தமிழின எதிரி RSS-பாஜக

Rationalist
894 views
1 months ago
“விருதுநகரில் டெக்ஸ்டைல் பார்க் – 1000 பேருக்கு வேலை!”ன்னு பாஜக இப்போது பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறது. கேக்க நல்லாதான் இருக்கு… ஆனா உண்மை என்ன? நன்றாக ஓடிக்கிட்டிருந்த பல டெக்ஸ்டைல் மில்களை மூடி, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நேரடியாக 18,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மண்ணில புதைத்த கும்பல் பாஜக. அந்த உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியாது என்ற திமிர்ல, இப்போ “1000 பேருக்கு வேலை”ன்னு பொய் விளம்பரம்! அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தை எடுத்துக்கோங்க. ஒரு காலத்தில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஜெயவிலாஸ் குழும மில்கள் கிட்டத்தட்ட எல்லாம் மூடப்பட்டுடுச்சு. பல டெக்ஸ்டைல் மில்கள் இன்று விற்பனைக்கே வைத்தாலும் வாங்க ஆள் இல்ல.அவ்வளவு மோசமான நிலை. இந்த மில்களை நம்பி வாழ்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று “நாளை என்ன செய்வது?”ன்னு திக்குத்தெரியாம நிக்கிறாங்க. இதெல்லாம் பற்றி ஒரு வார்த்தை பேசாத பாஜக, இப்போ “டெக்ஸ்டைல் பார்க் – வேலை வாய்ப்பு”ன்னு நாடகம் ஆடுது. வட இந்திய பணக்காரர்களுக்கும், மார்வாடி–குஜராத் சேட்டுகளுக்கும் பிரச்சனை வந்தா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என நாடு நாடாக ஓடி ஓடி ஒப்பந்தம் போடும் மோடி, ஆனா திருப்பூர், கோவை, விருதுநகர் மாதிரி இந்திய டெக்ஸ்டைல் துறையின் முதுகெலும்பான பகுதிகளுக்காக குறைந்த விலையில் நூல் கிடைக்க வழி செய்ய ஒரு நடவடிக்கையும் இல்லை! மாறாக, வங்கதேசத்திலிருந்து மிகக் குறைந்த விலையில் துணிகளை இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை நாசம் பண்ணினார் மோடி அவருக்கு நன்றாக தெரியும் வங்கதேசத்திலிருந்து மிக குறைந்த அளவில் ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்தால் இதனால் தமிழ்நாடு மிக மோசமாக பாதிப்படையும் என்று ஆனால் பாதிப்படையப் போவது தமிழர்கள் தானே என்று ஒப்பந்தம் போட்டார். அதோடு பருத்திக்கு வரி உயர்வு – இதுதான் மோடியின் “டெக்ஸ்டைல் கொலை” திட்டம். இதன் விளைவு என்ன? கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க 3000+ டெக்ஸ்டைல் மில்கள் மூடல். தமிழகத்திலேயே 800க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் மில்களுக்கு பூட்டு. 2 லட்சம் பேருக்கு நேரடியாகவே தொழில் இழப்பு. சமீப காலத்தில மட்டும் 300 மில்கள் மூடப்பட்டுவிட்டது. https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-300-textile-mills-shut-in-tamil-nadu-in-last-few-years-says-report/article70664034.ece இவ்வளவு பேருடைய வாழ்க்கையை சீரழித்து விட்டு, அதே விருதுநகர் மாவட்ட மக்களிடம் டெக்ஸ்டைல் பார்க் போடுவோம் – 1000 பேருக்கு வேலைன்னு சொல்றதுக்கு இது பொய்யா? இல்ல மக்களை முட்டாள்னு நினைக்கிற அகங்காரமா? “தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம்”ன்னு நினைக்கிற இந்த பாஜக திமிரை தமிழ்நாடு தான் அடக்கணும், அடக்கும். ஒருபக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிச்சிட்டு, மறுபக்கம் மத பிரச்சனையில மக்களை மூழ்கடிக்க முயற்சி பண்ணுற இந்த கும்பலை அரசியலா தோற்கடிக்கறதுதான் விருதுநகர் மக்களின் முதல் கடமை. வேலை கொடுத்தவங்க யார்? வேலை பறிச்சவங்க யார்? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா, இந்த “டெக்ஸ்டைல் பார்க்” நாடகம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலைன்னு புரியும். #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #✍️மே17 இயக்கக் குரல்
Rationalist
2.3K views
1 months ago
திருச்சியில் சீமான் நடத்திய மாநாட்டின் பெயர் 'மாற்றத்திற்கான மாநாடு'. என்ன மாற்றம் என்று பல பேர் குழம்பி இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை முற்றும் முழுதாக பிராமண கடப்பாரையை கவ்வி விட்டேன் என்கிற மாற்றத்தை அறிவிக்கும் மாநாடு தான் அது. ஏற்கனவே பெரியாரை இகழ்ந்து, பாரதியை தூக்கி பிடித்து, ஆர்எஸ்எஸ் புகழ் பாடி தான் ஒரு பிராமண அடி வருடி என்பதை நிரூபித்து விட்டார் என்றாலும், இந்த மாநாட்டின் வழியாக ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அறிவித்திருக்கிறார் உதாரணத்திற்கு இரண்டு செய்திகள். 1. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு நீதிக்கட்சி, காமராஜர் எம்ஜிஆர் இப்போதைய திமுக அரசு என காலை உணவு, மதிய உணவு கொடுத்து அனைவரையும் படிக்க வைத்தார்கள். ஆனால் இந்த பிராமண கடப்பாறை சீமான் அதை நிறுத்தி விடுவாராம். இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் இன் குரல் இல்லையா? 2. தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் பெரியாரோடு ஒப்பிட்டு சமூகத்தை இரண்டாக பிளக்கும் வேலையை செய்த சீமான். இப்போது அயோத்திதாசரா அம்பேத்கரா என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை இந்த மாநாட்டின் வழி செய்திருக்கிறார். நாம் ஆரம்பத்திலேயே சொன்னது தான் பெரியாரை சாதிய வட்டத்துக்குள் அடைக்கும் சீமான். இதோடு நிற்கப் போவதில்லை அடுத்து யாரெல்லாம் ஆதிக்கத்திற்கு எதிராக தத்துவங்களை பேசினார்களோ அவர்கள் மீது அவதூறு பரப்புவார் என்று அந்த வகையில் இப்போது அம்பேத்கர் அவர்களை அயோத்திதாசர் ரோடு ஒப்பிட்டு அயோத்திதாசர் தமிழர் அம்பேத்கர் தமிழர் இல்லை என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். அடுத்து மார்க்சை நோக்கி தான் இந்த சோம்பி சீமான் கூட்டம் வரும். சீமானின் நோக்கம் அனைவரையும் தமிழ் சமூகத்திலிருந்து அவர்களின் தத்துவத்தை நீக்கிவிட்டு பிராமண தத்துவத்தை தமிழ் மக்களின் மீது திணிக்கும் வேலைதான் இது. இதைத்தான் குருமூர்த்தியின் ஏற்பாட்டால் மிகத் தாராளமாக செலவு செய்து இந்த மாற்றத்திற்கான மாநாட்டில் செய்திருக்கிறார். ஆனால் இது எதைப் பற்றியும் தெரியாமல் விசில் அடிச்சான் குஞ்சுகளாகவும், தற்குறிகளாகவும் பார்த்தீர்களா எங்கள் மாநாட்டில் கொடி கம்பம் எவ்வளவு உயரத்தில் கட்டி இருக்கிறோம். மேடை அலங்காரத்தை பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டல் ஒன்று கூட தொலையவில்லை என்று தற்குறி தம்பிகள் புலங்காயிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். தம்பிகளே அன்னார்ந்து நீங்கள் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் உங்கள் சட்டப்பைக்குள் கையை விட்டு பணத்தை திருடும் திருடனை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே! இப்போது சொல்லுங்கள் விஜய்யின் ரசிகர்கள் தற்குறிகளா அல்லது நீங்களா? #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழின எதிரி RSS-பாஜக #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழ்நாடு தமிழருக்கே!