nalaairam thiviya prabantham.

saravanan.
536 views
3 days ago
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:151...!* வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே. *விளக்க உரை:* ***- வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி, அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. சொற்றொடர் நிலைச்செய்யுள் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை. “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம், (நிவ வயகி, நிவ வதெவெத வ த) திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று, அடிவரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த, *🌹பாடல் என் :152 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧
saravanan
3.7K views
12 days ago
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:149...!* கண்ணைக் குளிரக் கலந்துஎங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழ லார்கள் எண்ணத்துள் என்றும் இருந்துதித் திக்கும் பெருமானே எங்க ளமுதே உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன் பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநா பாஇங்கே வாராய். *விளக்க உரை:* ***- ‘கண்ணைக் குளிரக் கலந்து’ என்கிறவித்தால் – சக்ஷு ப்ரீதி (தாரா மைத்ரீ) எனப்படுங் கண்கலவியைச் சொல்லுகிறதென்க. கண்ணை என்பதில், ஐகாரத்தை அசையாகக் கொண்டு, கடிகமழ் பூங்குழலார்கள கண்குளிர்ச்சி அடைய உன் உடம்பு முழுதும் பொருந்தப் பார்த்து (உன்னோடு கலக்கும் படிகளை யெண்ண, அவர்களுடைய அந்த) எண்ணத்தின்படியே எப்போதும் அவர்களுக்கு போக்யனாயிருக்கும் பெருமானே’ என்று உரைத்தலும் ஏற்கும். பண்ணைக்கிழிய = பண் – செவ்வை, அது குலையும்படி ஸந்திபந்தங்கள் சிதறும்படி. *🌹பாடல் என் :150 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨
saravanan
573 views
23 days ago
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:148...!* காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில் தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே. *விளக்க உரை:* ***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம். தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க. காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று. *🌹பாடல் என் : 149 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨
saravanan
589 views
1 months ago
*🙏நாலாயிர திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣 #nalaairam thiviya prabantham. 🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:146...!* என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டாகாண் என்னைநான் மண்ணுண்டே னாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே வன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே. *விளக்க உரை:* *** – கண்ணன் யசோதையை நோக்கி “தலைநிலாப்போதே உன் காதைப்பெருக்காதே விட்டிட்டேன் குற்றமேயன்றே” என்று நீ உன்னை வெறுத்துச் சொல்லுவது – நீ சொன்னதை நான் கேட்கவில்லையென்று என்மேலுள்ள குற்றத்தை நினைத்தன்றோ? என்ன அதற்கு யசோதை ‘பின்னை யார் குற்றம்?’ என்ன கண்ணன் ‘உன் மீதுங் குற்றமில்லையோ?’ என்ற யசோதை ‘நானுன்னை என்ன செய்தேன்?’ என்ன; கண்ணன் ‘நான் மண் திண்ணாதிருக்கையில் மண தின்றதாகப் பழியையேறிட்டு என்மேல் அன்புடையாள்போல என்னைப் பிடித்துக்கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதாவென்று பார்த்து அது இல்லாதிருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லியடித்து அவ்வளவோடு நில்லாமல் ‘பாருங்கோள் பெண்காள்! இவன் மண் திண்ணும்படியை’ என்று எல்லார்க்கும் நீ காட்டவில்லையோ’ என்ன யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் போதுபோகின்றது ஆச்ரிதருடைய ஆர்த்தியைத் தீர்க்குமவனே! உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்ன கண்ணன் ‘நீ என்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டா என்னைப் பிடித்தல் அடித்தல் செய்வதில்லையென்று உறுதியாக ஒரு வார்த்தை சொல்’ என்ன யசோதை ‘நான் திரியிடும்படி நீ இசைந்துவா பின்பு அங்ஙனமே ஸத்யம் பண்ணித்தருகிறேன்’ என்கிறாள். சொல்லவும் வேண்டா – நெஞ்சினால் நினைத்ததே சாலவழகிது இதனை வாய்கொண்டு வெளிப்படச் சொல்லவும் வேணுமோ? என்றவாறு. *🌹பாடல் என் : 147 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟨💚🟨💚🟨💚🟨💚🟨💚🟨🟨💚🟨💚🟨💚🟨💚🟨💚🟨