விநாயகர் தரிசனம்

திருநீற்றுச் சுவடு
676 views
1 months ago
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #விநாயகர் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # தோல்வியா? 12 ராசிகளும் விநாயகருக்கு செய்யவேண்டிய முக்கிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் ஒருவருக்கு தடை, தாமதம் இருக்கிறது என்றால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு சரணடைய கூடிய தெய்வமாக விநாயகப் பெருமானாக இருக்கிறார். அப்படியாக 12 ராசிகளும் விநாயகர் பெருமானுக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம். மேஷம்: இவர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். ரிஷபம்: இவர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும். மிதுனம்: இவர்கள் விநாயகருக்கு எலுமிச்சை பழம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் தடைகள் யாவும் விலகும். கடகம்: இவர்கள் விநாயருக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நல்ல லாபம் உண்டாகும். சிம்மம்: விநாயகருக்கு இவர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்கின்ற பொழுது நீண்ட காலமாக சந்தித்த காரிய தடை விலகும். கன்னி : இவர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும். துலாம்: விநாயகருக்கு சாத்துக்குடி அல்லது நார்த்தம் பழத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டு. விருச்சிகம்: விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது இன்பமான வாழ்க்கை கிடைக்கும். தனுசு: விநாயகருக்கு மஞ்சள் பொடி அல்லது தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகரம்: விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது பொருட்சேர்ப்பை உண்டாக்கும். கும்பம்: இவர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யும்பொழுது சகல நன்மைகள் உண்டாகும். மீனம்: இவர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி மற்றும் இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும்.
திருநீற்றுச் சுவடு
1.5K views
1 months ago
#🕉️கணபதி போற்றி #🙏 கணபதி போற்றி #🙏🪔 ஓம் கணபதி போற்றி 🪔🙏 #விநாயகர் #🙏விநாயக போற்றி AS RECEIVED* பலன் தரும் பரிகாரங்கள் பச்சைக்கற்பூர தீபப் பரிகாரம் புதிதாக நல்லெண்ணெய் பாட்டில் வாங்கி அதில் பச்சைக்கற்பூரத்தை போட்டு இந்த எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற தெய்வீக அதிர்வலைகள் ஏற்பட்டு இலட்சுமி வாசம் உண்டாகும். மகாலட்சுமியை தியானித்து 27 முறை "ஸ்ரீம்" பீஜ மந்திரம் சொல்லவும். குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை தாமரைதண்டு திரியில் ஏற்ற இலட்சுமி கடாட்சம் பெருகும் சோம்பு பரிகாரம் கைப்பிடி சோம்பை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இதை கையில் வைத்து நீங்கள் அடையவேண்டிய விருப்பங்களை வாய்விட்டு சொல்லி் சொல்லியதை ஒரு பேப்பரில் எழுதி்ச் சுருட்டி அந்த சோம்பினுள் வைத்து கண்ணாடி பாட்டிலை ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள் அவ்வப்போது எடுத்து மூடியை திறந்து விருப்பங்களை சொல்லிவிட்டு் மறுபடியும் வைத்துவிடுங்கள்...180 நாட்களில் உங்கள் எண்ணம் நிறைவேறும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் நிலுவைப் பணம் வர தாந்த்ரீக பரிகாரம் செவ்வாய்க்கிழமை ஒரு வெள்ளை காகிதத்தில் சிவப்பு மையால் "ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்" என்று 108 முறை எழுதவும். அதை பணம் தொடர்பான ஆவணங்களுடன் வைத்துக் கொள்ளவும். பூட்டு பரிகாரம் வெளியில் சொல்லமுடியாத கடுமையான பிரச்சனைகள் தீர தீர்க்க முடியாமல் திண்டாட வைக்கும் பிரச்சனைகள் தீர நிறைவேறாத நியாயமான விருப்பங்கள் நிறைவேற... வெள்ளிக்கிழமை மாலை கடைக்கு சென்று ஒரு பூட்டை வாங்க வேண்டும் அப்படி வாங்கும் போது கவரைக்கூட பிரிக்காமல் வீட்டுக்கு எடுத்து வந்து இரவு தூங்கும் முன் கவரை பிரித்து பூட்டை தலைக்கடியில் வைத்து தூங்கி மறுநாள் அருகாமையில் உள்ள கோயிலுக்கு பூட்டினை எடுத்து சென்று தானமாக கொடுத்து விடவும் கோயிலில் அந்த பூட்டினை மூடி திறந்து பயன்படுத்த ஆரம்பிக்கும் போது உங்கள் பிரச்சனைகள் படிபடியாக விலகுவதை கண்கூடாக அறியலாம் அகல் விளக்குகள் ஏற்றும் பரிகாரம் வீட்டில் வடக்கு நோக்கி இரு அகல்விளக்குகள் ஏற்றுவதால் செல்வம் பெருகும் மகிழ்ச்சி நிலைக்கும். வீட்டில் மேற்கு நோக்கி இரண்டு அகல் தீபங்கள் ஏற்ற உறவினர் ஒற்றுமை ஏற்படும் கடன் தொல்லை விலகும். வீட்டில் கிழக்கு நோக்கி இரண்டு அகல் தீபங்கள் ஏற்றினால் உங்களை தொடர்ந்து வந்த துன்பங்கள் காணாமல் போகும் சமூகத்தில் மதிப்பும் கெளரவம் உண்டாகும்