நொறுக்கும்போது , அபாயமற்ற ஈரானிய கப்பல்கள் ஒதுங்க வலுவான இடம் இந்தியா என்பதால் ஈரானுக்கும் வேறு தெரிவு இல்லை இந்தியாவில் இனி எரிபொருள், எரிவாயு தட்டுபாடு இல்லை, உணவக கும்பல் இனி டீ காபி எல்லாம் வழமைபோல் விற்கலாம் அவர்களின் பொய்பிரச்சாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது பாரத பிரதமர் மோடியும் அவர் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியாவில் எரிபொருள் தட்டுபாடு எனும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லி ஆதாரங்களை காட்டி ஈரானின் அனுமதியும் இன்னும் பல நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எரிவாயு விவரத்தையும் காட்டியபின் எல்லாம் அமைதி வழக்கம்போல் அய்யா ஸ்டாலின் இங்கும் ஸ்டிக்கர் ஓட்ட வந்துவிட்டார், அவர் இதெல்லாம் விடவே மாட்டார், இப்போது எரிவாயு தட்டுபாடு இல்லை என அவரே ஏதோ ஈரானுக்கு சென்றது போல் பேச ஆரம்பித்துவிட்டார் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் உணவுக்கு எண்ணெய் என்பது சதாம் காலத்திலே இருந்தது, ஆனால் காங்கிரசார் அதிலும் ஊழல் செய்து சதாமிடம் இருந்து பெரிய தொகை அடித்து கொள்ளையிட்டனர், அதை சர்வதேச குழு கண்டுபிடித்தபோது சோனியா குடும்பம் நட்வர்சிங்கை பலிகடா ஆக்கிற்று, நட்வர்சிங் தன் புத்தகத்தில் அந்த பணம் எங்கே போனது என்பதை சொல்லியிருந்தார் இப்படி உணவுக்கு தவித்த மக்களிடமும் ஊழல் செய்த கட்சி காங்கிரஸ், இப்போது மோடியின் ஈரானிடம் உணவுக்கு எண்ணெய் எனும் திட்டத்தில் துளியும் ஊழல் இல்லை , மாறாக ராஜதந்திரம் மற்றும் மோடியின் செல்வாக்குபடி ,இந்த போரில் ஈரான் பின்னால் நிற்கும் புட்டீனின் தனி உத்தரவுபடி ஈரான் இந்திய கப்பல்களை அனுமதிக்கின்றது, இது முழுக்க மோடி அரசின் வெற்றி பொதுவாக இம்மாதிரி எண்ணெய் கப்பல் போக்குவரத்து சிக்கலானது, அந்த கடல்வழி இன்னும் பிரிட்டன் அமெரிக்க கட்டுபாட்டில் இருப்பதால் பல நாடுகள் குட்டி நாடுகளான லைபீரியா, நமீபியா, பனாமா என யார் பெயரிலோ கப்பலை பதிவு செய்து அவர்கள் கொடிபறக்க அனுப்புவார்கள், இது பல குழப்பங்களை கொண்டது அதுபற்றி பின்னர் பார்க்கலாம் ரஷ்ய கப்பல் பனாமாவில் பதிவுசெய்யபட்டு பனாமா கொடிபறக்க வரும், சில சீன கப்பல்கள் ஆப்ரிக்க கொடியோடு வரும் இந்தியாவுக்கான கப்பல்கள் இன்னொரு நாட்டின் கொடியோடு வரும் இது வேறுவிஷயம் இப்போது அவசரநிலை காரணமாக இந்திய கொடியோடு வரும்படி இந்திய கப்பலை ஈரான் கேட்டுகொள்வதால் இனி இந்திய கொடியோடே கப்பல்கள் செல்லும் "அந்த மேலை கடல் முழுதும் கப்பல்விடுவோம்" என பாரதி பாடியது இப்போது நடக்கின்றது கோமேனியினை அமெரிக்கா கொன்றபோதும் தாக்கும்போதும் இங்கு மோடியினை கரித்து கொட்டிய இஸ்லாமிய கும்பல்களை, திருமா கோஷ்டியினை இப்போது காணவே இல்லை, இனி இந்த பிரச்சினையினை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பதால் எங்கோ வானம்பார்த்தபடி அமர்ந்துவிட்டார்கள், மிகுந்த மன உளைச்சலில் சிக்கிவிட்டார்கள் ஈரான் இந்தியாவுக்கு கட்டுபட்டு எண்ணெய் அனுப்புவது அவர்களுக்கு மிகுந்த மான பிரச்சினையாகிவிட்டது , ஆத்திரம் பொங்க அமர்ந்திருக்கின்றார்கள் வேண்டுமானால் ஈரானில் இருந்து வரும் எண்ணெயில் சில பீப்பாய்களை அவர்களுக்கு கொடுக்கலாம் , மானஸ்தர்களான அவர்கள் செய்யவேண்டியதை செய்ய தீபெட்டியும் இலவசமாகவே கொடுக்கலாம். #மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #🌏உலக அரசியல்🌏. #கற்றுது அரசியல்
💕குறும்புக்காரன்🐬
1K views
2 months ago
AI indicator
#மதிய வணக்கம் #🌏உலக அரசியல்🌏 #கற்றுது அரசியல். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது. #ரெங்கா! #renga-vamba!
💕குறும்புக்காரன்🐬
672 views
2 months ago
#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! #🌏உலக அரசியல்🌏 ஈரான் போரில் எதிர்பார்த்த படி ஈரான் சில பதிலடிகளை கொடுக்கின்றது ஆனால் தமிழக ஊடகங்கள் சொல்வது போல் நிலைமை ஈரானுக்கு சாதகம் அல்ல தமிழக ஊடகங்கள் ஒரு காலமும் உண்மையினை சொல்லாது அல்லது சொல்ல தெரியாது தமிழக இஸ்லாமிய கும்பல்களை குஷிபடுத்த அவை வழக்கம்போல் பொய்களை அவிழ்த்துவிடலாம் அவர்கள் தொழில் அப்படி, பொய் ஒன்றை தவிர அவை ஏதும் சொல்வதே இல்லை அவ்வகையில் அவை. அய்யா கலைஞர் வழி தமிழக ஊடகங்கள் சொன்னபடி அமெரிக்க விமானம்தாங்கி கப்பல் தகர்க்கபடவில்லை அதன்மேல் எவுகனைகளை வீசியதாக ஈரான் சொன்னது ஆனால் கப்பலை அவை அடையவில்லை கப்பலுக்கு ஏதும் சேதமில்லை அது தொடர்ந்து தாக்குதலை செய்கின்றது அப்படியே இஸ்ரேலை அது தகர்க்கவில்லை ஈரானிய ஏவுகனைகள் இஸ்ரேலை தாக்கும் என்பது இஸ்ரேலே எதிர்பார்த்த ஒன்று, அதன்படியே ஒரிரு தாக்குதல் நடந்தது இஸ்ரேலின் மக்கள் சிலர் கொல்லபட்டார்கள் ஆனால் அடுத்தடுத்து இஸ்ரேல் சுதாரித்து கொண்டது அமெரிக்க தரப்பில் அதன் முகாமில் இருந்த 3 வீரர்கள் கொல்லபட்டதாகவும் ஐந்துபேர் காயம் அடைந்ததை அமெரிக்கா ஒப்புகொண்டுள்ளது, அவைபற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடபடும் ஈரான் தன் கோபத்தை காட்டுமிடம் அமீரகம், காரணம் ஈரானுக்கு அருகிருக்கும் நாடும் இஸ்ரேல் , அமெரிக்கா, இந்தியா என எல்லா நாடுகளுக்கு இடம் கொடுத்த நாடும் அதுதான் அமீரகத்தையும் இன்னும் அண்டை நாடுகளையும் தாக்க தாக்க அவர்கள் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் போர் நிற்கும் என்பது ஈரானின் கணக்கு அதன்படி 137 ஏவுகனைகள் சில நூறு ஆளில்லா விமானங்களை அமீரகம் நோக்கி ஏவியிருக்கின்றது ஈரான் ஆனால் அவை 99% தடுக்கபட்டது வெகு சில கனைகள் மட்டும் தாக்கின அவைகளும் பெரிய சேதாரமில்லை போரின் அடுத்த கட்டமாக ஈரானின் ஏவுகனை பிரிட்டனின் சில தளங்கள் அருகில் வீழ்ந்து அல்லது தாண்டி சென்றதை அடுத்து இதுவரை அமெரிக்காவுக்கு ஆதரவு இல்லை என சொன்ன பிரிட்டன் தன் ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தை அனுமதி கொடுத்துவிட்டது டீகோ கார்சியா முதலான தளங்களை இனி அமெரிக்கா பயன்படுத்தும் இது அமெரிக்காவுக்கு வலுவூட்டும் போரின் போக்கு ஈரானால் இனி வெல்லமுடியாது என்பதை காட்டிற்று ஆனால் இது வான் வழி தாக்குதல் மட்டுமே, இதனால் ஈரானுக்கு ராணுவபலவீனத்தை கொடுக்கலாம் ஆனால் ஆட்சிமாற்றம் எப்படி என்பது தெரியவில்லை 1920ம் ஆண்டு துருக்கி சுல்தானியம் வீழ்த்தபட்டதை போல இதுவரை முரட்டு அதிகாரத்தை கொண்டு எல்லா தரப்பையும் அச்சுறுத்திய பெரிய சக்தி நொறுக்கபட்டிருக்கின்றது ஆனால் அடுத்த ஆட்சி எப்படி யார் மூலம் என்பது குழப்பமாக உள்ளது இஸ்ரேலும் அமெரிக்காவும் வான்வழி தாக்குதலை செய்யலாம் ஆனால் நாட்டுக்குள் புகுந்து சதாமை தூக்கியதுபோல் இங்கு தூக்கமுடியுமா என்பது சந்தேகம் அந்த அளவுக்கு செல்லமாட்டார்கள் அதுவேறுவகை யுத்தமாகிவிடும் ஈரான் தரப்பில் கொல்லபட்ட கோமேனியின் மகன் அடுத்த கோமெனியாக திமுக பாணியில் அறிவிக்கபட்டது பின் அது தற்காலிகம் என்கின்றார்கள், காரணம் முல்லாக்கள் இடையே முட்டி கொண்டது இதனால் இன்னொரு தலைவர் தற்காலிகம் என்றார்கள் பின் அதுவுமில்லை என்றார்கள், தலைவர்களை அறிவித்தால் மறுநிமிடம் அவர்கள் கொல்லபடலாம் என்பது ஒருபக்கம் இருந்ந்தாலும் அடுத்த தலைவர் யார் என்பதில் அவர்களுக்குள்ளே குழப்பம் நடக்கின்றது இந்த முல்லா கோஷ்டி ஒருமாதிரியானது என்பதால் இனி அவர்களுக்குள்ளே அடித்து கொள்ளலாம் இல்லை பலவீனமான அரசை நோக்கி மக்கள் எழலாம், உரிய சூழலை உருவாக்கி பழைய மன்னரர் மகன் ரைசாவியினை அழைத்து வரலாம் என பலவிதமான கணிப்புகள் உள்ளன‌ முல்லாக்களை பொறுத்தவரை "அடித்துவிட்டாயா , பெரியவனை கொன்றுவிட்டாயா போதும், அப்படியே திரும்பு" எனும் மனநிலை உள்ளது, ஆனால் கொமேனியினை கொல்ல மட்டும் இவ்வளவு பெரிய போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்யாது இனி ஈரானில் என்ன ஆட்சி என்பதே எதிர்பார்ப்பு, ஆட்சி மாறுமா பழைய மன்னர் வருவாரா இல்லை சிரியாவில் லெபனானில் அடிக்கடி குண்டுவீசி விளையாடுவது போல இஸ்ரேல் அடிக்கடி ஈரானை தாக்கி கொண்டே காலம் நீளுமா என்பது இனிதான் தெரியும் 45 ஆண்டுகாலம் அராபியாவினை ஆட்டி பெரும் மிரட்டல் ஓய்ந்திருக்கின்றது , இனி அங்கு மாற்றங்கள் மெதுவாகவே வரும், அதுவரை போர் நீடிக்கலாம், அதை மிக சுருக்கமாக முடிக்கும் அவசியம் ஈரானுக்கே இருக்கின்றது அவர்கள் தங்கள் நிபந்தனையினை தளர்த்தி சரண் அடைவார்களா இல்லை அக்கம் பக்கம் நாடுகளை தொடர்ந்து மிரட்டி அமெரிக்காவினை நெருக்கடி கொடுப்பார்களா இல்லை அமைதியான ஆட்சிமாற்றத்துக்கு சம்மதிப்பார்களா என்பது இனி தெரியும் மூன்றில் ஒன்றை தவிர வேறு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை இந்திய தமிழக மக்களுக்கு நாம் சொல்வது ஒன்றுதான் இது போர், நிஜப்போர் மிக நுணுக்கமான தொழில்நுட்பமும் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பமும், மின்னல் வேக ஏவுகனைகளும், செயற்கைகோள்களும், கப்பல்களும்,பெரும் வெடிபொருளும், மின்காந்த அலைகளு , சைபர் சிஸ்டமும் நிறைந்தபோர் அது பற்றி தமிழக ஊடகங்களுக்கு ஏதும் தெரிந்ததாக தெரியவில்லை , அங்கு வெற்று அரசியல்வாதிகளை "தளபதி" 'குட்டி தளபதி" வெட்டி தளபதி "புரட்சி தளபதி" என சொல்வது வழமை , சில ரயில்களை எரித்துவிட்டு இது "இந்தி போர்" , "பிராமண போர்"என சொல்வதும் வழமை அந்த போர்களையும் தளபதிகளையும் அளவீடாக கொண்டு இப்படியான பெரும் போர்களை அவை தமிழக திராவிட போர்கள் பாணியில் அளவிடுவது முட்டாள்தனம் அல்லது வழக்கமான திராவிட பாணி தமிழக ஊடகங்களை நம்பி நீங்கள் அணில்குஞ்சுகளை போல் விசிலடித்தால் சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதர் மட்டுமல்ல உங்களுக்குள் கலந்திருக்கும் இந்திய, அமெரிக்க உளவாளிகள், குறிப்பாக மொசாத் உளவாளிகள் தலையில் அடித்து கொண்டு சிரிப்பார்கள் , தமிழன் மானத்தை இப்படி உலகம் சிரிக்கும்படி விட்டுவிடாதீர்கள் , தமிழனின் மானம் உங்கள் வீட்டு டிவியில் தமிழ் ஊடகங்களில் இருக்கின்றது அதை முதலில் மூடுங்கள் அப்படியானால் தமிழன் மானம் கொஞ்சமேனும் காக்கபடும். ஆதாரம் & Source : பிரம்ம ரிஷியார் வலைத்தளப் பதிவுகளில் இருந்து,