sithar sivavaakkiyar.

saravanan.
639 views
2 days ago
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 212...!* அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது மெள்ளவே மிணமிணவென்று விளம்புகிற்கு மூடர்காள் கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர். *பொருள் விளக்கம்:* ஆற்றில் குளிக்கும்போது கைகளில் ஆற்று நீரையள்ளி ஆற்றிலே விட்டு, உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டுக் குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்ல வாய்க்குள்ளேயே முணுமுணுவென்று மந்திரங்களைச் சொல்லும் மூடர்களே! ஏன் இந்தக் கள்ள வேடம்? மரணம் வந்தபோது கண்களை மூடிவிடுகிறீர்கள். இதனால் சாதித்ததேது? இவ்வாறு செய்யும் குருக்களே! இதன் தத்துவத்தை மெதுவாக விளக்கிக் கூறுங்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩
saravanan
635 views
12 days ago
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 211...!* ஒன்பதான வாசல்தா னொழியுநா ளிருக்கையில் ஒன்பதாம் ராமராம நாமமென்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோ யடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கி லாய்ந்தமைந் திருப்பதே. 211 *பொருள் விளக்கம்:* ஒன்பது வாசல் கொண்ட உடல் ஒரு நாள் அழியும் என்ற உண்மை உணர்ந்து எந்நேரமும் இராமநாமம் செபித்து அவனைச் சரண் அடையுங்கள். இராமநாமம் செபிக்காத வஞ்சகர்களின் நாவில் நோய் வரும். அப்பொழுதும் அவர்களால் இராமநாமம் செபிக்க இயலாது. இராமனை வணங்கும் அன்பர்களின் நாவில் சதா சர்வகாலமும் இராமநாமம் ஒலிக்கும். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪🔳🟪
saravanan
748 views
22 days ago
#sree sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 210...!* அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியோ தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. *பொருள் விளக்கம் :* உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? ஐம்பூதங்களும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧
saravanan
1.4K views
1 months ago
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 207...!* அங்கலிங்க பீடமு மசவைமூன் றெழுத்தினுஞ் சங்குசக் கரத்திலுஞ் சகல வானகத்தினும் பங்குகொண்ட யோகிகள் பரமவாச லஞ்சினும் சிங்கநாத ஓசையுஞ் சிவாயமல்ல தில்லையே. *பொருள் விளக்கம் :* நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் “அ, உ, ம்” என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲🤎🔲