உற்சாக பானம்

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
560 views
10 days ago
எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ (From Lankasri Technology) +++++++++++++++++++++ உடல் எடை என்பது இப்போது உள்ள காலகட்டங்களில் அனைவரிடமும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. சிலர் எனது உடல் எடையை குறைக்க முடியவில்லையே என புலம்புவதும் உண்டு. அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பலருக்கும் பயனளிக்காமல் போய் இருக்கலாம். உடல் எடையை குறைக்கும் பொருட்களை உங்களது சமையல் அறையில் வைத்துக் கொண்டு ஏன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆம் தினசரி நாம் உணவில் பயன்படுத்தும் பட்டை, இஞ்சி தான் அந்த பொருள்கள். தினசரி காலையில் சூடாக ஒரு பட்டை இஞ்சி குடித்தால் போதுமானது. உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிடும். எடையை குறைக்க உதவும் அந்த டீயை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் பட்டை - 2 இன்ச் இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது) ப்ளாக் டீ இலைகள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை - 2 துண்டுகள் புதினா - 5 முதல் 6 இலைகள தேன் - தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து பரிமாறினால், பட்டை இஞ்சி டீ தயாராகி விடும். தினசரி இந்த டீயை குடித்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்வும் பெறும்.✍🏼🌹 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
575 views
13 days ago
எடை குறைக்கலாமா*? இலவங்கப்பட்டை தேநீர் 👇👇 ஒரு கப் கொதிக்கும் நீரில் இலவங்கப்பட்டை சேர்க்கவும். 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். பிறகு இலவங்கப்பட்டையை அகற்றி விடலாம், இலவங்கப்பட்டை சாறு அதில் இறங்கி இருக்கும். இப்போது அந்த நீரில் விரும்பினால் தேநீர்ப்பையைச் சேர்த்து பருகி மகிழுங்கள்! ❤️இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட இலவங்கப்பட்டை உதவுகிறது ❤️நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ❤️புற்றுநோய் வராமல் தடுக்கிறது ❤️நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்து ❤️கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது ❤️எடை குறைப்புக்கு உதவுகிறதுமாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது ❤️உங்கள் சருமத்திற்கு நல்லது. #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
571 views
18 days ago
#𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚•••• *🔹🔸இந்தியாவுக்குள் சீன முதலீடுகள் வர ஒன்றிய அரசு பச்சைக்கொடி!* *பச்சைக்கொடி* *📍. கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன முதலீடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.* *விதிகளை தளர்த்தி, மின்னணு மற்றும் உற்பத்தித் துறையில் சீன முதலீடுகள் எளிதாக இந்தியாவுக்குள் வர வழிவகை செய்ய முடிவு.* #ChineseInvestment | #IndiaChinaRelation #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
655 views
25 days ago
தெளிவாய் வரும்..... தேநீரை போல வார்த்தையும் வந்தால் போல நலம். இனிய ~மாலை~ வேலையில் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
3.4K views
28 days ago
#பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் நேர சிந்தனை* (04.03.26) *உயர்வே லட்சியம்.*    அநேகம் பேர் சொல்வது ண்டு, நான் போன பிறவியில் பண்ணின பாவத்திற்கு இந்த பிறவியில் தண்டனை அனுபவிக்கிறேன் என்று. இந்த பிறவியில் நான் யாருக்காவது நல்லது செய்தால் அடுத்த பிறவியில் எனக்கு நல்லது நடக்கும்.   அப்படி நாம் செய்யும் நன்மைகளுக்கு புண்ணியம் என்று பெயர். இந்தப் பிறவி யில்  நாம்  நிறைய புண்ணியம் சேர்க்க வேண்டும்.அதற்கு நிறைய தான தர்மம் பண்ண வேண் டும்.கோவில்களுக்கு நல்லது செய்ய வேண்டும்......... இப்படி ஏகப்பட்ட லிஸ்ட் போட்டு வைத்திருப்பார்கள்.    நீங்கள் செய்யும் செயலின் நோக்கமே சுய நலத்தை அடிப்படையாக கொண்டது. எனக்கு அடுத்த பிறவியில் நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் செய்யும் எதுவு மே சுயநலத்தை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.   பலனை எதிர்பார்த்து செய்யும் எந்த செயலுமே தவறானதே.எந்த எதிர் பார்ப்பும் இல்லாது சுயநலன் பாராது பிறருக்கு செய்யும் உதவியே உங்கள் இயல்பினை மேம்படுத்த உதவும்.    இது செஞ்சா இப்படி நடக்கும்.அந்த கோவிலுக்கு இது பண்ணினா அப்படி  நடக்கும் என்று பலவிதமான கதைகள் நமக்கு சொல்லப் பட்டு இருக்கின்றன.    நீங்க யாருக்கு என்ன வேணுமானுலும் பண்ணுங்க. ஆனால் உங்களுக்கு எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும்.அது இந்த பிறவி யில் என்றாலும் சரி.இனி வரப் போகும் ஏழேழு பிறவி க்கும் சரி.எது நடக்க வேண்டு மோ அதுவே நடக்கும்.    நடந்து முடிந்ததை நம்மால் எப்படி மாற்ற முடியாதோ அப்படியே நடக்கப் போவதை யும் நம்மால் மாற்ற முடியாது.    நடந்ததும்,நடப்பதும்,நடக்கப் போவதுவும் அனைத்துமே அவனது ஆணையின் படியே நடக்கிறது.அதை மாற்ற நம்மால் இயலாது.    நம் வளர்ச்சிக்காக நம்மை நாம் சரிப் படுத்தி சீர் செய்வதற்காக சில அனுபவங்க ளை நமக்கு இறைவன் தருகிறான்.அந்த அனுபவங்களை அனுபவிப் பதன் மூலம் நம் தவறுகளை நாம் கண்டுகொண்டு நம்மை நேர்படுத்திக் கொள்ள வேண்டும்.அதுவே நம் பிறவியின் அடிப்படை நோக்கம்.     நல்லது கெட்டது என்று எதுவுமே இல்லை.நடப்பது அனைத்துமே முன்பே நிர்ண யிக்கப் பட்ட ஒன்றே. எல்லாம் நன்மைக்கே. நீங்கள் எப்படி திட்டங்கள் தீட்டி உங்கள் ராஜ தந்திரங்களை பயன் படுத்தி செயல் செய்தாலும் நடக்க கூடியது நடந்தே தீரும்.     கிரிக்கெட் மேட்ச் களில் பார்க்கலாம். ஈஸியா பிடிக்க வேண்டிய கேட்சை மிஸ் பண்ணி விடுவான். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.அத்தனை பேரும் அவனை திட்டி தீர்ப்பார்கள்.     மிஸ் பண்ணி யவனும் தன்னால் தான் நம் டீம் தோற்று விட்டது என்று ஃபீல் பண்ணி புலம்புவான். உண்மையில் அப்படி நடக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்க பட்ட ஒன்று அது. இவன் வெறும் கருவி அவ்வளவு தான்.    நடைபெறும் நன்மை தீமைகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்.காக்கா வராவிட்டாலும் விழ வேண்டிய நேரத்தில் காற்றடித்தே கூட பனம் பழம் விழுந்து விடும்.     எதுவும் நடக்க வேண்டிய வேளையில் நடந்தே தீரும். எனவே என்னால் தான் நடந்தது என்று பெருமை படவோ புலம்பவோ தேவையில்லை. எல்லாமே தானே நிகழ்கிறது.   சூரியன் சந்திரன் நம்மாலய வருது. மழையும் வெயிலும் யாராலே!.இயற்கை அதன் இயல்பு படி தானே செயல் படுகிறது. நம் வாழ்க்கையும் அப்படியே.   அப்படியானால் நான் எதுவுமே செய்வதில்லையா! .நான் நல்லது ஏதும் செய்யவில் லையா! என்னால் யாருக்கும் கெடுதல் ஏதும் நடப்பதில்லையா!.அப்படியானால் எனக்கு ஏன் இப்படி துன்பங்கள் நடைபெறுகிறது?என்று பலவிதமான கேள்விகள்.   இங்கு எதுவுமே உங்களால் நடைபெறுவதில்லை. நல்லது கெட்டது என்பது எல்லாம் நாம் பார்க்கும் விதம் தான்.நமது மனோநிலையை (attitude)பொறுத்ததே அனைத்தும்.   அப்படியானால் எனது பணி என்ன? நான் செய்யவேண்டியது தான் என்ன?என்கின்ற கேள்வி எழுகிறது.   உண்மையில்  நாம செய்யவேண்டியது எதுவுமே இல்லை.இங்கு நாம் எப்படி செயல் படுகிறோம் என்று நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.   நாம் இரு விதமான நிலைகளில் இயங்குகிறோம். ஒன்று நான் என்கின்ற ஈகோவில் இயங்குகிறோம்.     நான் என்கின்ற எண்ணத்தில் நாம் செய்கின்ற எந்த செயலும் சுயநலம் மிக்கதாக வே இருக்கும்.எனக்கு என்னுடைய என்கின்ற எண்ணமே சுயநலத்தை ஏற்படுத்தி விடும்.    அந்த நேரத்தில் நாம் செய்வது அனைத்துமே விருப்பு வெறுப்பு மிக்கதாகவே இருக்கும்.நமது செயலின் நோக்கம் நிச்சயம் லாபநோக்கம் கருத்தியதாகவே இருக்கும்.இது அறியாமை.    இந்த அறியாமையில் இருந்து விடுபட்டு அனைத்தும் இறைவனே. இறைவனின் அனுமதி இன்றி எதுவும் நடை பெற முடியாது என்பதை ஏற்றுக் கொண்டு இந்த கணத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்வதே நமது வேலை.   அப்படி செயல்படும் போது நான் என்பது மறைந்து விடும்.எதிர்பார்ப்பு ஏதும் இருக்காது.நம்மில் இறை தன்மை இருக்கும்.அப்போது எது நடந்தாலும் ஆனந்தமே. எந்த வித துன்பமும் இல்லை. இதுவே நம்மை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.நமது இயல்பு உயர்நிலைக்கு மாறத் தொடங்கும்.    நான் என்கின்ற நிலையில் இயங்கும் போது நாம் அறியாமையில் இருக்கிறோம் . இந்த அறியாமை நமது வளர்ச்சியை கெடுப்பதுடன் நம்மை மேலும் கீழ் நிலைக்கு கொண்டு சென்று விடும்.     நாம் பிறப்பதற்கு முன்பே நமக்கு எந்த விதமான வளர்ச்சி தேவை படுகிறது என்று நமக்கு உயர்நிலையில் இருப்பவர்களுடன் ஆலோசனை நடத்தி அந்த வளர்ச்சிக்கு தேவையான அனுபவங்கள் நமக்கு தரப் படுகின்றன.   அந்த அனுபவங்களை நாம் எப்படி எதிர் கொண்டு அதன் மூலம் நம்மை உயர்நிலை க்கு உயர்த்தப் போகிறோம் என்பது நம் கையிலேயே இருக்கிறது.    இந்த உலகம் நிச்சயம் உங்களின் கடந்த கால தவறுகளுக்கு  தண்டனை வழங்கும் சிறைச்சாலை அல்ல.   உங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் கல்விக் கூடமே இந்த உலகு. பள்ளியில் நன்கு படித்து புரிந்து கொண்டு தேர்வுகளில் நன்கு  தேர்வெழுதி அடுத்த நிலைக்கு செல்லலாம். சிலரோ பள்ளிக்கு சென்றால் படிப்பதே இல்லை.வாத்தியார் சரியில்லை. மெஸ்ஸில் சாப்பாடு சரியில்லை.கூட படிக்கும் மாணவன் சரியில்லை என்று ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட்.    இறுதி தேர்வில் காபி அடித்து வெற்றி பெற முயல்பவர்களும் உண்டு. மாட்டிக் கொண்டு வாழ்கையை தொலைப்பவர்களும் உண்டு.     எது சரி என்பது நமக்கே தெரியும். தெரிந்தே தவறு செய்பவர்களே அநேகம். பின்னர் தவறுகளை உணர்ந்து வருந்துவதில் என்ன பயன்.     நாமும் இந்த வாழ்க்கை என்கின்ற வாய்பை சிறந்த முறையில் உபயோகித்து நம்மை மேம்படுத்தும் வகையில் வாழ்ந்தால் சிறிது சிறிதாக நாமும் உயர் நிலையை எய்தலாம். நன்றி கா. கணேஷ். 🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋 முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்... இந்த நாள் இனிய நாளாகட்டும்ய் வாழ்க 🙌 வளமுடன்🎋🌴 *அன்பே🔥சிவம்*🌴🎋 🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
894 views
1 months ago
AI indicator
நாள் கூட நா ஏன் வேலைய விட்டுட்டு வெளியே டீ குடிக்க போனதில்ல சூப்பர் ப்ரோ உங்க jobஅ அவ்வளவு லவ் பண்றீங்களா ?எங்க வேல பாகிறீங்க டீ கடைல தான் தேநீர் வேலையில் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
749 views
1 months ago
ஒரு குட்டிக்கதை` :-- ♥அழைப்புமணி ஒலி கேட்டு, சிரித்த முகத்தோடு கதவைத் திறந்த வாணியை புன்னகைத்தபடி அழகாய் அணைத்துக் கொண்டான் அவள் கணவன் தினேஷ். ♥அவனின் கைப்பையை வாங்கியவள் முகம் கழுவிட்டு வாங்க காபி தரேன் என பையை மேசையில் வைக்க அவனின் பையில் இருந்து வந்த மல்லிகை மணம் அறை முழுக்க பரவியது. ♥இன்னைக்கும் ஏங்க பூ வாங்கிட்டு வந்தீங்க நேத்து வாங்கினதே இன்னும் ஃப்ரிட்ஜில இருக்கு என அவள் கேட்க.. ♥நீ தலை நிறைய பூ வச்சிக்கிட்டா மகாலட்சுமி மாதிரி இருப்பனு எத்தன தடவை சொல்லிருக்கேன். அதுக்கு தான் இவ்ளோ பூ என அவன் சாதரணமாக பதில் அளிக்க. சரிதாங்க என சிரித்தபடியே தலையை ஆட்டிவிட்டு தலை நிறைய பூவை வைத்து விட்டு அடுப்படிக்குள் சென்றாள். ♥பாலை சூடு செய்து கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அவன் தொந்தரவு செய்ய ஐயோ விடுங்க என தன்னை விடுவித்துக் கொண்டவள் செல்லமாய் அவனை முறைத்து விட்டு பாலை ஊற்றத் தொடங்கினாள்..... என எழுதிப் புள்ளி வைப்பதற்கும் டிங் டிங் என காலிங் பெல் சத்தம் கேட்பதற்கும் சரியாய் இருந்தது. ♥கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவள் எழுதிக் கொண்டிருந்த பேப்பர் பேனாவை கீழே வைத்துவிட்டு வேகமாய் சென்று கதவைத் திறக்க.. ♥ _உடனே வந்து கதவ திறக்க முடியாதா அப்படி என்னத்த செஞ்சிட்டு இருந்த_ என ஷூ வை கழட்டி எறிந்துவிட்டு அவள் கை நீட்டி பையை கேட்க அதை சட்டை செய்யாமல் பையை மேசை மேல் வீசிவிட்டு _காபி கொண்டு வா_ என்றான் அவள் கணவன். ♥இதோ ஐந்து நிமிசங்க என அவள் விரைந்து சென்று பாலை எடுப்பதற்காக ப்ரிட்ஜை திறக்க, _இது தான் வர நேரம்னு தெரியும்ல காபி போட்டு வச்சா என்ன வீட்டுக்கு வரவே எரிச்சலா இருக்கு_ எனக் கத்திவிட்டு ஒரு கையில் போனையும் மறுகையில் ரிமோட்டையும் எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தவன் இதுல குப்பை வேற என அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதிக்கொண்டிருந்த காதல் கதை தாங்கிய அந்தக் காகிதங்களை வீசி எறிந்தான்.. ♥காபியை அவனிடம் கொடுத்துவிட்டு கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அறைக்குள் சென்றவள்.. ♥வாணி அவனிடம் காபியை கொடுக்க ஆகா பிரமாதம் என சப்புக் கொட்டி குடித்தான் அவள் கணவன் என எழுதுவதற்கும்... காபியா _இது சீ நாய் கூட குடிக்காது_ என வெளி அறையில் அவள் கணவன் படாரென்று டம்ளரை வைத்ததற்கும் சரியாக இருந்தது. ♥விழியில் உருண்ட நீரைத் துடைத்துவிட்டு அடுத்த கற்பனை வரியை எழுத ஆரம்பித்தாள் வாணி. ~ ... 🌹🌹🌹🌹🌹🌹 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்