உற்சாக பானம்

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
544 views
5 months ago
நீயே பலவீனமாக்காதே... உன்னுள் உள்ள உயிர் ஆற்றலை இயக்கு... உன்னுள் புதைந்திருக்கும் திறமையைச் செயலாக்கு... இது வெல்பவர்களின் உலகம்... இது வெல்பவர்களுக்கான உலகம்... இங்கே தோற்றவர்களைக் கண்டு கொள்வதில்லை.இங்கே புலம்புவர்களை யாரும் மதிப்பதில்லை.இங்கே அழுபவர்களை ஆறுதல்படுத்துவதில்லை... உங்களுக்கு உதவிட எவரும் வரப்போவதில்லை... மனிதர்களை நம்பி நேரத்தை வீணாக்காதே... நீயே விழுந்தாய்... நீயே எழுந்திரு... நீயே தோற்றாய்... நீயே வெல்... நீயே அவமானப்பட்டாய்... நீயே மரியாதை அடை...! இங்கே வாழ்க்கையை வாழக் சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதுமில்லை... அவர்கள் வாழ்வதற்கே வழி தேடி அலைகிறார்கள்... நீ திடம் கொள்... தீர்க்கமாய் இரு... உனக்குள் இருக்கும் உன்னையே அறிந்து தெளிந்து செயலாக்கு... "வாழ்க்கை" உன் வசம்..! ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.... முயற்யில்லாத ஆசையாலும் பயனில்லை...!!! #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
597 views
6 months ago
*_வெற்றி வேண்டுமா? 'தள்ளிப்போடுதல்' என்ற வார்த்தையை விலக்குங்கள்!_* * 🌹🌹🌹இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கும் தகுதியும், திறமையும் இப்போது என்னிடம் இல்லை. என்னை நான் தயார்படுத்திக்கொள்ளாமல் உடனடியாக இந்த வேலையை ஆரம்பித்தால் நான் தோல்வியைத்தான் தழுவவேண்டியிருக்கும். முதலில் நான் என் செயல் திறமையை வளர்த்துக்கொள்ளப் போகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். அதற்குப் பிறகுதான் இந்தக் காரியத்தை ஆரம்பிக்கப்போகிறேன்' என்று காரியம் தொடங்குவதை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடாதீர்கள். சிலர் அளவுக்கு மீறி முன் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் சாதித்தது மிகவும் குறைவானதாகத்தான் இருக்கும். ஒருவன் சொந்தமாக வீடுகட்ட ஆசைப்படுகிறான். அவன் ஆசைப்படும் வீட்டைக்கட்டி முடிக்க அவனுக்கு ரூ. 3 இலட்சம் தேவை. அதைச் சம்பாதித்தவுடன்தான் நான் வீடு கட்ட ஆரம்பிக்கப் போகிறேன் என்று முடிவெடுப்பவர் களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்நாட்களிலேயே வீடே கட்டாதவர்களாகத்தான் உருவெடுப்பார்கள். அப்படி ஒருவன் 3 இலட்சம் சேமித்தாலும்கூட விலைவாசி உயர்வினால் அதே வீட்டைக்கட்ட அப்போது 6 இலட்சம் தேவைப்படும். அதற்கு மாறாக கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு வீட்டுமனை வாங்கியவர்கள் வீடு கட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்குச் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் நகை அடகு வைப்பது, சேமிப்பு நிதியிலிருந்து கடன் வாங்குவது போன்ற வழிகளில் கொஞ்சம் திரட்டி வீடுகட்டும் பணியை ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே திட்டமிட்டு ஒரு செயலை நினைத்துவிட்டால் தாமதிக்காமல் உடனே செய்யும் பழக்கம் உயர்வைத்தரும் என்பதில் ஐயமில்லை. ஒரு பெரிய காரியத்தை எப்படிச் சுலபமாக முடிப்பது என்பதைப் பற்றி ஹென்றி ஃபோர்ட் கீழ்க்கண்ட அறிவுரையை வழங்கியிருக்கிறார். நீங்கள் செய்ய விரும்பும் அந்த காரியத்தை நிறைய சிறிய சிறிய காரியங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின் ஒவ்வொரு நாளும் உங்களுடைய சௌகரியத்திற்குத் தகுந்த மாதிரி இரண்டு அல்லது மூன்று சிறிய காரியங்களைச் செய்து முடியுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் ஒருநாள் அந்தப் பெரிய காரியம் முடிந்துவிட்டிருப்பதைக் காணலாம். தள்ளிப்போடுதல்', 'தாமதம்' என்ற வார்த்தைகளை நமது அகராதியிலிருந்து கூடுமானவரை விலக்கவேண்டும். எதையும் உடனே செய்கின்ற பழக்கம் கொண்டவனையே அனைவரும் விரும்புவார்கள் அவனிடமே முக்கியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். வெற்றி பெற்றுச் சாதனை படைக்க எண்ணுகின்ற நீங்கள், எதையும் உடனே செய்யும் பழக்கத்தை உடனே ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 🌹🌹🌹 #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
632 views
6 months ago
மருத்துவக் குணங்கள்..!!?? சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தைத் தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு. #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#