ராகவேந்திர சுவாமிகளின் அற்புதங்கள்

⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
510 views
5 hours ago
தேடலின் ரகசியம் ​அவன் பெயர் ஆனந்த். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். மிகச்சிறந்த உழைப்பாளி, நேர்மையானவன். ஆனால், கடந்த சில மாதங்களாக அவனுக்குக் கடுமையான சோதனைக் காலம். அலுவலகத்தில் அவனுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை; மாறாக, சக ஊழியர்களின் சதியால் தேவையற்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி, மன உளைச்சலின் உச்சத்தில் இருந்தான். ​ஒரு வியாழக்கிழமை மாலை, மனம் தாங்க முடியாமல் சென்னை திரிப்ளிகேனில் (திருவல்லிக்கேணி) உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்திற்குச் சென்றான். குருராயரின் பிருந்தாவனத்தின் முன் அமர்ந்ததும், அவனையறியாமல் கண்கள் கசிந்தன. ​"ராயரே... எல்லாரும் என்னை ஒதுக்குகிறார்கள். என் திறமைக்கு மதிப்பே இல்லை. யாருக்கும் என்னை தேவையில்லை போலிருக்கிறது. நான் ஏன் இன்னும் வாழ வேண்டும்?" என்று மனதுக்குள் கதறினான். ​அப்போது அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு முதியவர், ஆனந்தின் தோளைத் தொட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை (Pamphlet) அவனிடம் கொடுத்தார். அதில் ராயரின் படம் இருந்தது, கீழே ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது: ​"தேவைப்படும் போது தேடப்படுவாய்... அதுவரை அமைதியாக இரு!" ​அந்த வரிகள் ஆனந்தின் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. ராயரே நேரில் வந்து தன்னிடம் சொல்வது போல் உணர்ந்தான். அன்றிலிருந்து யாரிடமும் தன் திறமையை நிரூபிக்க அவன் போராடவில்லை; தன் கடமையை மட்டும் ராயர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அமைதியாகச் செய்தான். ​நடந்த அற்புதம் ​சில வாரங்கள் கடந்தன. ஆனந்த் வேலை செய்யும் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய வெளிநாட்டுத் திட்டத்தின் (Project) பொறுப்பு வந்தது. அந்தத் திட்டத்தின் தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) மற்றும் கணக்கு விபரங்கள் மிகச் சிக்கலானவை. நிறுவனத்தின் முக்கிய மேலாளர்கள் அனைவரும் கைகொடுத்துவிட்டனர். சிறிய தவறு நடந்தாலும் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்ற நிலை. ​திடீரென நிறுவனத்தின் முதலாளி (CEO) அவசரக் கூட்டம் கூட்டினார். "நம்மிடம் இந்தச் சிக்கலைத் தீர்க்கக்கூடிய திறமையான ஆள் யாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டார். ​அப்போது ஒரு மூத்த அதிகாரி, "சார், கடந்த இரண்டு வருடப் பதிவுகளைப் பார்த்தேன். மிகக் கடினமான நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து, துல்லியமாக வேலை முடித்துக் கொடுத்த ஒரு இளைஞன் இருக்கிறான். மிகக் கடினமான நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து, துல்லியமாக வேலை முடித்துக் கொடுத்த ஒரு இளைஞன் இருக்கிறான். அவன் பெயர் ஆனந்த்" என்றார். ​அடுத்த ஐந்தாவது நிமிடம், இதுவரை யாரும் கண்டு கொள்ளாத ஆனந்த், முதலாளியின் அறைக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டான். ​முதலாளி அவனிடம், "ஆனந்த், இந்த நிறுவனத்தின் கௌரவம் இப்போது உன் கையில். இதை உன்னால் சரி செய்ய முடியுமா?" என்று பதற்றத்துடன் கேட்டார். ​ஆனந்த் தன் பாக்கெட்டில் இருந்த ராயரின் படத்தை மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "நிச்சயம் செய்கிறேன் சார், குருராயர் துணை இருக்கிறார்" என்றான். ​அடுத்த 48 மணி நேரம் தூக்கமில்லாமல், தன் முழுத் திறமையையும் பயன்படுத்தி அந்தச் சிக்கலான திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். நிறுவனத்திற்குப் பெரும் லாபமும், புகழும் கிடைத்தது. ​ராயரின் அருள் ​மறுநாள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் ஆனந்துக்கு "சிறந்த ஊழியர்" விருதும், கணிசமான ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வும் வழங்கப்பட்டது. நேற்றுவரை அவனை திக்காதவர்கள் எல்லாம் இன்று அவனைத் தேடி வந்து வாழ்த்துக் கூறினர். அவனைக் கீழே தள்ள நினைத்தவர்கள், அவனுடைய உதவிக்காகக் காத்து நின்றனர். ​அன்று மாலை, ஆனந்த் மீண்டும் திரிப்ளிகேன் ராயர் மடத்திற்கு ஓடினான். பிருந்தாவனத்தின் முன் நின்று ஆனந்தக் கண்ணீர் வடித்தான். ​அப்போது அவன் மனதில் அந்த வரிகள் மீண்டும் எதிரொலித்தன: "உன் திறமையும், நற்குணமும் உனக்கானவை. உலகம் உன்னை எப்போதும் கொண்டாடாது. ஆனால், தேவைப்படும் போது நீ தேடப்படுவாய். அதுவரை பொறுமையாக, ராயரின் பாதங்களை நம்பி உன் கடமையைச் செய்." ​திரிப்ளிகேன் ராயரின் குருவருள், தகுந்த நேரத்தில் அவனுக்குரிய அங்கீகாரத்தைத் தேடித் தந்து, அவன் வாழ்வை ஒளிரச் செய்தது! ​ஸ்ரீ மன் மூலராமோ விஜயதே... #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
2.3K views
22 days ago
🌹ஸ்ரீ ராகவேந்திரரின் கருணை 🚩ஒரு தாயின் அழுகையும் குருவின் கருணையும் முன்னொரு காலத்தில், ஒரு ஏழைத் தாய் தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தச் சிறுவன் ராகவேந்திர சுவாமிகளி ன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். ஒருமுறை அவர்கள் இருவரும் ராகவேந்திரரை தரிசிக்க மந்திராலயம் சென்றிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மந்திராலயத்தின் துங்கபத்திரை ஆற்றில் நீராடும்போது, எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். தாயின் கதறல் தன் மகனின் உடலை மடியில் கிடத்திக் கொண்டு அந்தத் தாய் கதறி அழுதாள். "குருவே! உங்களை நம்பி வந்தேனே, என் ஒரே விளக்கையும் அணைத்து விட்டீர்களே? நீங்கள் உயிருடன் இருக்கும் தெய்வம் என்று நம்பினேனே, இதுதான் உங்கள் கருணையா?" என்று ஊரே அதிரும் படி கதறினாள். மற்ற பக்தர்கள் அவளைத் தேற்ற முயன்றும் அவளது அழுகை நிற்கவில்லை. 🚩குருவின் அதிசயம் அப்போது, பிருந்தாவனத்திற்குள் தியானத்தில் இருந்த சுவாமிகள், அந்தத் தாயின் அழுகுரல் கேட்டு மனம் இரங்கினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் சீடர்கள் மூலம் ஒரு செய்தி வந்தது. சுவாமிகள் அந்தச் சிறுவனின் உடலில் புனிதமான மந்திராட்சதையை (மந்திரம் ஓதப்பட்ட அரிசி) தூவச் சொன்னார். பிருந்தாவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை அவன் முகத்தில் தெளிக்கச் சொன்னார். நடந்த அதிசயம் என்னவென்றால், அந்த த் தாய் ராகவேந்திரரை முழுமையாக நம்பி கதறிய அந்த நொடியில், இறந்து கிடந்த சிறுவன் மெல்லக் கண் விழித்தான். தூக்கத்தில் இருந்து எழுவது போல அவன் எழுந்து நின்றான் 🚩இந்தக் கதை உணர்த்தும் பாடம் இந்தச் சம்பவம் அந்தத் தாய்க்கு மட்டுமல் ல, உலகிற்கே ஒரு பெரிய உண்மையைப் புகட்டியது நிபந்தனையற்ற சரணாகதி: நாம் கடவுளிடம் "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்று கேட்பதை விட "நீயே கதி" என்று சரணடையும்போது அங்கு அதிசயம் நிகழ்கிறது. 🚩தாய்மைக்கு மதிப்பு. ஒரு தாயின் கண்ணீருக்கு இறைவனே கட்டுப்படுவார் என்பதை ராகவேந்திரர் நிரூபித்தார். 🚩மரணத்தையும் வெல்லும் கருணை: குருவின் அருள் இருந்தால் விதியையும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு சான்று அந்தத் தாய் தன் மகனைத் தூக்கிக்கொண்டு பிருந்தாவனத்தை நோக்கி ஓடினாள் அவளது கண்கள் இப்போது துக்கத்தால் அல்ல ஆனந்தத்தால் நிறைந்திருந்தன. 🌹குருவே சரணம்... 🌹குரு ராகவேந்திரர் திருவடி சரணம்... 🌹23.04.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
3.7K views
23 days ago
#லட்சுமி_நரசிம்மர்_கராவலம்ப_ஸ்தோத்ரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கரவலம்ப ஸ்தோத்திரம் குரு ஆதி சங்கராச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்த லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் ஒருவர் பெறும் முக்கிய பலன் லக்ஷ்மி நரசிம்மரின் கரங்கள் உங்களுக்கு நீண்டகால‌ ஆதரவை கொடுக்கும். வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில், இறைவனின் கருணையால் அந்தத் தடைகள் அனைத்தும் நீங்கும் வகையில், பாராயணம் செய்ய வேண்டிய மகத்தான பாடல்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கரவலம்ப ஸ்தோத்திரம் தினமும் ஒரு வீட்டில் கேட்கும் போது, அந்த நபரின் கோபத்தை குறைத்து அமைதியான இல்லமாக மாற்றுகிறது. மேலும், இந்த தெய்வீகப் பாடலை மிகுந்த பக்தியுடன் உச்சரிப்பதன் மூலம், பகவான் லக்ஷ்மி நரசிம்மரின் பாத தாமரைகளை அடையலாம். ஶ்ரீமத் பயோனிதினிகேதன சக்ரபாணே போகீம்த்ரபோகமணிராஜித புண்யமூர்தே | யோகீஷா ஸாஸ்வத‌ ஸ‌ரண்ய பவாப்திபோத லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 || ப்ரஹ்மேம்த்ரருத்ரமருதர்ககிரீடகோடி ஸம்கட்டிதாம்க்ரிகமலாமலகாம்திகாம்த | லக்ஷ்மீலஸத்குசஸரோருஹராஜஹம்ஸ லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 || ஸம்ஸாரதாவதஹனாகரபீகரோரு-ஜ்வாலாவளீபிரதிதக்ததனூருஹஸ்ய | த்வத்பாதபத்மஸரஸீருஹமாகதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 || ஸம்ஸாரஜாலபதிததஸ்ய ஜகன்னிவாஸ ஸர்வேம்த்ரியார்த படிஶாக்ர ஜஷோபமஸ்ய | ப்ரோத்கம்பித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 || ஸம்ஸாரகூமபதிகோரமகாதமூலம் ஸம்ப்ராப்ய துஃகஶதஸர்பஸமாகுலஸ்ய | தீனஸ்ய தேவ க்றுபயா பதமாகதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 5 || ஸம்ஸாரபீகரகரீம்த்ரகராபிகாத னிஷ்பீட்யமானவபுஷஃ ஸகலார்தினாஶ | ப்ராணப்ரயாணபவபீதிஸமாகுலஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 6 || ஸம்ஸாரஸர்பவிஷதிக்தமஹோக்ரதீவ்ர தம்ஷ்ட்ராக்ரகோடிபரிதஷ்டவினஷ்டமூர்தேஃ | னாகாரிவாஹன ஸுதாப்தினிவாஸ ஶௌரே லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 7 || ஸம்ஸாரவ்றுக்ஷபீஜமனம்தகர்ம-ஶாகாயுதம் கரணபத்ரமனம்கபுஷ்பம் | ஆருஹ்ய துஃகபலிதஃ சகிதஃ தயாளோ லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 8 || ஸம்ஸாரஸாகரவிஶாலகராளகாள னக்ரக்ரஹக்ரஸிதனிக்ரஹவிக்ரஹஸ்ய | வ்யக்ரஸ்ய ராகனிசயோர்மினிபீடிதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 9 || ஸம்ஸாரஸாகரனிமஜ்ஜனமுஹ்யமானம் தீனம் விலோகய விபோ கருணானிதே மாம் | ப்ரஹ்லாதகேதபரிஹாரபராவதார லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 10 || ஸம்ஸாரகோரகஹனே சரதோ முராரே மாரோக்ரபீகரம்றுகப்ரசுரார்திதஸ்ய | ஆர்தஸ்ய மத்ஸரனிதாகஸுதுஃகிதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 11 || பத்த்வா கலே யமபடா பஹு தர்ஜயம்த கர்ஷம்தி யத்ர பவபாஶஶதைர்யுதம் மாம் | ஏகாகினம் பரவஶம் சகிதம் தயாளோ லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 12 || லக்ஷ்மீபதே கமலனாப ஸுரேஶ விஷ்ணோ யஜ்ஞேஶ யஜ்ஞ மதுஸூதன விஶ்வரூப | ப்ரஹ்மண்ய கேஶவ ஜனார்தன வாஸுதேவ லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 13 || ஏகேன சக்ரமபரேண கரேண ஸ‌ம்க-மன்யேன ஸிம்துதனயாமவலம்ப்ய திஷ்டன் | வாமேதரேண வரதாபயபத்மசிஹ்னம் லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 14 || அம்தஸ்ய மே ஹ்றுதவிவேகமஹாதனஸ்ய சோரைர்மஹாபலிபிரிம்த்ரியனாமதேயைஃ | மோஹாம்தகாரகுஹரே வினிபாதிதஸ்ய லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 15 || ப்ரஹ்லாதனாரதபராஶரபும்டரீக-வ்யாஸாதிபாகவதபும்கவஹ்றுன்னிவாஸ | பக்தானுரக்தபரிபாலனபாரிஜாத லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 16 || லக்ஷ்மீன்றுஸிம்ஹசரணாப்ஜமதுவ்ரதேன ஸ்தோத்ரம் க்றுதம் ஶுபகரம் புவி ஶம்கரேண | யே தத்படம்தி மனுஜா ஹரிபக்தியுக்தா-ஸ்தே யாம்தி தத்பதஸரோஜமகம்டரூபம் || 17 || #Thanks : Copyright 2023 - SriBhaktiLife.com - All rights reserved #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.1K views
23 days ago
🌹ஸ்ரீ ராகவேந்திரரின் கருணை 🚩ஒரு தாயின் அழுகையும் குருவின் கருணையும் முன்னொரு காலத்தில், ஒரு ஏழைத் தாய் தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தச் சிறுவன் ராகவேந்திர சுவாமிகளி ன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். ஒருமுறை அவர்கள் இருவரும் ராகவேந்திரரை தரிசிக்க மந்திராலயம் சென்றிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மந்திராலயத்தின் துங்கபத்திரை ஆற்றில் நீராடும்போது, எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். தாயின் கதறல் தன் மகனின் உடலை மடியில் கிடத்திக் கொண்டு அந்தத் தாய் கதறி அழுதாள். "குருவே! உங்களை நம்பி வந்தேனே, என் ஒரே விளக்கையும் அணைத்து விட்டீர்களே? நீங்கள் உயிருடன் இருக்கும் தெய்வம் என்று நம்பினேனே, இதுதான் உங்கள் கருணையா?" என்று ஊரே அதிரும் படி கதறினாள். மற்ற பக்தர்கள் அவளைத் தேற்ற முயன்றும் அவளது அழுகை நிற்கவில்லை. 🚩குருவின் அதிசயம் அப்போது, பிருந்தாவனத்திற்குள் தியானத்தில் இருந்த சுவாமிகள், அந்தத் தாயின் அழுகுரல் கேட்டு மனம் இரங்கினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் சீடர்கள் மூலம் ஒரு செய்தி வந்தது. சுவாமிகள் அந்தச் சிறுவனின் உடலில் புனிதமான மந்திராட்சதையை (மந்திரம் ஓதப்பட்ட அரிசி) தூவச் சொன்னார். பிருந்தாவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை அவன் முகத்தில் தெளிக்கச் சொன்னார். நடந்த அதிசயம் என்னவென்றால், அந்த த் தாய் ராகவேந்திரரை முழுமையாக நம்பி கதறிய அந்த நொடியில், இறந்து கிடந்த சிறுவன் மெல்லக் கண் விழித்தான். தூக்கத்தில் இருந்து எழுவது போல அவன் எழுந்து நின்றான் 🚩இந்தக் கதை உணர்த்தும் பாடம் இந்தச் சம்பவம் அந்தத் தாய்க்கு மட்டுமல் ல, உலகிற்கே ஒரு பெரிய உண்மையைப் புகட்டியது நிபந்தனையற்ற சரணாகதி: நாம் கடவுளிடம் "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்று கேட்பதை விட "நீயே கதி" என்று சரணடையும்போது அங்கு அதிசயம் நிகழ்கிறது. 🚩தாய்மைக்கு மதிப்பு. ஒரு தாயின் கண்ணீருக்கு இறைவனே கட்டுப்படுவார் என்பதை ராகவேந்திரர் நிரூபித்தார். 🚩மரணத்தையும் வெல்லும் கருணை: குருவின் அருள் இருந்தால் விதியையும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு சான்று அந்தத் தாய் தன் மகனைத் தூக்கிக்கொண்டு பிருந்தாவனத்தை நோக்கி ஓடினாள் அவளது கண்கள் இப்போது துக்கத்தால் அல்ல ஆனந்தத்தால் நிறைந்திருந்தன. 🌹குருவே சரணம்... 🌹குரு ராகவேந்திரர் திருவடி சரணம்... 🌹23.04.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✨கடவுள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.4K views
1 months ago
குரு ராகவேந்திரர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரின் எல்லையற்ற கருணையும், "நம்பினோர் கெடுவதில்லை" என்ற வாக்கும் தான். அவரின் அருளால் ஒரு ஏழை பக்தனின் வாழ்வில் நடந்த நிகழ்வு ... மகானின் அருளால். ராகவேந்திரரின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவர். அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் சூழல் இருந்தாலும், ராகவேந்திரர் மீது அவர் வைத்திருந்த பக்தி மட்டும் குறையவே இல்லை. ஒருமுறை ராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு அந்த பக்தர் சென்றார். அங்கிருந்த மற்ற செல்வந்தர்கள் குருவுக்கு தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளை காணிக்கையாக அளித்து வந்தனர். இதைப் பார்த்த அந்த ஏழை பக்தர், "என்னிடம் குருவுக்குத் தர எதுவுமே இல்லையே" என்று வருந்தினார். அவர் கையில் இருந்தது வெறும் ஒரு மண் கிண்ணம் மட்டுமே. அதில் கொஞ்சம் காய்ந்த தானியங்கள் இருந்தன. மிகவும் தயக்கத்துடனும், சங்கடத்துடனும் கூட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நின்றார். மந்திராலய மகானின் லீலை: எல்லாவற்றையும் அறிந்த குரு ராகவேந்திரர், செல்வந்தர்களின் விலையுயர்ந்த காணிக்கைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்து சத்தமாகக் கேட்டார்: "எனது அன்பிற்குரிய அந்த பக்தன் எங்கே? அவனிடம் எனக்காக ஒரு விசேஷமான பரிசு இருக்கிறதே!" அனைவரும் வியப்புடன் பார்க்க, ராகவேந்திரர் அந்த ஏழை பக்தரை அருகே அழைத்தார். பயந்தபடியே வந்த அந்த பக்தர், தன் கையில் இருந்த மண் கிண்ணத்தை நடுங்கும் கரங்களுடன் குருவிடம் நீட்டினார். அதிசயம்: ராகவேந்திரர் அந்த மண் கிண்ணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அவர் அதைத் தொட்ட அடுத்த நொடி, அந்த சாதாரண மண் கிண்ணம் தங்கக் கிண்ணமாக மாறியது! அதிலிருந்த தானியங்கள் நவரத்தினங்களாக ஜொலித்தன. சுற்றியிருந்தவர்கள் மலைத்துப்போய் நின்றனர். ராகவேந்திரர் புன்னகையுடன் சொன்னார்: "பக்தியில் உயர்வு தாழ்வு இல்லை. நீங்கள் கொடுக்கும் பொருளின் மதிப்பை விட, அதை எந்த உணர்வோடு கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உன்னிடம் இருந்த அந்தச் சிறிய பொருளை நீ முழுமனதோடு எனக்கு அளித்தாய், அதுவே எனக்குப் பெரிய காணிக்கை." இந்தக் கதையின் நீதி நமது பக்தி உண்மையாக இருந்தால், நாம் அர்ப்பணிக்கும் மிகச்சிறிய பொருளும் மகானின் பார்வையில் பெரும் மதிப்பை பெறும். ஸ்ரீமன் மூலராமோ விஜயதே... #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.1K views
1 months ago
உன் பின்னால் நான் "கவலைப்படாதே... உன் கவலைகளை நான் அறிவேன்! எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை, உன் கஷ்டங்கள் உட்பட! உன்னை யார் கைவிட்டாலும், நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன். விரக்தியில் இருக்கும் நீ, வைராக்கியம் கொள்... 'உன் குருநாதர் நான் இருக்கிறேன்' என்று! உன்னை விட இங்கே யாரும் பலசாலி கிடையாது; நீ பாக்கியசாலி! என் மூல ராமர் அருளால், உன் வாழ்வில் இனி வசந்தம் வீசப் போகிறது. இந்த பூமியில் நீ பிறந்த பலன்களை, இன்று முதல் அனுபவிக்கப் போகிறாய்! தோஷம் எதுவும் இல்லை - இனி சந்தோஷம் தான் உனக்கு! நீ செய்ய வேண்டியது... நீ செய்த பாவங்களை என்னிடம் கொடுத்து விடு... நான் தரும் புண்ணியங்களைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்! என்றும் உன் பின்னால் நான்... ஸ்ரீமன் மூலராமோ விஜயதே.. #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏 ராகவேந்திர ஸ்வாமி போற்றி போற்றி 🙏